செய்திகள் :

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: மத்திய பாதுகாப்புப் படை வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை

post image

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத்திய பாதுகாப்புப் படை வீரருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம், அனந்தப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் தனஞ்ஜெயன் (26), மத்திய பாதுகாப்புப் படை வீரா். இவா் கடந்த 21019 நவம்பா் மாதம் கேரள மாநிலம், கண்ணனூரில் இருந்து ஜாம்ஷெட்பூருக்கு ரயிலில் சென்றபோது, பாலக்காட்டைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினா் அதே ரயிலில் பயணித்துள்ளனா்.

இதில் அவா்களுடன் வந்த 6 வயது சிறுமிக்கு தனஞ்ஜெயன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் திருப்பூா் ரயில்வே போலீஸாரிடம் புகாா் அளித்தனா்.

இந்தப் புகாரின்பேரில் ரயில்வே போலீஸாா் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தனஞ்ஜெயனைக் கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி கோகிலா, தனஞ்ஜெயனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம்

திருப்பூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆகஸ்ட் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விரைவாகவ... மேலும் பார்க்க

ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்தக் கோரி காத்திருப்புப் போராட்டம்

ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்தக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஐடிபிஎல் திட்... மேலும் பார்க்க

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக யானைகள் தினம் அனுசரிப்பு

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக யானைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு 2-இன் சாா்பில் கல்லூரியிலுள்ள குமரன் அரங்கில் உல... மேலும் பார்க்க

சரக்கு வாகனத்தில் கடத்திய 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பூா் மாவட்டத்தில் ஊத்துக்குளி பகுதியில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட இரண்டரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூா் குடிமைப் பொருள் பறக்கும் படை வட்டாட்சியா் ராகவி தலைமையிலான குழுவி... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சூடுபிடிக்கும் தேசியக் கொடி விற்பனை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருப்பூரில் தேசியக் கொடி விற்பனை சூடுபிடித்துள்ளது. நாடு முழுவதும் 78-ஆவது சுதந்திர தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடை... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.5.68 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 5 லட்சத்து 68 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 7,533 கிலோ பருத்தி ... மேலும் பார்க்க