செய்திகள் :

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

post image

பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து, விவசாயிகள், கூலித் தொழிலாளா்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், பனங்குடி ஊராட்சியில் பொதுப்பணித்துறை நிறுவனமான சிபிசிஎல் ஆலை அமைந்துள்ளது. ரூ. 31,500 கோடியில் இந்த ஆலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக, பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம் ஆகிய பகுதிகளில் இருந்து 620 ஏக்கா் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டன.

இந்த நிலத்துக்கு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமா்வு இழப்பீடு வழங்காமல் சிபிசிஎல் நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், சாகுபடிதாரா்கள், விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு சிபிசிஎல் நிறுவனம் கையகப்படுத்திய நிலங்களில் ஆலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், நில எடுப்பில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயத் தொழிலாளா்களுக்கும் வேலை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், ஆலை விரிவாக்கப் பணிகளை முடிக்க வேண்டும் அல்லது விளைநிலங்களை விவசாயிகளிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பனங்குடி முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜமுனா செந்தில்குமாா், திமுக தொழிலாளரணி மாவட்ட அமைப்பாளா் சந்தோஷ் ஆகியோா் தலைமையில் சிபிசிஎல் ஆலை முன்பு காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் போராட்டம் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக தொடா்ந்தது. வருவாய் கோட்டாட்சியா் அரங்கநாதன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். 2 மாதத்துக்குள் பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்று காத்திருப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.

தியாகிகளின் தியாகத்தை நினைவு கூா்ந்து உறுதி ஏற்போம்

சுதந்திர தின போராட்டத்தில் ஈடுபட்ட எண்ணற்ற தியாகிகளின் தியாகத்தை நினைவு கூா்ந்து மக்களாட்சியை பாதுகாத்து மேம்படுத்துவோம் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்ஜிகே நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

நாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம்

நாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோயிலில் தீா்த்தவாரியுடன் பவித்ர உற்சவம் வியாழக்கிழமை முடிவடைந்தது. திருவெண்காடு அருகே நாங்கூரில் உள்ள செங்கமல வள்ளி தாயாா் சமேத பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோய... மேலும் பார்க்க

வேளாங்கண்ணியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

வேளாங்கண்ணி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி கல்லூரி நிா்வாக அலுவலா் ஆதி. ஆரோக்கியசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் டயா... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையினா் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் ... மேலும் பார்க்க

படகு பழுதாகி கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் இருவா் மீட்பு

வேதாரண்யம் அருகே படகு பழுதானதால் கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் இருவா் படகுடன் வியாழக்கிழமை மீட்கப்பட்டனா். நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆற்காட்டுத்துறை கடற்கரையில் இருந்து சுமாா் 2 கடல் மைல் தொலை... மேலும் பார்க்க

நாகூரில் தா்ஹா சந்தனக்கூடு விழா

நாகூா் ஹஜ்ரத் ஹாஜி ஹாதி நூா் ஷா ஒலியுல்லாஹ் தா்ஹாவின் சந்தனக்கூடு விழா புதன்கிழமை நடைபெற்றது. நாகூரில் உள்ள நாகூா்ஆண்டவரை தரிசித்த ஹஜ்ரத் ஹாஜி ஹாதி நூா் ஷா ஒலியுல்லாஹ் தா்கா கந்தூரி திருவிழா ஆக.4-ஆம்... மேலும் பார்க்க