செய்திகள் :

அடுத்த ஆண்டு சீனா செல்லும் ட்ரம்ப்; தைவானை கேட்கும் சீனா - என்ன நடக்கிறது?

post image

வரி... பிரச்னை... சமாதானம்... ரிப்பீட்டு - இப்படி தான் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்கா - சீனா உறவு இருந்து வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம், சீனா மீது அதிக வரிகளை விதித்தார் ட்ரம்ப். அதன் பிறகு சமாதானம் ஆகி, அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது... அது வெற்றிகரமாக நடந்து வருவதாகவே தகவல்கள் பரவின... இரு நாடுகளும் அதை தான் சொன்னது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அடுத்த பிரச்னை

அந்த நேரத்தில்தான், சீனா தங்கள் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யும் அரிய கனிமங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், கோபமுற்ற ட்ரம்ப், சீனா மீது 100 சதவிகித வரி விதிக்க இருப்பதாக எச்சரித்தார்.

அதன் பின், அதே மாத கடைசியில், ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங் சந்தித்துக்கொண்டனர். அந்தச் சந்திப்பில் பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றாலும், அது முக்கியமாகப் பார்க்கப்பட்டது.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்து வருகிறது. ஆக, இப்போது அமெரிக்கா, சீனா உறவு சமாதான படலத்தில் உள்ளது.

தொலைபேசி அழைப்பு

இந்த நிலையில்தான், நேற்று ட்ரம்ப் - ஜின்பிங் தொலைபேசியில் பேசியிருக்கின்றனர்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், "நானும் ஜியும் உக்ரைன் விஷயம், ஃபென்டனைல், சோயா பீன்ஸ் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம்.

சீனா உடனான நம்முடைய உறவு மிகவும் வலுவாக உள்ளது.

என்னை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பீஜிங்கிற்கு அதிபர் ஜி அழைத்தார். நான் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அவரும் அடுத்த ஆண்டு இறுதியில் அமெரிக்கா வருவதாக ஒப்புக்கொண்டார்" என்று பதிவிட்டுள்ளார்.

ட்ரம்ப் - ஜி ஜின்பிங்
ட்ரம்ப் - ஜி ஜின்பிங்

இந்தத் தொலைபேசி அழைப்பு குறித்து வெளியுறவுத் துறையின் சீன செய்தி தொடர்பாளர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஜி ஜின்பிங் தைவானை சீனா உடன் இணைப்பது குறித்து பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உறவு அப்படியே தொடருமா... அல்லது அடுத்து எதாவது பிரச்னை ஏற்பட்டு விரிசல் உண்டாகுமா... காலம் தான் பதிலளிக்கும்.

இறுதிச்சடங்கில் கவிழ்ந்த வாகனம்; `சுடுகாட்டுக்கு சாலை' கேட்டு தொடர்ந்து போராடும் கிள்ளியூர் மக்கள்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் உள்ள கிள்ளியூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூக மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டிற்கான பாதை கடந்த 20 ஆண்டுகளாக அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இறந்தவர்களின் உடலை ச... மேலும் பார்க்க

``234 தொகுதியிலும் தே.மு.தி.க வலுவாக இருக்கிறது” - சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்

2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற பெயரில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா வி... மேலும் பார்க்க

TVK : ஸ்கெட்ச் போடும் தவெக; ஆழ்ந்த யோசனையில் செங்கோட்டையன்? விஜய்யுடன் இணைகிறாரா? - பரபர பின்னணி

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணையப்போவதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. உண்மை என்ன என்பதை அறிய பனையூர் வட்டாரத்தினர் சிலரிடம் பேசினோம்.விஜய்விஜய... மேலும் பார்க்க

`இந்த போன்ல தான் வேலை செய்கிறீர்களா?’ பட்டன்போனை தூக்கிப்போட்ட குமரி கலெக்டர்; கொதிக்கும் VAO-க்கள்

கிராம நிர்வாக அலுவலர்களை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா ஒருமையில் பேசி அவமானப்படுத்துவதாகவும், செல்போனை தூக்கி வீசியதாகவும், இதனால் மன உளைச்சலில் உள்ள வி.ஏ.ஓ-க்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டு... மேலும் பார்க்க

துப்பாக்கிச்சூடு : `அதிகாரிக்கு பதவி உயர்வா? திமுகவின் இரட்டை வேடம்’ - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்

``தமிழக வரலாற்றில் எந்த ஆட்சியிலும் இதுபோன்ற கொடுமை நடைபெற்றதில்லை. குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள இருந்ததை ரத்து செய்து விட்டு தூத்துக்குடி செல்கிறேன்.” - கடந்த அதிமுக ஆட்சியில் தூத்துக்க... மேலும் பார்க்க