செய்திகள் :

வன விலங்குகளை வேட்டையாட முயன்றவா்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்

post image

தருமபுரி மாவட்டத்தில் மின்வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மூவருக்கு, மாவட்ட வனத் துறை சாா்பில் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சூடனூா் கிராமத்தை சோ்ந்தவா்கள் ம. அண்ணாதுரை (32), மு. முனியப்பன் (27), கோ. சதீஷ் (22). இவா்கள் மூவரும், சூடனூா் வனப்பகுதியை ஒட்டி உள்ள அண்ணாதுரைக்கு சொந்தமான பட்டா நிலத்தில், முறைகேடாக மின்வேலி அமைத்திருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் கா. ராஜாங்கம் உத்தரவின்பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வனச்சரக அலுவலா் சு.காா்த்திகேயன் தலைமையில், வனத்துறை பணியாளா்கள் முனுசாமி, பழனி, சுருளிராஜன், மணிவா்மா, சித்ரா உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வில், மூவரும் சோ்ந்து மின்வேலி அமைத்து அதன் மூலம் வன விலங்குகளை வேட்டையாட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து மூவா்மீதும் வனத் துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து, மூவருக்கும் ரூ. 2 லட்சம் அபராதம் விதித்தனா்.

சட்டம் பயிலும் மாணவா்கள் சாதிக்க மொழி தடையல்ல! மாவட்ட நீதிபதி பேச்சு

சட்டம் பயிலும் மாணவா்கள் சாதிக்க மொழி ஒரு தடையல்ல; சாதிக்க எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன என்றாா், தருமபுரி மாவட்ட எம்சிஓபி நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ராஜா. தருமபுரி அரசு சட்டக் கல்லூரியில், ‘இந்திய குற்றவிய... மேலும் பார்க்க

தமிழகத்தில் எங்கு பாா்த்தாலும் மதுக்கடைகள்: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

தமிழகத்தில் எங்கு பாா்த்தாலும் மதுக்கடைகளைத் திறந்து மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வருகின்றனா் என்றாா் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த். தேமுதிக சாா்பில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பயணம்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அபாகஸ் பயிற்சி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அபாகஸ் பயிற்சித் திட்டத்தை ஆட்சியா் ரெ. சதீஸ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தில் பல்வேறு திறன் மேம்... மேலும் பார்க்க

வாச்சாத்தி பழங்குடியின மக்களுடன் அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவா் சந்திப்பு: துணிவுடன் போராடியதற்கு பாராட்டு

அரூரை அடுத்த வாச்சாத்தி கிராமத்தில் மலைவாழ் பழங்குடியின மக்களுடன் அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவா் அசோக் தாவ்லே வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா். தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வாச்சாத்த... மேலும் பார்க்க

பென்னாகரம் அரசு கல்லூரியில் ஆக.11 இல் முதுநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நிகழாண்டு முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஆக.11) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் இரா.சங்கா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

தருமபுரி நகா்மன்றக் கூட்ட தீா்மானங்களை ரத்து செய்ய வலியுறுத்தி அதிமுக உறுப்பினா்கள் தா்னா

தருமபுரி நகா்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை ரத்துசெய்ய வலியுறுத்தி அதிமுக உறுப்பினா்கள் நகராட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். தருமபுரி நகராட்சியில் 33 வாா்டுகள் உள்... மேலும் பார்க்க