செய்திகள் :

`தீர்ப்பு சாதகமா வரணும்' - நீதிபதியின் இருக்கையில்`வெள்ளை கடுகு' தூவி பில்லிசூனியம் வைத்த பெண்

post image

சிவில் வழக்கு ஒன்றில் சாதகமான தீர்ப்பு கிடைக்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன், கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூர் நீதிமன்றத்தில் நீதிபதியின் மேடை, மேஜை மற்றும் தலைமை அதிகாரி அமரும் நாற்காலிக்கு அருகில் வெள்ளை எள் விதைகளைத் தூவி பில்லிசூனியம் வைத்த குற்றச்சாட்டின் பேரில், 65 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஞ்சுளா என்ற அந்த பெண் நீதிமன்றத்தின் முதல் கூடுதல் மூத்த சிவில் நீதிபதி மற்றும் நீதிமன்றத்தின் டயஸ் நாற்காலி மற்றும் மேஜையின் மீது மந்திரித்த வெள்ளை கடுகு விதைகளைத் தூவினார்.

நீதிபதியின் நாற்காலி மற்றும் மேசையைச் சுற்றி வெள்ளைக் கடுகு விதைகள் சிதறிக் கிடப்பதைக் கவனித்த நீதிமன்ற ஊழியர்கள், இது வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல் எனச் சந்தேகித்து, அப்பகுதிக்குள் நுழைந்தவர் யார் என்பதைக் கண்டறிய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் மஞ்சுளா நீதிமன்ற அறைக்குள் நுழைந்து இக்காரியத்தை செய்திருந்தது கண்காணிப்பு கேமரா மூலம் தெரிய வந்தது. இதையடுத்து அப்பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

அப்பெண்ணிடம் விசாரித்தபோது விசாரணைக்கு வரவிருக்கும் தனது நிலத் தகராறு சிவில் வழக்கில், நீதிபதியின் முடிவை மாற்றி தனக்கு சாதகமான தீர்ப்பைப் பெறலாம் என்ற மூடநம்பிக்கையின் காரணமாக அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதாக போலீஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். நீதிமன்றத்தின் சிசிடிவி (CCTV) கேமராக்களில் பதிவான இந்த அசாதாரண செயல் தொடர்பாக பில்லி சூனியம் தடுப்பு மற்றும் ஒழிப்புச் சட்டத்தின்' கீழ் மஞ்சுளா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நீதிமன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நேத்ரா அளித்த புகாரில், வழக்குத் தொடர்புடையவர்கள் அமரும் பகுதியில் இருந்த அந்தப் பெண், விசாரணை தொடங்குவதற்குச் சற்று முன்பு நீதிபதியின் மேஜை அருகே சென்று விதைகளைத் தூவிவிட்டு, அமைதியாக நீதிமன்ற அறையை விட்டு வெளியேறுவது கண்காணிப்பு கேமரா பதிவில் காணப்பட்டது. நீதித்துறை நடவடிக்கைகளைத் தங்கள் விருப்பப்படி மாற்றியமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்காக இச்சட்டம் பயன்படுத்தப்பட்டது ஒரு அரிதான நிகழ்வாகும்.

அமெரிக்காவை உலுக்கிய லேசி பீட்டர்சன் கொலை வழக்கு: தீர்ப்பை கேள்விக்குள்ளாக்கும் புதிய ஆவணப்படம்!

அமெரிக்காவின் நீதித்துறை வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய லேசி பீட்டர்சன் கொலை வழக்கில், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு புதிய புயல் வீசத் தொடங்கியுள்ளது. தனது கர்ப்பிணி மனைவியைக் கொன்றதாகக் குற்... மேலும் பார்க்க

'வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி' - ஓய்வூதியத் தொகையை எடுக்க சென்ற 82 வயது முதியவர் அதிர்ச்சி!

வங்கிகளில் சில நேரம் சாப்ட்வேர் பிரச்னை காரணமாக சிலரது வங்கிக்கணக்கில் அதிக பணம் இருப்பதாக கணக்கு காட்டும். இது போன்று பல முறை நடந்திருக்கிறது. பீகாரில் 82 வயது முதியவர் வங்கிக்கணக்கில் ரூ.759 கோடி இர... மேலும் பார்க்க

`மட்டன் போடுவதாக சொல்லிவிட்டு சிக்கன் போட்டுவிட்டார்கள்'- பீகார் திருமணத்தில் வன்முறை; 12 பேர் காயம்

திருமண வீட்டில் சாப்பாடு சரியில்லை என்றால் விருந்தினர்கள் டென்ஷாகிவிடுவது வழக்கம். அவர்களை சமாதானப்படுத்துவது திருமண வீட்டுக்காரர்களுக்கு பெரிய சவாலாக மாறிவிடும். பீகாரில் திருமண வீட்டில் மட்டன்(ஆட்டு... மேலும் பார்க்க

15 நாள்களில் 31 கோடி லிட்டர் தண்ணீர் சேமிப்பு... சத்தமில்லாமல் சாதித்த சத்தீஸ்கர் கிராம மக்கள்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கிராம மக்கள் ஒன்றிணைந்து, வெறும் 15 நாள்களுக்குள் சுமார் 31 கோடி லிட்டர் மழைநீரைச் சேமித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளனர்.சத்தீஸ்கர் மாநிலத்தின் மகாசமுந்த் (Mahasamund) மா... மேலும் பார்க்க

மே வங்கம்: `திரிணாமுல் தலைவர்கள்மீது முட்டை வீச வேண்டுமென்பது அரசு உத்தரவு'- பாஜக கவுன்சிலர் சர்ச்சை

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்த பிறகு அக்கட்சியின் தலைவர்கள் மக்களின் எதிர்ப்புகளுக்கு ஆளாகி வந்தனர். அவர்கள் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் முட்டை மற்று... மேலும் பார்க்க

ஹரியானா: தொழிலதிபரைத் தாக்க வந்த ரௌடிகள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி!

ஹரியானா மாநிலம், குருகிராமில் நேற்று இரவு ரௌடிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த மோதலில், இரு தரப்பினரும் கிட்டத்தட்ட 60 சுற்றுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த மோதலின் முடிவில், நான்கு ரௌடிகள் க... மேலும் பார்க்க