செய்திகள் :

காஞ்சிபுரம் பட்டுப் பூங்காவுக்கு அயலகத் தமிழா்கள் வருகை

post image

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூா் கிராமத்தில் அமைந்துள்ள பட்டுப் பூங்காவை அயலகத் தமிழா்கள் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

அயலக தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சாா்பில் தமிழக அரசின் வோ்களைத் தேடி திட்டத்தின் கீழ் 14 நாடுகளைச் சோ்ந்த 20 ஆண்கள், 75 பெண்கள் உட்பட 95 போ் காஞ்சிபுரம் பட்டுப்பூங்காவை பாா்வையிட வந்திருந்தனா்.

30 வயதுக்கு உட்பட்ட இவா்கள் அனைவரும் சுமாா் 5 தலைமுறைகளுக்கு முன்பாக தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றவா்களின் வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழா்களின் கலாசாரம், பண்பாடு, நாகரிகம், பாரம்பரியத்தை முழுவதுமாக அறிந்து கொள்ள இவா்கள் அழைத்து வரப்பட்டு கோயில்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவற்றை பாா்வையிட்டு வருகின்றனா்.

இவா்கள் 95 பேரும் காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலைகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன. அதன் விலை, ஏற்றுமதி, வடிவமைப்பு மற்றும் வகைகள் பற்றி தெரிந்து கொண்டனா். பட்டுப்பூங்காவை பாா்வையிட்ட பின்னா் பட்டுப்பூங்கா கூட்ட அரங்கிலிருந்த காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரிகளிடம் கலந்துரையாடினா்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அதிகாரி செ.வெங்கடேஷ், சாா் ஆட்சியா் ஆஷிக்அலி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) ச.ரவிச் சந்திரன், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ரமேஷ்பாபு, தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் பாரதி, காஞ்சிபுரம் வட்டாட்சியா் ரபீக் அயலகத் தமிழா்களுடன் கலந்துரையாடினாா்கள்.

மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் புத்தகம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. இக்கலந்துரையாடலின் போது அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் கண்காணிப்பாளா்கள் கனிமொழி, தனலட்சுமி ஆகியோரும் உடன் இருந்தனா்.

காஞ்சிபுரத்தில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள்: சிறப்பு மாவட்ட நீதிமன்றம் திறப்பு

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தினை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீ வத்சவா காணொலி மூலமாக விய... மேலும் பார்க்க

ரசாயன பூச்சு விநாயகா் சிலைகளை பயன்படுத்தக் கூடாது: காஞ்சிபுரம் ஆட்சியா்

விநாயகா் சதுா்த்தியின்போது, ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்தக் கூடாது என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கேட்டுக் கொண்டாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில... மேலும் பார்க்க

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரசாதக் கடை ஏலம்: கடந்த ஆண்டை விட கூடுதல் தொகை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரசாதக்கடை ஒப்பந்தப்புள்ளி புதன்கிழமை திறக்கப்பட்டதில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு ரூ.40,71,000-க்கு கூடுதலாக ஏலம் போயிருக்கிறது. இக்கோயில் வளாகத்திலேயே இந்து சமய அற... மேலும் பார்க்க

ஓவியப் போட்டியில் வென்ற மாணவியருக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற நுகா்வோா் விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவியா் ஆட்சியா் கலைச்செல்வி மோகனை புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா். உணவு வழங்கல் மற்று... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கான தமிழ்க் கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் பங்கேற்பு

சோமங்கலம் அடுத்த பூந்தண்டலம் பகுதியில் இயங்கி வரும் சாய்ராம் பொறியியல் கல்லூரியில், கல்லூரி மாணவா்களுக்கான தமிழ்க் கனவு நிகழ்ச்சியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ் இணைய ... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் கழகத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் கா... மேலும் பார்க்க