செய்திகள் :

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிப்பு ரத்து: அமைச்சரின் மேல்முறையீடு நிராகரிப்பு

post image

நமது நிருபர்

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தன்னை சிறப்பு நீதிமன்றம் விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிராக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்கிழமை ஏற்க மறுத்தது. இதையடுத்து, அந்த மனுவை அமைச்சர் தரப்பு திரும்பப் பெற்றுக் கொண்டது.

தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இதற்கு முன்பு தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராகவும் (1996-2001) சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சராகவும் (2006-2011) பதவி வகித்தார்.

அப்போது தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சுமார் ரூ.21.22 லட்சம் (1996-2001) மற்றும் ரூ.3 கோடி (2006-2011) அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி மற்றும் மகன் மீதும் தமிழக ஊழல் தடுப்புத் துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் இருந்து எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அவரது மனைவி, மகன் ஆகியோரை கடலூர் சிறப்பு நீதிமன்றம் 2016-ஆம் ஆண்டு விடுவித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழகத்தில் பின்னர் அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஊழல் தடுப்புத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன் கடலூர் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "இந்த வழக்கில் மனுதாரரின் பின்புலம், அவர் வகித்த மற்றும் வகிக்கும் பதவிகள் உள்ளிட்டவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்,' எனக் குறிப்பிட்டு, அவரது மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்யப்போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து, மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெறுவதாக அமைச்சர் பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்தது.

பாமக உள்கட்சி அதிகார மோதல் விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் தரப்பு புகார்

நமது நிருபர்பாமக உள்கட்சி அதிகார மோதல் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தரப்பு செவ்வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 208 அரசுப் பள்ளிகள் மூடல் ஏன்? தொடக்கக் கல்வித் துறை விளக்கம்

தமிழகத்தில் நிகழாண்டு 208 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணங்கள் குறித்து தொடக்கக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் நிகழாண்டு மாணவா் சோ்க்கை இல்லாத 208 அரசுப் பள்ளிக... மேலும் பார்க்க

வங்கக் கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: அடுத்த 2 நாள்களில் மேலும் வலுபெற வாய்ப்பு

வங்கக் கடலில் புதன்கிழமை (ஆக. 13) உருவாகவுள்ள காற்றழுத்தத் தாழ்வு அடுத்த 2 நாள்களில் மேலும் வலுபெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் இந்த வாரம் நடைபெறாது: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசு விடுமுறை என்பதால் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் வரும் சனிக்கிழமை (ஆக.16) நடைபெறாது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். தாயுமானவா் திட்டத்தின் கீழ் சைதாப்பேட்டை மசூத... மேலும் பார்க்க

208 அரசு பள்ளிகள் மூடல்: அன்புமணி குற்றச்சாட்டு

தமிழகத்தில் 208 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் க... மேலும் பார்க்க

இன்று திமுக மாவட்ட செயலா்கள் கூட்டம்

திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் புதன்கிழமை (ஆக.13) நடைபெறவுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப... மேலும் பார்க்க