செய்திகள் :

``அய்யாவைச் சுற்றி திமுக கைக்கூலிகள், தீய சக்திகள்; நான் சேர மாட்டேன்!'' - உறுதியாகச் சொன்ன அன்புமணி

post image

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் நேற்று இரவு 100-வது நாள் நடைப்பயணத்தை மேற்கொண்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அதைத்தொடர்ந்து பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அவர் பேசும்போது, “வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோல்வியடைய வேண்டும். ஊழல் தி.மு.க., விவசாயிகளுக்கு எதிரான தி.மு.க., பெண்களுக்கு எதிரான இந்தக் கொடுங்கோல் ஆட்சியை தூக்கி எறியுங்கள். இன்னும் ஆறு மாதங்களில் நம்முடைய கூட்டணியைச் சார்ந்த ஆட்சி வரும். வந்தவுடன் உங்களின் அனைத்து பிரச்சனைகளையும் நான் தீர்த்து வைப்பேன்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

மருத்துவர் அய்யாவிடமிருந்து என்னை பிரித்து, இன்று அய்யாவைச் சுற்றி இருக்கின்ற துரோகிகள், தீய சக்திகள், தி.மு.க.வின் கைக்கூலிகள் இருக்கின்ற வரை, நான் அங்கே சேர மாட்டேன். நான் அங்கே இணைய மாட்டேன்.

அய்யா ஒரு சமூக சீர்திருத்தவாதி. 45 ஆண்டுகளாக இந்த மக்களுக்காக, தமிழ்ச் சமூகத்துக்காக, தமிழ்நாட்டுக்காக உழைத்து வருகின்றவர். ஆனால், அய்யாவை இன்று திசைதிருப்பி, அய்யாவின் மனதை மாற்றிய துரோகிகள் இருக்கின்ற வரை, அவரோடு சேர மாட்டேன் என்பதை வலியோடும் மனஅழுத்தத்தோடும் சொல்கிறேன்.

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு குறைந்தது 15 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என வலியுறுத்தி, டிசம்பர் 17-ம் தேதி மாநிலம் முழுவதும் ‘சிறை நிரப்பும் போராட்டம்’ நடத்த இருப்பதாக அறிவித்துள்ளேன்.

உங்களுக்காக நான் எத்தனை நாள் வேண்டுமானாலும் சிறையில் இருக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு வேண்டியது உங்களுக்கான படிப்பும் வேலையும் தான்.

இந்தப் படிப்பையும் வேலையையும் ஸ்டாலின் நிச்சயமாக கொடுக்க மாட்டார்.

பென்னாகரம் பொதுக்கூட்டம்
பென்னாகரம் பொதுக்கூட்டம்

இனி நாம் ஏமாறத் தயாராக இல்லை. வன்னியர் சமுதாயத்துக்கு முதலமைச்சர் மிகப்பெரிய துரோகம் செய்து கொண்டிருக்கிறார். வன்னியர் சமூக மக்கள் வரும் தேர்தலில் நம்முடைய ஒரு ஓட்டுக்கூட தி.மு.க.வுக்கு போகக் கூடாது. இது சாதி பிரச்சினை இல்லை, சமூகநீதி பிரச்சினை.

தி.மு.க. ஆட்சியை நாம் விரட்டியடிப்போம். தமிழ்நாட்டை இவர்கள் நாசப்படுத்தியது போதும். தி.மு.க. பிடியில் இருந்து மக்களுக்கு விடுதலை வேண்டும். இந்த சாராய ஆட்சி, பெண்களை நாசப்படுத்தும் ஆட்சி, அரசு ஊழியர்களுக்கு எதிரான இந்த தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, நம் உரிமைகளை மீட்டெடுப்போம்,” என்றார் ஆவேசமாக.

Tvk Vijay Speech: அவசர அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்? - முதல்வருக்கு தவெக விஜய் கேள்வி

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த... மேலும் பார்க்க

தவெக கூட்டம்: "கரூர் செந்தில் பாலாஜி... அங்க ஏன் போனீங்கன்னு கேட்குறாங்க"- ஆதவ் அர்ஜுனா

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.அந்த ... மேலும் பார்க்க

ஹரியானா: "5,21,619 போலி வாக்காளர்கள்; ஒரு நபர் 100 வாக்கு செலுத்தியிருக்கிறார்" - ராகுல் காந்தி

நாளை (நவம்பர் 6) பீகாரில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா மாநிலத்தில் வாக்கு திருட்டு நடப்பதாகக் குற்றஞ்சாட்டி டெல்லியில் செய்தியாளர... மேலும் பார்க்க

"கரூர் சம்பவத்தில் நாங்கள் என்ன அப்படியா செய்தோம்?"- தவெக கூட்டத்தில் திமுகவை சாடிய நிர்மல் குமார்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.அந்த ... மேலும் பார்க்க

'74% இந்தியர்களின் கல்வி விசா நிராகரிப்பு' - கனடா அரசு இந்திய மாணவர்களை டார்கெட் செய்வது ஏன்?

கனடா - வெளிநாட்டில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் டாப் சாய்ஸ்களில் ஒன்று. ஆனால், இந்த சாய்ஸ் இனி தொடருமா என்கிற கேள்வி தற்போது பெரிதாக எழுந்துள்ளது. எவ்வளவு நிராகரிப்புகள்? கடந்த ஆகஸ்ட் மாதம், ... மேலும் பார்க்க

இந்தியாவில் வாரிசு அரசியலுக்கு 'நேரு'தான் காரணமா? - சசி தரூர் கருத்தும் வரலாறும்!

திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், இந்திய வாரிசு அரசியல் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றில் எழுதிய கட்டுரையில், இந்தியாவிலுள்ள வாரிசு அரசியலுக்கு நேருவும் காரணம் எனக் குற்றம்சாட்டி எழுதியிருப்பது ... மேலும் பார்க்க