செய்திகள் :

`அதிமுக, திமுக-வை விமர்சிக்கும் விஜய், பாஜக-வை பற்றி பேசாததது ஏன்?' - திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி!

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “மும்முனைப் போட்டி, நான்கு முனைப் போட்டி என்றெல்லாம் ஊடகங்களில் பேசுகிறார்கள். சரி, அவர்களைப் பொறுத்தவரை அது அப்படியே இருக்கட்டும். ஒரு பக்கம் மாபெரும் மக்கள் சக்தியாக நாம் நிற்கிறோம். இன்னொரு பக்கம் திமுக தலைமையில் சில கூட்டணிக் கட்சிகள் இருக்கின்றன. மற்றொரு பக்கம் பாஜக தலைமையில் மற்றும் பலர்” எனக் குறிப்பிட்டுப் பேசினார்.

பாஜக-வுடன் தமிழகத்தின் பிரதான கட்சியான அதிமுக கூட்டணியில் இருக்கும்போது அந்த கட்சியின் பெயரை குறிப்பிடாமல், பாஜக-வின் பெயரை மட்டும் குறிப்பிட்டு பேசியது, விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. என்.டி.ஏ கூட்டணிக்கு பாஜக-தான் தலைமை என விஜய் மறைமுகமாகச் சொல்வதாக பேச்சுகள் எழுந்தன.

தவெக தலைவர் விஜய்

இதையடுத்து அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்கள் விஜய்யைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், “அமித் ஷா வந்தபோது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக-தான் தலைமை, கூட்டணிக்குத் தலைவர் எடப்பாடி பழனிசாமி எனத் தெளிவாகச் சொல்லிவிட்டார். பி.ஜே.பி-க்கு நாங்கள் அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

சி.பி.ஐ விசாரணைக்குச் சென்று வந்த பின் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஊழல் கட்சிகள் என்றார், எங்களுக்கு பொது எதிரி பா.ஜ.க என்றார், ஆனால் அவர் பா.ஜ.க-வை மட்டும் விமர்சிக்கவில்லை அது ஏன்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``விஜய் எங்களுடைய கூட்டணி குறித்து கவலைப்படத் தேவையில்லை.

ஆர்.பி. உதயகுமார்
ஆர்.பி. உதயகுமார்

எங்களுடன் கூட்டணியில் இருந்தால்தான் அதைப் பற்றிப் பேச வேண்டும், கருத்து சொல்ல வேண்டும். எந்தக் கட்சி களத்தில் இருக்க வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். தேர்தல் முடிந்தால்தான்  யார் இருக்கிறார்கள், யார் காணமால் போனார்கள் என்பதைப் பார்க்க முடியும்” என்றார்.

நாடாளுமன்றம்: `இடைநீக்கங்கள், பதில் இல்லா கேள்விகள்' - முடங்குகிறதா ஜனநாயகத்தின் இதயம்?

நாடாளுமன்றம்இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, உலகிலேயே மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. நமது ஜனநாயகத்தின் இதயமாகத் திகழும் நாடாளுமன்றம், மக்களவை மற்றும் ... மேலும் பார்க்க

"2 அரசுகளும் அலைக்கழித்தால் எங்கே போவது?" - நயினார் நாகேந்திரனிடம் குமுறிய அங்கன்வாடி ஊழியர்கள்

காலமுறை ஊதியம், பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே 10வது நாளாக தொடர் காத்திருப்பு... மேலும் பார்க்க

பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்!

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே கோவை வடக்கு தொகுதியில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. பாஜக-வின் சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன், அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிழலான சந்திர... மேலும் பார்க்க

"மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?"- மீண்டும் எதிர்வினை ஆற்றிய மாணிக்கம் தாகூர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக- காங்கிரஸ் இடையே தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.அதிக சீட்டுகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.இந்தச் ச... மேலும் பார்க்க

இந்தியா முழுவதும் விவசாய மற்றும் தொழிலாளர் சங்கம் போராடுவது ஏன்? 6 புள்ளிகள்|Quick Points

இன்று இந்தியா முழுவதும் தொழிலாளர் சங்கங்களும், விவசாய சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றன. இது நாடு முழுவதுமே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்திற்கான காரணத்தை 6 புள்ளிகளில் தெரிந்துகொ... மேலும் பார்க்க