செய்திகள் :

'பயோகேஸ் உரம், மாடித்தோட்டம், ஆர்கானிக் முறை' - காய்கறிகளை வீட்டிலேயே வளர்க்கும் ரகுல் பிரீத் சிங்

post image

பாலிவுட் நடிகைகளில் அதிகமானோர் தங்களது வீடுகளில் மாடித்தோட்டம் வைத்திருக்கின்றனர். நடிகை ரேகா தனது வீட்டு வளாகத்தில் தோட்டம் வைத்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் தனது வீட்டில் வைத்திருக்கும் மாடித்தோட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது. தனது நீண்ட நாளைய காதலன் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொண்டுள்ள ரகுல் பிரீத் சிங், மும்பை பாந்த்ராவில் உள்ள பூஜா காசா என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இக்கட்டிடம் முழுக்க நடிகை ரகுல் பிரீத் சிங் குடும்பத்திற்குச் சொந்தமானது ஆகும்.

இந்தக் கட்டிடத்தில்தான் தற்போது தற்காலிகமாக நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்தோடு வாடகைக்கு வசித்து வருகிறார். ரகுல் பிரீத் சிங் இயற்கையோடு இணைந்து வாழ்வதற்காக மாடியில் மிகப்பெரிய அளவில் தோட்டம் அமைத்து இருக்கிறார்.

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்

அதோடு மாடியில் நீச்சல் குளமும் அமைத்துள்ளார். மாடிப்பகுதிக்குச் சென்றாலே ரிசார்ட்டிற்குச் சென்றது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது.

ரகுல் பிரீத் சிங்கும், அவரது கணவரும் இந்த மாடியில் ஆர்கானிக் தோட்டம் அமைத்திருக்கின்றனர். இந்தத் தோட்டத்தில், தக்காளி, பூசணி, பாகற்காய், மிளகாய் மற்றும் பல்வேறு இலை காய்கறிகளைப் பயிரிடுகின்றனர். இதற்கு சந்தையில் விற்கப்படும் ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழலுக்கு உகந்த உரங்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த உரம் பயோகேஸ் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

அதாவது பயோகேஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கழிவுப் பொருள் இந்த உரத்தை உருவாக்கப் பயன்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் வீட்டிலேயே ஆர்கானிக் காய்கறிகளை வளர்க்க அத்துறையில் தொடர்புடைய நிபுணர் ஒருவரின் ஆலோசனையைப் பெற்று இதனை அமைத்திருக்கின்றனர்.

இந்த மாடித்தோட்டத்தில் இந்த பாலிவுட் தம்பதி தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து பேசுகின்றனர். அவர்களுக்கு விருந்து கொடுத்து மகிழ்கின்றனர். அதோடு நீச்சல் குளத்திற்கு அருகில் அமர்ந்து உணவு உண்பதற்கும் வசதி செய்துள்ளனர்.

"விவாகரத்து பற்றி நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை" - வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் பழைய பேட்டி

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக நீண்ட நாட்களாக செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.இது தொடர்பாக இரு தரப்பினரும் கருத்து தெரிவிக்க... மேலும் பார்க்க

``என் கணவருக்கு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக கூறுவார்கள், ஆனால்'' - பாலிவுட் நடிகர் கோவிந்தா மனைவி

பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கும், அவரது மனைவி சுனிதா அஹுஜாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதனை இருவரும் மறுத்து வருகின்றனர். கோவிந்தா... மேலும் பார்க்க

`காருடன் கடலில் சென்ற பிரபலங்கள்' கடற்கரை பண்ணை வீட்டில் 60வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஷாருக்

பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு இன்று 60வது பிறந்தநாள். இப்பிறந்தநாளை ஷாருக் கான் தனது பண்ணை வீட்டில் வைத்து கொண்டாட முடிவு செய்தார். இதற்காக தனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் ஷாருக் கான் அழைப்பு வ... மேலும் பார்க்க

Shah Rukh Khan: அம்மாவுக்கு மருந்து வாங்க காசில்லாத வறுமை; 'பாலிவுட் சாம்ராஜ்ய நாயகன்' உருவான கதை

எந்தத் துறையாக இருந்தாலும் அந்தத் துறையில் உச்சம் தொட்டவர்களின் பின்னணி கதை பெரும் பாடமாக இருக்கும். குறிப்பாக திரையுலகில் மாபெரும் இடத்தைப் பிடித்த ரஜினி முதல் விஜய் சேதுபதி வரை பலரும் பெரும் துயரத்த... மேலும் பார்க்க

Abhishek Bachchan: பணம் கொடுத்தா விருது வாங்கினேன்?- விளக்கம் அளித்த அபிஷேக் பச்சன்

அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் 'I Want To Talk' என்ற படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விருதை வென்றார். ஆனால் அந்த விருதை அவர் திறமையால் வெல்லவில்லை பணம் கொடுத்தும், பிஆர் வேலைகள் செய்தும்தான் வா... மேலும் பார்க்க

"அந்தப் பதிவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது" - விவசாயப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட கங்கனா ரனாவத்

வேளாண் திருத்த மசோதாவை எதிர்த்து 2020-21-ம் ஆண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்து எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகையும், பா.ஜ.க எம்.பி-யுமான கங்க... மேலும் பார்க்க