செய்திகள் :

"அப்போ அப்பாவின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை; இப்போ.."- மூன்றாவது டாக்டர் பட்டத்தைப் பெற்ற மம்மூட்டி

post image

நடிகர் மம்மூட்டி, தற்போது அவருடைய மூன்றாவது கௌரவ டாக்டர் பட்டத்தைப் பெற்றுள்ளார். கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் இந்திய சினிமாவிற்கு மம்மூட்டி ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்த உயரிய டாக்டர் பட்டத்தை வழங்கி கௌரவித்திருக்கிறது.

Mammootty
Mammootty

கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மம்மூட்டிக்கு இந்த டாக்டர் பட்டத்தை வழங்கினார்.

டாக்டர் பட்டம் பெற்றபின் மேடையில் பேசிய மம்மூட்டி, "என்னுடைய தந்தை என்னை ஒரு உண்மையான மருத்துவராகப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

ஆனால், அவர் உயிரோடு இருந்தபோது என்னால் அவரது ஆசையை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இன்று எனக்குக் கிடைத்திருக்கும் மூன்றாவது டாக்டர் பட்டம் இது. என்னால் மருத்துவ ரீதியாக மக்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் போயிருக்கலாம்.

ஆனால், கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக எனது திரைப்படங்கள் மூலமாக உங்களை மகிழ்வித்து, உங்களது மனங்களைக் குணப்படுத்தி வருகிறேன் என்று நம்புகிறேன். எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இதை நான் தொடர்ந்து செய்வேன்" எனப் பேசியிருக்கிறார்.

Mammootty - Viswanath Arlekar
Mammootty - Viswanath Arlekar

இதனைத் தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்திலும், "மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் இருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த மறக்க முடியாத பயணத்தில் என்னுடன் நின்ற ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இது நடிகர் மம்மூட்டிக்கு மூன்றாவது டாக்டர் பட்டம். இதற்கு முன் கேரளப் பல்கலைக்கழகம் மற்றும் காலிகட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்தும் கடந்த 2010-ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா, நடிகர்கள் இல்லாமல் ஒரு படம் - மலையாள சினிமாவிலிருந்து முழுநீள ஏ.ஐ படம்!

இன்றைய தேதியில் ஏஐ, நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயங்களைச் சாத்தியப்படுத்திக் காட்டிவிடுகிறது. அதற்கேற்ப தொழில்நுட்பங்களும் விரிந்து, ஏஐ-ம் நம் அன்றாடத்தில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது. சி... மேலும் பார்க்க

Drishyam 3: "என் சொந்த வாழ்க்கையையே பல வழிகளில் 'த்ரிஷ்யம்' படம் மாற்றியது"- எஸ்தர் அனில் நெகிழ்ச்சி

'த்ரிஷ்யம்' திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது மூன்றாம் பாகமான 'த்ரிஷ்யம் 3' திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. படத்தின் மூன்று பாகங்களிலும் ஜார்ஜ்குட்டி... மேலும் பார்க்க

த்ரிஷ்யம் 3: "ஜார்ஜ் குட்டியை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.!"- மோகன்லால் நெகிழ்ச்சி

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'த்ரிஷ்யம்'. ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப் படத்தில் மீனா மோகன்லாலுக்கு மனைவியாக நடித்திருப்பார். தமிழ், இ... மேலும் பார்க்க

Drishyam 3 Review: ஓவர்டோஸா, சுவாரஸ்ய த்ரில்லரா? மீண்டும் வெல்கிறதா மோகன்லால் - ஜீத்து ஜோசப் காம்போ?

வருண் பிரபாகரன் (ரோஷன் பஷீர்) காணாமல் போன வழக்கில், ஜார்ஜ் குட்டி (மோகன்லால்) மற்றும் அவரின் குடும்பத்தார் மீது வருணின் தாய் கீதா பிரபாகரன் (ஆஷா ஷரத்) மற்றும் போலீஸார் குற்றச்சாட்டு வைக்க, அவற்றுக்குப... மேலும் பார்க்க

Athiradi: "எனக்கு பேசில் ஜோசப் சின்ன ரோல்தான் நடிக்கக் கொடுத்தான்" - சென்னையில் சஞ்சு சாம்சன் கலகல

இன்று (17.05.2026) சென்னையில் நடைபெற்ற ‘அதிரடி’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட், சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு இரட்டை விருந்தாக அமைந்தது. அருண் அனிருத்தன் இயக்கத்தில், டோவினோ தாமஸ், ப... மேலும் பார்க்க

"முட்டாள்தனமான 3 திருமணங்கள்; 17 ஆண்டுகளை வீணடித்துவிட்டேன்" - நடிகை மீரா வாசுதேவன் வருத்தம்!

நடிகை மீரா வாசுதேவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். பிரபல மலையாள நடிகையான மீரா வாசுதேவன் 'உன்னைச் சரணடைந்தேன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான... மேலும் பார்க்க