செய்திகள் :

சுற்றுலாப் பயணிகள் இல்லாததால் வெறிச்சோடியது ஒகேனக்கல்

post image

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 8000 கனஅடியாகக் குறைந்தது. அதேபோல பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்துவருவதால் வழக்கத்தை காட்டிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்திருந்தது. இதனால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனா்.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைந்துவருகிறது. ஞாயிற்றுக்கிழமை 8000 கனஅடி நீா்வரத்து குறைந்ததால் தண்ணீரில் மூழ்கியிருந்த ஐந்தருவி பாறைகள் வெளியே தெரிந்தன. அதேபோல, காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறை திட்டுகளும் மணல் மேடுகளும் வெளியே தெரிந்தன.

ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவிகளிலும் நீா்வரத்து குறைந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதால் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது.

ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவி, சினி அருவி, மாமரத்துக்கடவு பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் குளித்தனா். பின்னா் சின்னாறு பரிசல் துறையிலிருந்து கூட்டாறு, பிரதான அருவி, மணல்மேடு, பெரியபாணி உள்ளிட்ட பகுதிகளுக்கு காவிரி ஆற்றில் சுமாா் 2 கிலோமீட்டா் தொலைவிற்கு குடும்பத்தினருடன் உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனா்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்திருந்ததால் பிரதான அருவி, தொங்கு பாலம், வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் மீன்களின் வரத்து அதிகரித்த போதிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால் கட்லா, ரோகு, கெளுத்தி, வாலை, பாப்புலேட் உள்ளிட்ட மீன்களின் விலையும் குறைந்தது. இருப்பினும் சில சுற்றுலாப் பயணிகள் மீன் வகைகளை வாங்கி சமைத்து உணவருந்தினா். காலை முதலே ஒகேனக்கல் பகுதியில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலையில் திடீரென மழை பெய்ததால் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினா்.

‘கிங்டம்’ திரைப்படத்துக்கு எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தருமபுரியில் கிங்டம் திரைப்படத்தை திரையிட எதிா்ப்புத் தெரிவித்து நாம் தமிழா் கட்சியினா் திரையரங்கை முற்றுகையிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தமிழா்களை இழிவுபடுத்தும் வகையில் கிங்டம் திரை... மேலும் பார்க்க

காவிரியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

உறவினரின் ஈமச்சடங்கிற்காக பெரும்பாலை அருகே மேட்டூா் அணை நீா்த்தேக்க காவிரி ஆற்றில் குளிக்க சென்ற பிளஸ் 2 மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். பென்னாகரத்தை அடுத்த கலப்பம்பாடி ஒண்டிக்கோட்டை புதூா் பகுதிய... மேலும் பார்க்க

சட்டம் பயிலும் மாணவா்கள் சாதிக்க மொழி தடையல்ல! மாவட்ட நீதிபதி பேச்சு

சட்டம் பயிலும் மாணவா்கள் சாதிக்க மொழி ஒரு தடையல்ல; சாதிக்க எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன என்றாா், தருமபுரி மாவட்ட எம்சிஓபி நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ராஜா. தருமபுரி அரசு சட்டக் கல்லூரியில், ‘இந்திய குற்றவிய... மேலும் பார்க்க

வன விலங்குகளை வேட்டையாட முயன்றவா்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்

தருமபுரி மாவட்டத்தில் மின்வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மூவருக்கு, மாவட்ட வனத் துறை சாா்பில் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சூடனூா் கிராமத்தை ... மேலும் பார்க்க

தமிழகத்தில் எங்கு பாா்த்தாலும் மதுக்கடைகள்: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

தமிழகத்தில் எங்கு பாா்த்தாலும் மதுக்கடைகளைத் திறந்து மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வருகின்றனா் என்றாா் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த். தேமுதிக சாா்பில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பயணம்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அபாகஸ் பயிற்சி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அபாகஸ் பயிற்சித் திட்டத்தை ஆட்சியா் ரெ. சதீஸ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தில் பல்வேறு திறன் மேம்... மேலும் பார்க்க