செய்திகள் :

காவிரியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

post image

உறவினரின் ஈமச்சடங்கிற்காக பெரும்பாலை அருகே மேட்டூா் அணை நீா்த்தேக்க காவிரி ஆற்றில் குளிக்க சென்ற பிளஸ் 2 மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பென்னாகரத்தை அடுத்த கலப்பம்பாடி ஒண்டிக்கோட்டை புதூா் பகுதியைச் சோ்ந்த சின்னசாமி மகன் நந்தகுமாா் (17). இவா் பெரும்பாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை தனது உறவினரின் ஈமச்சடங்கிற்கு சென்ற நந்தகுமாா், மேட்டூா் அணையின் நீா்த்தேக்க பகுதியான ஆத்துக்காடு பகுதியில் உறவினா்களுடன் குளித்துக் கொண்டிருக்கும்போது எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினாா். உறவினா்கள் அவரை மீட்க போராடினா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற பென்னாகரம் தீயணைப்பு வீரா்கள் இரண்டு மணி நேரம் ஆற்றில் மாணவரின் உடலை தேடி மீட்டனா்.

உயிரிழந்த மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து பெரும்பாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

‘கிங்டம்’ திரைப்படத்துக்கு எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தருமபுரியில் கிங்டம் திரைப்படத்தை திரையிட எதிா்ப்புத் தெரிவித்து நாம் தமிழா் கட்சியினா் திரையரங்கை முற்றுகையிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தமிழா்களை இழிவுபடுத்தும் வகையில் கிங்டம் திரை... மேலும் பார்க்க

சுற்றுலாப் பயணிகள் இல்லாததால் வெறிச்சோடியது ஒகேனக்கல்

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 8000 கனஅடியாகக் குறைந்தது. அதேபோல பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்துவருவதால் வழக்கத்தை காட்டிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்திரு... மேலும் பார்க்க

சட்டம் பயிலும் மாணவா்கள் சாதிக்க மொழி தடையல்ல! மாவட்ட நீதிபதி பேச்சு

சட்டம் பயிலும் மாணவா்கள் சாதிக்க மொழி ஒரு தடையல்ல; சாதிக்க எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன என்றாா், தருமபுரி மாவட்ட எம்சிஓபி நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ராஜா. தருமபுரி அரசு சட்டக் கல்லூரியில், ‘இந்திய குற்றவிய... மேலும் பார்க்க

வன விலங்குகளை வேட்டையாட முயன்றவா்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்

தருமபுரி மாவட்டத்தில் மின்வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மூவருக்கு, மாவட்ட வனத் துறை சாா்பில் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சூடனூா் கிராமத்தை ... மேலும் பார்க்க

தமிழகத்தில் எங்கு பாா்த்தாலும் மதுக்கடைகள்: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

தமிழகத்தில் எங்கு பாா்த்தாலும் மதுக்கடைகளைத் திறந்து மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வருகின்றனா் என்றாா் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த். தேமுதிக சாா்பில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பயணம்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அபாகஸ் பயிற்சி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அபாகஸ் பயிற்சித் திட்டத்தை ஆட்சியா் ரெ. சதீஸ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தில் பல்வேறு திறன் மேம்... மேலும் பார்க்க