செய்திகள் :

கூட்டமாக வந்த கதண்டு வண்டுகள் கடித்ததில் தம்பதியினர் உயிரிழப்பு - தென்காசியில் சோகம்

post image

தென்காசியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் சீவநல்லூர் என்ற கிராமத்தில் நேற்று ஐயப்பன் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கோயிலில் ஐயப்பனை வழிபட்டு விட்டு, அன்னதானத்தில் பங்கேற்றனர். பின் வீட்டிற்கு கிளம்பும் போது அப்பகுதியில் உள்ள தென்னை மரத்தில் கூடுகட்டி இருந்த கதண்டு வண்டுகள் கூட்டமாக வந்த பக்தர்களை தாக்கியதில் 5 பேர் பாதிக்கப்பட்டனர். வலி தாங்க முடியாமல் துடித்து அவர்கள் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

உயிரிழந்த தம்பதி

இதில், லட்சுமணன் அவரது மனைவி மகராசி ஆகியோர் இன்று காலை அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும், அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம், சாந்தி மற்றும் சண்முக பாரதி ஆகிய மூவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் சண்முக பாரதி உடல் நிலை மோசமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இன்று காலை தீயணைப்பு படையினர் தென்னை மரத்தில் தண்ணீர் பாய்ச்சி விஷ வண்டுகளை அழித்தனர். விஷ வண்டு கடித்து கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Salmon: ஒரு மீனின் பயணத்தில் இத்தனை எதிரிகளா? இது சாலமன்களின் கதை!

உலகில் எத்தனையோ வகை மீன்கள் இருந்தாலும், சாலமனுக்கு தனிச்சிறப்பு உண்டு. நன்னீரில் பிறந்து, கடல் நீரில் வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்ய மறுபடியும் தான் பிறந்த நன்னீர் நிலைக்கே திரும்பி வருபவை சாலமன். இது... மேலும் பார்க்க

Tiger Cub: எரிவாயு தொட்டிக்குள் மாட்டிக்கொண்ட 6 மாத புலிக் குட்டி; மீட்கப்பட்ட பின்னணி என்ன?

கர்நாடக மாநிலம் பிடகளு கிராமத்தில் நவீன் என்பவருக்குச் சொந்தமான உயிரி எரிவாயு நிலையம் இருக்கிறது. அந்த வளாகத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் எரிவாயு தொட்டிக்குள்ளிருந்து நேற்று திடீரென வித்தியாசமா... மேலும் பார்க்க

"King Cobra-வின் உண்மையான நீளம் என்ன?" - வனத்துறை அதிகாரி வெளியிட்ட வீடியோ வைரல்!

ஒரு இளைஞர் தனது வெறும் கைகளால் ராட்சத கிங் கோப்ரா பாம்பைத் தைரியமாகப் பிடித்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பக... மேலும் பார்க்க

Kaziranga: தாயை பிரிந்து சாலையில் பரிதவித்த குட்டி யானை; கூட்டத்துடன் சேர்க்க வனத்துறை செய்த மேஜிக்!

பாட்டி யானை என்றழைக்கப்படும் மூத்த பெண் யானைகள் மூலமே ஒவ்வொரு யானை குடும்பமும் வழிநடத்தப்படுவதுடன், மத யானைகள் நீங்கலாக குட்டிகளுடன் மொத்த குடும்பத்தையும் பாட்டி யானைகளே வலசை அழைத்துச் சென்று பாதுகாப்... மேலும் பார்க்க

Birds: அழிவின் விளிம்பில் 500 பறவை இனங்கள்; ஆராய்ச்சியில் அதிர்ச்சி முடிவுகள்; காரணம் என்ன?

காலநிலை மாற்றம் மற்றும் வாழ்விட இழப்பு போன்ற காரணங்களால் அடுத்த நூற்றாண்டுக்குள் 500-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அழிவின் விளிம்பில் தள்ளப்படும் என்று இங்கிலாந்து நாட்டின் ரீடிங் பல்கலைக்கழக (Universi... மேலும் பார்க்க

மலப்புரம்: 53 நாள் தேடல், கூண்டுக்குள் சிக்கிய ஆக்ரோஷ புலி; சுட்டுக்கொல்ல போராடும் மக்கள் ஏன்?

கேரள மாநிலத்தில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் மாவட்டங்களின் பட்டியலில் மலப்புரமும் இடம்பெற்றிருக்கிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சிப்‌ பணிகளால் வனவிலங்குகளின் வாழிட... மேலும் பார்க்க