செய்திகள் :

"அது முடியாத காரியம்; ஒப்பந்த முறையை கொண்டு வந்ததே அதிமுகதான்"- செவிலியர்கள் போராட்டம் பற்றி மா.சு

post image

திமுக அரசு தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி தங்களின் பணிகளை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று நேற்றுமுன்தினம் (டிச. 18) சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

கொரோனா காலத்தில் பணிபுரிந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், வேலைக்கான ஊதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

மா. சுப்பிரமணியன்
மா. சுப்பிரமணியன்

இந்நிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் செவிலியர்கள் போராட்டம் குறித்து தற்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

``செவிலியர்கள் இரண்டு, மூன்று கோரிக்கைளை வைக்கிறார்கள். அதில் ஓரிரு கோரிக்கைகளுக்கு தீர்வு காண இருக்கிறோம்.

காலிப்பணியிடங்களே இல்லாத நிலை இப்போது இருக்கிறது.

ஒப்பந்த செவிலியர் பணியாளர் முறையை கொண்டுவந்ததே ஜெயலலிதா தான்.

போராடுவது என்பது அவர்களின் உரிமை. பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் போராட வேண்டும். இன்று எடப்பாடி பழனிசாமி செவிலியர் போராட்டம் குறித்து அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் செவிலியர்கள் பிரச்னைக்கு காரணமே அதிமுக தான்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராடிய செவிலியர்கள்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராடிய செவிலியர்கள்

2014- 2015 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்த செவிலியர் நியமனத்தை அவர்கள் தான் கொண்டு வந்தார்கள்.

கூடுதல் பணியிடங்களை உருவாக்குவதற்கு அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை.

ஆனால் இன்று நடைபெறும் போராட்டத்திற்கு அதிமுக நீலி கண்ணீர் வடிக்கிறார்கள்.

செவிலியர்களின் கோரிக்கை இன்னும் கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான்.

கிட்டத்தட்ட 8000 பேர் ஒப்பந்த செவிலியர்களாக இருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இவர்களின் சம்பளம் 14,000 ரூபாயாக இருந்தது.

முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 4000 ரூபாயாக உயர்த்தி கொடுத்தார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செவிலியர்கள்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செவிலியர்கள்

காலிப்பணியிடங்கள் உருவாக உருவாக ஒப்பந்த அடிப்படையில் உள்ள செவிலியர்கள் எல்லாம் அந்த காலிப்பணியிடங்களில் நிரப்பப்படுவார்கள்.

ஆனால் இவர்கள் புதிதாக இவர்களுக்கு என்று காலிப்பணியிடங்களை உருவாக்க சொல்கிறார்கள். ஆனால் அது முடியாத காரியம்" என்று தெரிவித்திருக்கிறார்.

சிரித்துப் பேசிக்கொண்ட பிரியங்கா காந்தி - மோடி - தேநீர் விருந்தில் கலகல!

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை திட்ட பெயர் மாற்றம், அணு சக்தித் துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, டெல்லி காற்று மாசு, எஸ... மேலும் பார்க்க

'தேர்தல் வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா?' - சீறும் மா.சு; கொதிக்கும் செவிலியர்கள்!

தமிழகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களின் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் கடுமையாக நடந்துகொள்வதாகவும் 'வாக... மேலும் பார்க்க

``சினிமா வசனமெல்லாம் பேசுகிறார்; விஜய் தான் பாஜகவின் `சி' டீம்!" - அமைச்சர் ரகுபதி சாடல்!

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். அப்போது, செய்தியாளர்கள... மேலும் பார்க்க

ஏமாற்றமா? எதார்த்தமா? - தமிழக அரசியலில் ரஜினி எனும் கேள்விக்குறி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

SIR: செல்லூர் ராஜூ தொகுதியில் அதிகம்! - மதுரை மாவட்டத்தில் 3,80,474 பேர் நீக்கம்!

மதுரை மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு பிந்தைய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரவீன்குமார் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்பாக வெளியிட்டா... மேலும் பார்க்க

'பொங்கலுக்கு பிறகு தவெக-வுக்கு திருப்புமுனை' - செங்கோட்டையன் சர்ப்ரைஸ்

தமிழ்நாடு விரைவில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் வியூகங்களுடன் களத்தில் பரபரக்க தொடங்கிவிட்டார்கள். அரசியலில் புதுவரவான தவெக கடந்த வாரம் ஈரோடு மாவட்டத்தில் பொதுக்கூட்டம... மேலும் பார்க்க