செய்திகள் :

தவெக: 'பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகளில் முறைகேடு?' - அண்ணாமலையின் குற்றச்சாட்டு என்ன?

post image

தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளின் தரம் மற்றும் கொள்முதல் முறைகேடுகள் குறித்து, பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ரூ.5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு வழங்குகிறது.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒரு முட்டை ரூ.3.70 என்று விலை குறைந்தபோது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதன கிடங்குகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை
அண்ணாமலை

அதாவது, குறைந்த விலைக்குப் பெருமளவில் சேமித்து வைத்து, ஆண்டு முழுவதும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. முட்டை என்பது நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கும் பொருள் அல்ல. குளிர்சாதனக் கிடங்கில் மாதக்கணக்கில் வைத்திருந்து, பின்னர் தொலைதூரக் கிராமப்புறப் பள்ளிகளுக்குக் கொண்டு செல்லப்படும்போது அதன் தரம், ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும்.

கடந்த திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்குப் பல முறை அழுகிய முட்டை வழங்கப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்திருந்தோம். தவெக ஆட்சியிலும், அதே நிலை தொடராமல் இருக்க வேண்டும். இது வெறும் கொள்முதல் சார்ந்த பிரச்னை அல்ல. லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பெற்றோரின் நம்பிக்கை சார்ந்ததாகும்.

எனவே, முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படையான கண்காணிப்பையும் கடுமையான ஆய்வையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில், எந்தவித அலட்சியமும் ஏற்க முடியாது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை' - விஸ்வநாதன்

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை தமுக்கம் தபால் தந்தி அலுவலகம் அருகே அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு அவர்களின் திருவுருவச்சிலைக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் வ... மேலும் பார்க்க

கேரளம்: பினராயி விஜயனின் வீடு, மருமகன் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் இடி ரெய்டு - பின்னணி என்ன?

கேரள மாநிலம் கொச்சியில் செயல்படும் மணல் ஆலை நிறுவனமான சி.எம்.ஆர்.எல் கம்பெனியுடன், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்ஸாலாஜிக் கம்பெனி நிதி ஒப்பந்தம் செய்ததும், செய்யப்படாத ... மேலும் பார்க்க

விசிக: `ஸ்டாலின் அண்ணனின் மனசாட்சிக்குத் தெரியும்' - தொல்.திருமாவளவனின் உருக்கம்

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கோவையிலிருந்து தன் தொண்டர்களுடன் முகநூல் லைவ் மூலம் உரையாடினார். அந்த உரையில், ``அரசியல் நெருக்கடியை உணர்ந்துதான் தவெக அரசுக்கு நம் ஆதரவை வழங்கியிருக்கிறோம். கடந்த 10 ஆண்... மேலும் பார்க்க

தவெக: ``அரசு குடியிருப்பு வழங்குவதில் சாதிய பாகுபாடு காட்டுவதா?" - மா.சுப்ரமணியன் கடும் தாக்கு!

சென்னை சைதாப்பேட்டையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் ஒதுக்கீட்டில் சாதிப் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி, த.வெ.க எம்.எல்.ஏ அருள் பிரகாசம் மீது கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீடுகள... மேலும் பார்க்க

கர்னூல் : `எங்கள் மகளின் மரணத்தை அரசியலுக்குதான் பயன்படுத்தினீர்களா' - பவன் கல்யாண் மீது சாடும் தாய்

ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், தங்கள் மகளின் மரணத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டு, தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு நீதியை வழங்கத் தவறிவிட்டார் என்று 2017-ல் கர்னூலில் பாலியல் ... மேலும் பார்க்க