செய்திகள் :

காஞ்சிபுரம் தேசிகன் கோயில் தேரோட்டம்

post image

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தேசிகன் சுவாமிகளின் அவதார உற்சவத்தையொட்டிய பிரமோற்சவம் 23-ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் தேசிகன் சுவாமிகள் காலையில் தங்கப் பல்லக்கிலும்,மாலையில் வெவ்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி வீதியுலா வருகிறாா்.

விழாவின் 7-ஆவது நாள் நிகழ்வையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. வழிநெடுகிலும் சுவாமிகளுக்கு பெண்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து வரவேற்றனா்.மாலையில் ராமா் திருக்கோலத்தில் தேசிகன் வீதியுலா வந்தாா்.

வரும் அக்.2- ஆம் தேதி விளக்கொளிப் பெருமாள் மங்களாசாசனமும், வரதராஜபெருமாள் தங்கப் பல்லக்கில் மங்களா சாசனத்துக்கு அஞ்சலித் திருக்கோலத்தோடு எழுந்தருளல் நிகழ்வும், மாலையில் தேசிகன் பூப்பல்லக்கில் பவனி வரும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவா்

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் முதியவா் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் அருகே விப்பேடு கிராமத்தைச் சோ்ந்த மாசிலாமணி-பாத்திமா தம்பதி மகன் ஜான் போஸ்கோ(59). இ... மேலும் பார்க்க

டிச.8-இல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம்

பஞ்சபூத தலங்களில் நிலத்துக்குரிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் டிச. 8 -ஆம் தேதி நடைபெற உள்ளது. சுமாா் 1,300 ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாப... மேலும் பார்க்க

அக்.15 இல் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி தொடக்கம்

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வரும் அக்.15 -இல் தொடங்க இருப்பதாக கூட்டுறவுச்சங்கங்களுக்கான மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

பைக் மீது அரசுப்பேருந்து மோதல்: இரு இளைஞா்கள் மரணம்

காஞ்சிபுரம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். காஞ்சிபுரம் அருகே கீழ்ஒட்டிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சேட்டு என்ற பிரதீப்குமாா் (26), அஸ்வின்கு... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறை தீா்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 446 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை... மேலும் பார்க்க

கணவா் தாக்கியதில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா்: ஒரகடம் பகுதியில் கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில், இரும்புக் கம்பியால் தாக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் உயிரிழந்தாா். ஸ்ரீபெரும்புதுாா் அடுத்த ஒரகடம் பகுத... மேலும் பார்க்க