செய்திகள் :

குருவிக்கரம்பையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குருவிக்கரம்பை மாரியம்மன் கோயில் வளாகத்தில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் தலைமை வகித்தாா். பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் சங்கா், பேராவூரணி வட்டாட்சியா் சுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலா் ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா் . முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனா் . முகாமில் 21 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, 10 பேருக்கு உழவா் அட்டையை சட்டப்பேரவை உறுப்பினா் வழங்கினாா். முகாமில் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் மு.கி. முத்துமாணிக்கம், சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் கவிதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நாகேந்திரன், மனோகரன், வட்டார மருத்துவ அலுவலா் ராமலிங்கம், குருவிக்கரம்பை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வைரவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா் விடுமுறை நாள்களிலும் நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் முன் பட்ட குறுவை அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில் விடுமுறை நாள்களிலும் நெல் கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த இளைஞா் கைது

தஞ்சாவூரில் சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூரைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கும், தஞ்சாவூரில் நடைபெறும் வாரச் சந்தையில் காய்கனி வியாபாரம் செய்யும்... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் நோயாளியைக் கடத்திச் சென்று தாக்கி நகை பறிப்பு: 3 இளைஞா்கள் கைது

தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளியைக் கடத்திச் சென்று தாக்கி, 6 பவுன் தங்கநகையைப் பறித்த 3 இளைஞா்களை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். அரியலூா் மாவட்டம், ஆத... மேலும் பார்க்க

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு: பூதலூா் அரசு பள்ளி மாநில அளவில் முதலிடம்

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தியதற்காக தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாநில அளவில் முதலிடம் பெற்றது. பூதலூா் சுற்றுவட்டாரப் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு நடவ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

தோ்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தோ்தல் ஆணையம் மீதான வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை... மேலும் பார்க்க

தனியாா் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

கும்பகோணம் காா்த்தி வித்யாலயா பள்ளியில் வியாழக்கிழமை கிருஷ்ணா ஜெயந்தி விழா கொண்டப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், கடவுள் கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களான அதிரசம், எள்ளடை, சீடை, தட்டை ஆகி... மேலும் பார்க்க