செய்திகள் :

`பறவைக் காய்ச்சல் பரவுதே, இறைச்சி, முட்டை, பால் சாப்பிடலாமா?' பயமா இருக்கா? | Q&A

post image

தமிழ்நாட்டில் இப்போது பெரிய அலாரமாக இருக்கிறது 'பறவைக் காய்ச்சல்'.

இதனால், 'சிக்கன் சாப்பிடக் கூடாது..', 'பால், முட்டை மூலமும் பறவைக் காய்ச்சல் பரவலாம்' போன்ற செய்திகள் மக்களிடையே இருந்து வருகிறது.

மக்களின் பயத்திற்கு விடையளிக்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

`பறவைக் காய்ச்சல் என்றால் என்ன ?'

``பறவைக் காய்ச்சல் என்பது H5N1 என்று சொல்லக்கூடிய ஃப்ளூ வைரஸால் ஏற்படும் ஒரு வகை காய்ச்சல் ஆகும்.

இந்த வைரஸ் பெரும்பாலும் பறவைகளைத் தான் தாக்குகிறது. இதனால், அவைகளுக்கு மரணம் கூட ஏற்படலாம்.'

Dr.அ. ப. ஃபரூக் அப்துல்லா
Dr.அ. ப. ஃபரூக் அப்துல்லா

`பறவைக் காய்ச்சல் பறவைகளிடம் மட்டும் தான் காணப்படுமா?'

`இல்லை. பறவைக் காய்ச்சல் பறவைகள் மற்றும் அனைத்து பாலூட்டி விலங்குகளிடமும் காணப்படும்.'

`இந்தக் காய்ச்சல் எப்படி மனிதர்களுக்கு பரவுகிறது?'

`இறந்த பறவைகள் அருகில் செல்வது... அவைகளைத் தொடுவது போன்றவைகளால் பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவலாம். இதனால், இறந்த பறவைகளின் அருகில் மனிதர்கள் செல்லாமல் இருப்பதும்... அவற்றை தொடாமல் இருப்பதும் நல்லது.'

`பறவைக் காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், இறைச்சி, முட்டை போன்றவற்றை சாப்பிடலாமா?'

``இது போன்ற வைரஸ்களுக்கு வெப்பம் என்பது பெரிய எதிரி. எந்தளவுக்கு எதிரி என்றால், இந்த வைரஸ்களால் மனிதர்களின் உடல் வெப்பத்தைக் கூட தாங்க முடியாது. அதனால், இது குறித்து பெரிதாக அச்சப்படத் தேவையில்லை.

இறைச்சி, முட்டை, பால் என எதுவாக இருந்தாலும், நல்ல சுட வைத்து... நன்கு வேக வைத்து அல்லது பொரித்து... சமைத்து சாப்பிட்டால் வைரஸ் பரவாது.

ஆனால், கட்டாயம் பச்சையாக முட்டை, பால் எடுத்துக்கொள்வதைத் தவிர்த்துவிடுங்கள்."

பறவைக் காய்ச்சல்
பறவைக் காய்ச்சல்

``பறவைக் காய்ச்சல் வைரஸ் ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவுமா?"

``நிச்சயமாக இல்லை. பாதிக்கப்பட்ட பறவை அல்லது விலங்கைத் தொட்டால் மட்டுமே இந்த வைரஸ் பரவுமே தவிர, ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு இது பரவாது."

``பறவைக் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?"

``ஏதேனும் பறவை அல்லது விலங்கை நேரடியாக தொட்ட பின் ஏற்படும் காய்ச்சல், கண் எரிச்சல், உடல் வலி இவை எல்லாமே பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறி.

அதனால், இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரிடம் செல்வது நல்லது."

``பறவைக் காய்ச்சலில் இருந்து எப்படி எச்சரிக்கையாக இருப்பது?"

``ஏதேனும் பறவையோ, விலங்கோ இறந்து கிடந்தால், உடனடியாக கால்நடை அவசர உதவிக்கு போன் செய்யுங்கள். நீங்கள் உங்கள் கைகளில் தொடுவது ஆபத்தானது. "

``பறவைக் காய்ச்சலால் உயிருக்கு ஆபத்து வருமா ?"

``பறவைக் காய்ச்சலுக்கான நோய் எதிர்ப்பு சக்தி மனிதர்களுக்கு இல்லை. இதனால், சற்று எச்சரிக்கை தேவை. இதைத் தவிர்த்து பீதி எல்லாம் அடைய தேவையில்லை."

Doctor Vikatan: சூயிங்கம் மெல்வதால் ஸ்ட்ரெஸ் குறையும் என்பது உண்மையா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக சூயிங்கம் மெல்லும் பழக்கம் ஆரம்பித்திருக்கிறது. தினமும் ஒன்றிரண்டு மெல்கிறேன். இப்படி தினமும் சூயிங்கம் மெல்வது ஒரு கட்டத்தில் அடிக்ஷனாக மாறும் என்றும், அதை ... மேலும் பார்க்க

Doctor Vikatan: உடலில் பல இடங்களிலும் வலி... கெட்ட கொழுப்பு அதிகமானதன் அறிகுறி என்பது உண்மையா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக உடல் வலி இருக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால், இப்படித்தான் உடலின் பல பகுதிகளிலும் வலி வரும் என்று கேள்விப்பட்டேன். அதுஉண்மையா... கெட்ட கொலஸ்ட்ரால் அதிகர... மேலும் பார்க்க

Doctor Vikatan: காலை உணவைத் தவிர்த்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா?

Doctor Vikatan: காலை உணவு சாப்பிட வேண்டியது மிகமிக அவசியம் என்று முன்பெல்லாம் வலியுறுத்தப்பட்டது. இப்போது சிலர், அப்படியெல்லாம்இல்லை, காலை உணவைத் தவிர்த்தாலும் பிரச்னையில்லை என்று சொல்கிறார்கள். பசித்... மேலும் பார்க்க

சென்னையில் பறவைக் காய்ச்சல்: `சிக்கன் பிரியர்களே உஷார்' - எது பாதுகாப்பு? மருத்துவர் விளக்கம்

சென்னை அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், இ.சி.ஆர் சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து காகங்கள் தொடர்ந்து உயிரிழந்தன. இதனையடுத்து உயிரிழந்த காகங்களின... மேலும் பார்க்க

தமிழகத்தில் 1 லட்சத்தை தாண்டிய புற்றுநோய் பாதிப்பு; காரணமென்ன? தடுக்க என்ன வழி? மருத்துவர் விளக்கம்

மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் புற்றுநோய் தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது.அந்த அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புதிதாக புற்றுநோயால் பா... மேலும் பார்க்க

Doctor Vikatan: கொய்யா இலை சேர்த்துக் கொதிக்க வைத்த நீர்... சர்க்கரைநோயின் தீவிரம் குறைக்குமா?

Doctor Vikatan: கொய்யா இலை சூப் மற்றும் தேநீர் குடித்தால் சர்க்கரை நோய் குறையும், குணமாகும் என்று சிலர் கூறுகிறார்கள். சில கடைகளில் கொய்யா இலைப் பொடியைக்கூட விற்பனை செய்கிறார்கள். உண்மையாகவே கொய்யா இல... மேலும் பார்க்க