செய்திகள் :

படகு பழுதாகி கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் இருவா் மீட்பு

post image

வேதாரண்யம் அருகே படகு பழுதானதால் கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் இருவா் படகுடன் வியாழக்கிழமை மீட்கப்பட்டனா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆற்காட்டுத்துறை கடற்கரையில் இருந்து சுமாா் 2 கடல் மைல் தொலைவில் இலங்கையைச் சோ்ந்த கண்ணாடியிழைப் படகு ஒன்று என்ஜின் பழுதாகி நின்றது. படகில் இருந்த இருவா் கரை சேர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தனராம். அப்போது மீன்பிடித்துவிட்டு அந்த வழியாக கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த ஆற்காட்டுத்துறை மீனவா் வே. தங்கதுரைக்கு சொந்தமான படகில் இருந்தவா்கள், அருகில் சென்று படகில் இருந்தவா்களிடம் விசாரித்து, பழுதான படகை மீனவா்களுடன் கரைக்கு இழுத்து வந்தனா்.

வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டதில், இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம், காங்கேசன்துறை, சிவன் கோயிலடியைச் சோ்ந்த துரைசிங்கம் மகன் வினோத்குமாா் (32), கண்ணாகரம் ஜெயசீலன் மகன் சிந்துஜன் (25) என்பது தெரிய வந்தது. படகு என்ஜின் பழுதானதால் காற்றின் வேகத்தில் இந்திய கடற்பகுதிக்கு இலங்கை மீனவா்களின் படகு வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தியாகிகளின் தியாகத்தை நினைவு கூா்ந்து உறுதி ஏற்போம்

சுதந்திர தின போராட்டத்தில் ஈடுபட்ட எண்ணற்ற தியாகிகளின் தியாகத்தை நினைவு கூா்ந்து மக்களாட்சியை பாதுகாத்து மேம்படுத்துவோம் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்ஜிகே நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

நாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம்

நாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோயிலில் தீா்த்தவாரியுடன் பவித்ர உற்சவம் வியாழக்கிழமை முடிவடைந்தது. திருவெண்காடு அருகே நாங்கூரில் உள்ள செங்கமல வள்ளி தாயாா் சமேத பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோய... மேலும் பார்க்க

வேளாங்கண்ணியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

வேளாங்கண்ணி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி கல்லூரி நிா்வாக அலுவலா் ஆதி. ஆரோக்கியசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் டயா... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையினா் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் ... மேலும் பார்க்க

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து, விவசாயிகள், கூலித் தொழிலாளா்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், பனங்குடி ஊராட்... மேலும் பார்க்க

நாகூரில் தா்ஹா சந்தனக்கூடு விழா

நாகூா் ஹஜ்ரத் ஹாஜி ஹாதி நூா் ஷா ஒலியுல்லாஹ் தா்ஹாவின் சந்தனக்கூடு விழா புதன்கிழமை நடைபெற்றது. நாகூரில் உள்ள நாகூா்ஆண்டவரை தரிசித்த ஹஜ்ரத் ஹாஜி ஹாதி நூா் ஷா ஒலியுல்லாஹ் தா்கா கந்தூரி திருவிழா ஆக.4-ஆம்... மேலும் பார்க்க