செய்திகள் :

"அப்போது என் தந்தை மதுவுக்கு அடிமைப்பட்டிருந்தார்; அவரின் மறைவுதான் எங்களை சேர்த்தது" - பாபி தியோல்

post image

மறைந்த நடிகர் தர்மேந்திராவின் மகனும், பாலிவுட் நடிகருமான பாபி தியோல், சமீபத்தில் தனது குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தந்தை தர்மேந்திராவின் மதுப்பழக்கம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra

அந்தப் பேட்டியில் அவர், "என் தந்தை ஒரு காலகட்டத்தில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மிகவும் சிரமப்பட்டார்.

அது எங்களது குடும்பத்தையே நிலைகுலையச் செய்தது. ஆனால், அந்த இருண்ட காலத்திலிருந்தும், வலிகளிலிருந்தும் நாங்கள் எப்படி மீண்டு வந்தோம் என்பதுதான் முக்கியம்.

எனது தந்தைக்கும் ஹேமமாலினிக்கும் பிறந்த ஈஷா மற்றும் அஹானா தியோலுடன் நான் எப்போதும் ஒரு தூரத்தையே கடைபிடித்து வந்தேன். ஆனால், என் தந்தையின் மறைவுக்குப் பின் எங்களது குடும்பத்தை ஒரே புள்ளியில் இணைத்தது.

அந்தத் துயரம் எங்களை ஒருவருக்கொருவர் நெருக்கமாக்கிவிட்டது. வாழ்க்கையில் எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இறுதியில் குடும்பம்தான் நிலையானது.

பாபி தியோல்
பாபி தியோல்

ஈஷா மற்றும் அஹானாவுடன் இப்போது எனக்கு ஒரு அழகான உறவு இருக்கிறது. நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்கிறோம், ஒருவருக்கொருவர் துணையாக இருக்கிறோம்.

கடந்த காலக் கசப்புகளை மறந்துவிட்டு, எதிர்காலத்தை நேர்மறையாகப் பார்க்கக் கற்றுக்கொண்டேன். இப்போது எங்களது குடும்பம் ஒரு முழுமையான மற்றும் மகிழ்ச்சியான இடமாக மாறியிருக்கிறது." எனக் கூறியிருக்கிறார்.

Hansika: 'காஸ்டிங் கௌச்' குறித்த கேள்விக்கு நடிகை ஹன்சிகாவின் பதில் - விவாதிக்கும் நெட்டிசன்கள்!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்த செய்தியைத் தொடர்ந்து மீண்டும் தலைப்புச் செய்திக... மேலும் பார்க்க

"சினிமா வேண்டாம் என்று ரூ.4500 சம்பளத்தில் வேலை செய்கிறார்" - மகன் குறித்து நடிகர் அக்‌ஷய் குமார்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் நடிகை டிவிங்கிள் கண்ணா தம்பதியின் மகன் ஆரவ் தனது 15 வயதில் லண்டன் சென்று பேஷன் டிசைனிங் கற்றுக்கொண்டு வந்தார். லண்டனில் படிக்கச் சென்றபோது தனக்கு தேவையான சாப்பாட... மேலும் பார்க்க

சுகேஷின் ரூ.200 கோடி மோசடி வழக்கு; அப்ரூவராக மாற நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விருப்பம்

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவிந்தர் சிங் சிறையில் இருந்தபோது அவரை வெளியில் கொண்டு வருவதாக தொழிலதிபர் மனைவியிடம் கூறி ரூ.200 கோடி பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திர சேகர் என்பவர் கைது செய்யப்பட்டு சிற... மேலும் பார்க்க

'சிராக் பஸ்வானுடன் காதல்?' - கங்கனா ரனாவத்தின் விளக்கம் என்ன?

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்று, நாடாளுமன்றம் சென்றுவிட்டார். ஆனால் சிறிது நாட்களில் தனக்கு அரசியல் பிடிக்கவில்லை என்று பேட்டியளிக்க ஆரம்பித்தார். இப்போது நாடா... மேலும் பார்க்க

"தவறுகள் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை 'ராமாயணம்' கற்றுக்கொடுக்கிறது!" - 'ராமாயணா' படம் பற்றி யஷ்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'ராமாயணா திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. Ramayana Movieஇந்நிலையில், லாஸ் வேகா... மேலும் பார்க்க

"தாவூத் இப்ராகிமால்தான் நான் பிழைப்பு நடத்துகிறேன்" - இயக்குநர் ராம்கோபால் வர்மா சொல்வது என்ன?

பிரபல பாலிவுட் பட இயக்குநர் ராம் கோபால் வர்மா, மாபியாவை மையப்படுத்தி பல படங்களை இயக்கி இருக்கிறார். ராம்கோபால் வர்மா எதைப் பற்றியும் கவலைப்படாமல் பேசக்கூடியவர். தற்போது அவர் பேசி இருக்கும் கருத்துக்கள... மேலும் பார்க்க