செய்திகள் :

தஞ்சை மாவட்டம், விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில்: சாபங்கள் தீர்க்கும் பிருஹத் சனீஸ்வரர் சந்நிதி!

post image

சுவாமி அட்சயபுரீஸ்வரர் என்று அருளும் தலங்கள் பல நம் தமிழகத்தில் உள்ளன. இப்படிப்பட்ட தலங்களில் வழிபட்டால் நம்மிடம் இருக்கும் தனம் தான்யம் ஆகியன பன்மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை.

வாருங்கள் சுவாமி அட்சயபுரீஸ்வரராய் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பக்தர்களுக்கு அருளும் தலம் ஒன்றைக் குறித்து அறிந்துகொள்வோம்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகில் உள்ள விளங்குளம். இங்குதான் ஈசன் அட்சயபுரீஸ்வரர் என்கிற திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். ஆண்டுக்கு ஒருமுறை இத்தலம் சென்று வழிபட்டால் அந்த ஆண்டு முழுவதும் செல்வவளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்கே அம்பிகை ஸ்ரீஅபிவிருத்தி நாயகி என்கிற திருப்பெயரோடு அருள்பாலிக்கிறார். இருவருமே இக, பர லோகத்துக்குமான அனைத்துச் செல்வங்களையும் அருளுபவர்கள். மேலும் இத்தல விசேஷங்களில் ஒன்று ஆதி பிருஹத் சனீஸ்வரர் சந்நிதி கொண்டிருப்பது.

விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில்
விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில்

முதலாம் மாறவர்ம பராக்கிரம பாண்டியன், இத்தலத்தை வழிபட்டு பெரும் செல்வம் அடைந்தான் என்கிறது தல வரலாறு. அதனால், இந்தக் கோயிலுக்கு நிலங்களையும் அவற்றுக்கு வரிவிலக்கும் அளித்துள்ளார், அந்த மன்னர்.

ஒருமுறை, யமதர்மன் கொடுத்த சாபத்தால் சனிபகவான் தனக்கு ஏற்பட்ட தோஷங்களைத் தணிக்க, விளா மரங்கள் கொண்ட இந்த வனப்பகுதிக்கு வந்தார். சுரைக்குடுக்கையில் யாசகம் பெற்று, அவற்றை உடல் குறைபாடுகள் கொண்டவருக்கு தானம் அளித்துவந்தார் சனி பகவான்.

ஒருநாள் விளாமரத்தின் வேரால் கால் இடற, ஒரு பள்ளத்தில் விழுந்தார். அப்போது அங்கு ஊற்று ஒன்று எழும்ப, அதனால் சனிபகவான் சாப விமோசனம் பெற்று உடல் குறைபாடுகள் நீங்கப் பெற்றார்.

அந்த ஊற்று ‘பூச ஞான வாவி’ என்றாகியது. அந்தத் தலமும் ஈஸ்வர கிருபையால் விளங்குளம் என்றானதாகச் சொல்கிறது தல புராணம். சனி பகவான் ஊற்றில் விழுந்த நாள் அட்சய திருதியை நாள் என்கிறது புராணம்.

சாப விமோசனம் அளித்த ஈசன், ‘மந்தா, ஜேஷ்டா எனும் இருவரைத் திருமணம் செய்துகொண்டு, தம்பதி சமேதராக பொங்கு சனீஸ்வரராக இங்கேயே காட்சி தருவாய்’ என உத்தரவிட்டார். அதன்படியே சனீஸ்வர பகவான், பொங்கு சனியாக செல்வவளம் அருளும் தெய்வமாகக் திருக்காட்சி தருகிறார் என்பது விசேஷம்.

குபேர கணபதி, செல்வமுருகர், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, துர்கை, நாகர், நர்த்தன கணபதி, மகாலட்சுமி ஆகியோர் சந்நிதிகளும் இங்குள்ளன.

விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில்
விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில்

ஈசனுக்கு சந்தனக் காப்பில் மாதுளை முத்துக்கள் பதித்து அலங்காரங்கள் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆதி சனீஸ்வரருக்குப் புனுகு கலந்த சந்தனக் காப்பு சாத்தி, எள், அரிசி, கோதுமை, பாதாம்பருப்பு, குங்குமப்பூ மற்றும் நவதானியங்களைப் பதித்து அலங்கரிப்பார்கள். அந்நாளில் இருவரையும் தரிசித்து வணங்க குடும்பத்தில் தரித்திரம் ஒழிந்து செல்வம் சேரும். தீராதக் கடன் பிரச்னைகள் தீர்ந்து நலமும் வளமும் பெறுவர்.

ஆதி பிருஹத் சனீஸ்வரரின் நட்சத்திரம் பூசம். திருதியை, சனிப்பெயர்ச்சி நாள், பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர நாள்கள் மற்றும் சனிக்கிழமைகளில் ஆதி பிருஹத் சனீஸ்வரருக்குச் சந்தனக் காப்பு செய்து, எள் சாதம், எள் உருண்டை, எள் தட்டை, எள் முறுக்கு ஆகியவை நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு வழங்கினால், சனி பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

எத்தனை சம்பாதித்தாலும் சேர்க்கவே முடியவில்லை என்று வருந்துபவர்களுக்கு நிச்சயம் விரையச் செலவுகள் குறைந்து சேமிக்கும் நிலை உருவாகும். இங்கு சனி பகவானுக்குச் செய்யப்படும் நைவேத்தியம் காக்கைகளுக்கு அளிக்கப்படுகிறது.

