Suriya: `ரசிகர்களிடம் கொடுத்த வாக்கு' 2026-ல் சூர்யாவின் டார்க்கெட் இதுதான்
கோவையில் ஓ.பன்னீர்செல்வம் - அண்ணாமலை சந்திப்பு; பின்னணி என்ன?
2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் களம் பரபரக்க தொடங்கிவிட்டது. அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

டிசம்பர் 15-ம் தேதிக்குள் முக்கிய முடிவு எடுக்க போவதாக பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருந்தார்.
அங்கு அவர் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அமித்ஷாவுடன் தமிழ்நாடு அரசியல் குறித்து பேசியதாக ஓபிஎஸ் கூறினார். பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைய போகிறார் என்றும் தகவல் வெளியானது.
பன்னீர்செல்வத்தின் டெல்லி விசிட்டுக்கு அடுத்த நாளே, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று அமித்ஷா உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழுவின் கோவை மாநகர செயலாளர் மோகன்ராஜ் இல்ல விழா நேற்று நடைபெற்றது.

இதில் அதிமுக மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதே விழாவில் அண்ணாமலையும் கலந்து கொண்டார். அப்போது இருவரும் சிறிது நேரம் உரையாடினார்கள்.

இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு குறித்து அண்ணாமலை தன் எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பதிவு போட்டுள்ளார். அதில், 'முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்ததில் மகிழ்ச்சி.' என்று கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் உடனிருந்தார். அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனும் கோவையில் உள்ள நிலையில், இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.














