செய்திகள் :

கோவையில் ஓ.பன்னீர்செல்வம் - அண்ணாமலை சந்திப்பு; பின்னணி என்ன?

post image

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் களம் பரபரக்க தொடங்கிவிட்டது. அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

டிசம்பர் 15-ம் தேதிக்குள் முக்கிய முடிவு எடுக்க போவதாக பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருந்தார்.

அங்கு அவர் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அமித்ஷாவுடன் தமிழ்நாடு அரசியல் குறித்து பேசியதாக ஓபிஎஸ் கூறினார். பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைய போகிறார் என்றும் தகவல் வெளியானது.

பன்னீர்செல்வத்தின் டெல்லி விசிட்டுக்கு அடுத்த நாளே, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று அமித்ஷா உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழுவின் கோவை மாநகர செயலாளர் மோகன்ராஜ் இல்ல விழா நேற்று நடைபெற்றது.

மோகன்ராஜ் இல்ல விழாவில் ஓ.பன்னீர்செல்வம், அண்ணாமலை
மோகன்ராஜ் இல்ல விழாவில் ஓ.பன்னீர்செல்வம், அண்ணாமலை

இதில் அதிமுக மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதே விழாவில் அண்ணாமலையும் கலந்து கொண்டார். அப்போது இருவரும் சிறிது நேரம் உரையாடினார்கள்.

மோகன்ராஜ் இல்ல விழாவில் அண்ணாமலை
மோகன்ராஜ் இல்ல விழாவில் அண்ணாமலை

இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு குறித்து அண்ணாமலை தன் எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பதிவு போட்டுள்ளார். அதில், 'முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்ததில் மகிழ்ச்சி.' என்று கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் உடனிருந்தார். அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனும் கோவையில் உள்ள நிலையில், இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ரூ.10200000000 `ஓராண்டு பட்ஜெட்டே போடலாம்; திமுக ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணுவது உறுதி" - எடப்பாடி

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைக் கவனித்து வரும் திமுக மூத்த அமைச்சர் கே.என். நேரு, தனது துறையில் ரூ. 1,020 கோடி வரையில் ஊழல் செய்திருப்பதாகவும், வழக்குப் பதிவு செய்யவும் தமிழக தலைம... மேலும் பார்க்க

"அன்புமணிக்கும், பாமக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உறுதியாகிவிட்டது" - எம்.எல்.ஏ அருள்

சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, "ஒரு சில பொறுப்பாளர்கள் கட்சியை திருட பொய... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் வரவிருக்கும் 'டொனால்ட் ட்ரம்ப் சாலை' - ரேவந்த் ரெட்டி முடிவுக்கு பாஜக எதிர்ப்பு!

'தெலங்கானா ரைசிங் குளோபல் உச்சி மாநாட்டிற்கு' (Telangana Rising Global Summit) முன்னதாக, உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் நோக்கில், அந்த மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தில் உள்ள ஒரு முக்கியச் சாலைக... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை உடைக்க சதி - கொந்தளிக்கும் கு.பாரதி

அம்பத்தூர் மண்டலத்தில் தூய்மைப் பணியாளர்களின் சம்பள விவகாரத்தில் ஊழல் நடப்பதாக பாஜகவின் மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனிடம் புகார் கொடுத்திருந்தார்.கராத்தே திய... மேலும் பார்க்க

TVK : கட்டையை போட்ட ரங்கசாமி; சங்கடத்தில் விஜய்! - புதுச்சேரி விசிட் பின்னணி என்ன?

தவெக தலைவர் விஜய் நாளை புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தை நடத்தவிருக்கிறார். கட்சி ஆரம்பித்த பிறகு விஜய் முதல் முறையாக புதுச்சேரிக்கு செல்கிறார். ஏற்கனவே டிசம்பர் 5 ஆம் தேதி அங்கே கூட்டம் நடத்துவதாக இருந்... மேலும் பார்க்க

US: ``உங்கள் மனைவி உஷாவை இந்தியாவுக்கு அனுப்புங்கள்'' - ஜேடி வான்ஸ் மீது கடும் விமர்சனம் ஏன்?

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் (JD Vance) “அதிகப்படியான குடியேற்றம் (Mass Migration) என்பது அமெரிக்கக் கனவைத் திருடுவது” என்று தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.`இந்தக் கருத்து முரண... மேலும் பார்க்க