ஒருவேளை, காக்கைகள் அந்த உணவை எடுக்காவிட்டால்... மறுநாள் வந்து காக்கைகளுக்கு மீண்டும் உணவிடும் வழக்கமும் இங்கு உள்ளது. பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய பரிகாரக் கோயில் இது.

சனி பகவானால் உருவான பூச ஞான வாவி தீர்த்தத்தில் நீராடி, பழைய ஆடையை விட்டுவிட்டு, புத்தாடை அணிந்து சனி பகவானை நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபட்டால், தோஷ வக்கிரப் பார்வையிலிருந்து விடுபடலாம்.

சனி பகவான் தம்பதி சமேதராகக் காட்சி தரும் தலம் என்பதால், இங்கு வந்து வணங்கினால், திருமணத் தடைகளும் தோஷங்களும் விலகி, மங்கல காரியங்கள் யாவும் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை.

விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில்
விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில்

உடல் மந்தமும் குறைபாடும் கொண்ட சனி பகவான் இங்கு வந்து ஈசனை வழிபட்டு நலம் கொண்டதால், உடல் செயல்பாட்டில் குறையுள்ளவர்கள், உடல் உறுப்புகளில் குறைபாடு கொண்டவர்கள் இங்கு வந்து அட்சயபுரீஸ்வரரை வணங்க குறைகள் குறைந்து நிறைகள் வளரும் என்பதும் நம்பிக்கை.

அட்சயம் என்றால் வளர்வது. இங்கு வந்து ஈசனையும் அபிவிருத்தி நாயகியையும் வணங்க, எல்லா நன்மைகளும் வளரும் என்பது நம்பிக்கை.

பொருள் படைத்தவருக்கே இவ்வுலகம் என்பது யதார்த்தமான உண்மை. விரும்பியவற்றை அடையச் செல்வம் அவசியம். அது நேர்மையாகவும் நிலைத்த வண்ணமும் நம்மைச் சேர, இந்த அட்சய திருதியை நாள் ஆசி வழங்கட்டும்.

மயிலாடுதுறை மாவட்டம் தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் கோயில்: தலைமுறைகள் செழிக்க அருளும் ஈசன்!

பெருமாள் என்றதும் நம் அனைவரின் நினைவிற்கும் வருவது சங்கு சக்கரமே. அதிலும் பெருமாள் வைத்திருக்கும் சங்குக்குப் பாஞ்சசன்யம் என்பது பெயர். அந்த அற்புதமான சங்கை பெருமாள் ஈசனை வழிபட்டுப் பெற்றதலம் ஒன்று உண... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டம் திருப்பேணுப் பெருந்துறை மோனமுருகன்... பேச்சுத் திறன் சாவல் உடையவர்களுக்கான தலம்!

கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. சில தலங்கள் சென்று வழிபட்டால் சொந்த வீடு கிடைக்கும் என்பார்கள். சில தலங்கள் திருமணகூடிவர... சில தலங்கள் கடன் பிரச்னை தீர... சில ஆரோக்கியம் உண்டாக எனப் பல்... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டம் காங்கயம்பாளையம், நட்டாற்றீஸ்வரர் கோயில்: அகத்தியர் பிரதிஷ்டை செய்த அருள் தரும் ஈசன்

அகத்தியர் வழிபட்ட கோயில்கள் பல ஆயிரம் உள்ளன. அங்குள்ள ஈசனுக்குப் பெரும்பாலும் அகத்தீஸ்வரர் என்பதுதான் திருநாமம். அப்படி அகத்தியர் வழிபட்ட அற்புத மகிமை உடைய ஒரு கோயில்தான் ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்... மேலும் பார்க்க

திருவாரூர் மாவட்டம், அன்னியூர் அக்னீஸ்வரர் திருக்கோயில்: வெயில் கால நோய்களில் இருந்து காக்கும் ஈசன்!

கோடைக்காலத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட வேனல்கட்டி, அம்மை, கண் நோய்கள், சிறுநீர்க் கடுப்பு, சிறுநீர்த் தொற்று, அக்கி, விஷ ஜுரங்கள் எனப் பல நோய்களும் பரவத் தொடங்கும். இதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள மரு... மேலும் பார்க்க

சந்தான பிராப்தி தரும் சந்தனக்காப்பு... திருத்தலைச் சங்காடு கோயில் வழிபாடு!

கடலிலிருந்து கிடைக்கிற அனைத்துப் பொருள்களுமே திருமாலின் சாநித்தியம் நிறைந்த புனித வஸ்துக்கள் என்பது நமது சமயவியல் நம்பிக்கை. அலைமகளாகிய மகாலட்சுமியுடன் தோன்றிய சங்கம், காமதேனு, கற்பகவிருட்சம், அமிர்தக... மேலும் பார்க்க

திருச்சி மாவட்டம், ராட்சாண்டார் திருமலை விரையாச்சிலைநாதர் கோயில்: அநாவசிய செலவுகள் அகற்றும் ஈசன்!

ஈசன் சுயம்புவாகக் கோயில்கொண்ட தலங்கள் அனைத்துமே மகத்துவம் வாய்ந்தவை. அப்படி ஒருதலம்தான் ராட்சாண்டார் திருமலை. திருச்சியில் இருந்து 19 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத் தலம். குளித்தலையில் இருந்து தென்கிழக்... மேலும் பார்க்க