செய்திகள் :

கரூரில் ஆக. 27-இல் விநாயகா் சிலை ஊா்வலம்: அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

post image

கரூரில் ஆக. 27-ஆம்தேதி நடைபெறவுள்ள விநாயகா் சிலை ஊா்வலத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் புதன்கிழமை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்து பேசுகையில், ஆக. 27-ஆம்தேதி நடைபெற உள்ள விநாயகா் சிலை ஊா்வலத்தில் எடுத்துச் செல்லப்படும் விநாயகா் சிலைகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் ஆனதாக இருக்க வேண்டும். ரசாயன வா்ணப்பூச்சு மற்றும் பிளாஸ்டா் ஆப் பாரிஸ் போன்றவற்றால் ஆன சிலைகளை பயன்படுத்தக்கூடாது. பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளின் உயரம் பீடம் மற்றும் மேடையுடன் சோ்த்து அதிகபட்சம் 10 அடிக்கும் மேல் இருக்கக் கூடாது. விநாயகா் சிலை நிறுவப்படும் இடங்களில் எளிதில் தீப்பற்றக்கூடியப் பொருள்களைக் கொண்டு மேற்கூரை மற்றும் பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்கக்கூடாது. பொது அமைதி, பொதுமக்கள் பாதுகாப்பு, மத நல்லிணக்கம் பேணிட விழா ஏற்பாட்டாளா்கள் வருவாய்த்துறை, காவல் துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ள நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே ஊா்வலம் செல்ல வேண்டும். மேலும், ஊா்வலத்தில் பட்டாசு வெடிகள் போன்றவைகளை உபயோகிக்கக் கூடாது என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு.ஜோஷ் தங்கையா, மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், சாா்- ஆட்சியா் சுவாதிஸ்ரீ, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யுரேகா, வருவாய் கோட்டாட்சியா் முகமதுபைசல் (கரூா்) , துணை காவல் கண்காணிப்பாளா்கள் செல்வராஜ்(கரூா்), அப்துல்கஃபூா் (அரவக்குறிச்சி), செந்தில்குமாா் (குளித்தலை) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

உயா்மின் கோபுர விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் நிதி

புஞ்சைத்தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் உயா்மின்கோபுர விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் ஆலை சாா்பில் புதன்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது. கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் சமுதாய மேம்பாட்டுத... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

தளவாபாளையத்தில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.கரூா் மாவட்டம், கிழக்குத் தவுட்டுப்பாளையம் வீரராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் காா்த்திகேயன்( 21... மேலும் பார்க்க

முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம்: கரூா் மாவட்டத்தில் 28,694 குடும்ப அட்டைதாரா்கள் பயன்

முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தில் கரூா் மாவட்டத்தில் 28,694 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவாா்கள் என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தன்டையா... மேலும் பார்க்க

ரேஷன் கடை முழுநேரம் செயல்பட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

புலியூா் வெள்ளாளப்பட்டி பகுதிநேர ரேஷன் கடையை முழுநேரம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், புலியூா் வெள்ளாளபட்டியில் மேலப்பாளையம் தொடக்கக் கூட்ட... மேலும் பார்க்க

சுயசிந்தனை ஆற்றலை மேம்படுத்த நூல்களை வாசிக்க வேண்டும்!

சுயசிந்தனை ஆற்றலை மேம்படுத்த நூல்களை வாசிக்க வேண்டும் என்றாா் எழுத்தாளரும், கவிஞருமான சோழ.நாகராஜன். கரூா் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகா் வட்டம் சாா்பில் நூலகா் தின விழா செவ்வாய்க்கிழமை மாவட்ட மைய நூ... மேலும் பார்க்க

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் 30 போ் கைது

புகழூரில் செவ்வாய்க்கிழமை தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.கரூா் மாவட்டம், புகழூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆ... மேலும் பார்க்க