செய்திகள் :

``அய்யாவைச் சுற்றி திமுக கைக்கூலிகள், தீய சக்திகள்; நான் சேர மாட்டேன்!'' - உறுதியாகச் சொன்ன அன்புமணி

post image

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் நேற்று இரவு 100-வது நாள் நடைப்பயணத்தை மேற்கொண்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அதைத்தொடர்ந்து பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அவர் பேசும்போது, “வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோல்வியடைய வேண்டும். ஊழல் தி.மு.க., விவசாயிகளுக்கு எதிரான தி.மு.க., பெண்களுக்கு எதிரான இந்தக் கொடுங்கோல் ஆட்சியை தூக்கி எறியுங்கள். இன்னும் ஆறு மாதங்களில் நம்முடைய கூட்டணியைச் சார்ந்த ஆட்சி வரும். வந்தவுடன் உங்களின் அனைத்து பிரச்சனைகளையும் நான் தீர்த்து வைப்பேன்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

மருத்துவர் அய்யாவிடமிருந்து என்னை பிரித்து, இன்று அய்யாவைச் சுற்றி இருக்கின்ற துரோகிகள், தீய சக்திகள், தி.மு.க.வின் கைக்கூலிகள் இருக்கின்ற வரை, நான் அங்கே சேர மாட்டேன். நான் அங்கே இணைய மாட்டேன்.

அய்யா ஒரு சமூக சீர்திருத்தவாதி. 45 ஆண்டுகளாக இந்த மக்களுக்காக, தமிழ்ச் சமூகத்துக்காக, தமிழ்நாட்டுக்காக உழைத்து வருகின்றவர். ஆனால், அய்யாவை இன்று திசைதிருப்பி, அய்யாவின் மனதை மாற்றிய துரோகிகள் இருக்கின்ற வரை, அவரோடு சேர மாட்டேன் என்பதை வலியோடும் மனஅழுத்தத்தோடும் சொல்கிறேன்.

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு குறைந்தது 15 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என வலியுறுத்தி, டிசம்பர் 17-ம் தேதி மாநிலம் முழுவதும் ‘சிறை நிரப்பும் போராட்டம்’ நடத்த இருப்பதாக அறிவித்துள்ளேன்.

உங்களுக்காக நான் எத்தனை நாள் வேண்டுமானாலும் சிறையில் இருக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு வேண்டியது உங்களுக்கான படிப்பும் வேலையும் தான்.

இந்தப் படிப்பையும் வேலையையும் ஸ்டாலின் நிச்சயமாக கொடுக்க மாட்டார்.

பென்னாகரம் பொதுக்கூட்டம்
பென்னாகரம் பொதுக்கூட்டம்

இனி நாம் ஏமாறத் தயாராக இல்லை. வன்னியர் சமுதாயத்துக்கு முதலமைச்சர் மிகப்பெரிய துரோகம் செய்து கொண்டிருக்கிறார். வன்னியர் சமூக மக்கள் வரும் தேர்தலில் நம்முடைய ஒரு ஓட்டுக்கூட தி.மு.க.வுக்கு போகக் கூடாது. இது சாதி பிரச்சினை இல்லை, சமூகநீதி பிரச்சினை.

தி.மு.க. ஆட்சியை நாம் விரட்டியடிப்போம். தமிழ்நாட்டை இவர்கள் நாசப்படுத்தியது போதும். தி.மு.க. பிடியில் இருந்து மக்களுக்கு விடுதலை வேண்டும். இந்த சாராய ஆட்சி, பெண்களை நாசப்படுத்தும் ஆட்சி, அரசு ஊழியர்களுக்கு எதிரான இந்த தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, நம் உரிமைகளை மீட்டெடுப்போம்,” என்றார் ஆவேசமாக.

Bihar: 10-வது முறையாக முதல்வராகும் நிதீஷ் குமார்; புதிய அமைச்சரவை குறித்து வெளியான தகவல்!

பீகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி எப்போதும் இல்லாத அளவுக்கு அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 206 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் மகாகட்பந்தன் ... மேலும் பார்க்க

வங்கதேச வன்முறை : `ஷேக் ஹசீனா குற்றவாளி; மரண தண்டனை விதிக்கிறோம்’ - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, அரசு வேலைகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக 2024 ஜூலை மாதம் பல்கலைக்கழக மாணவர்கள... மேலும் பார்க்க

மும்பை: மாநகராட்சி தேர்தல்; `சுயமாக முடிவெடுக்கலாம்!’ - காங்கிரஸை கைகழுவ தயாராகும் உத்தவ்?

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் ஜனவரி மாதம் மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி வார்டுகள் குலுக்கல் முறையில் எது பெண்களுக்கானது என்பத... மேலும் பார்க்க

Mexico: அதிபர் மீது அதிருப்தி; மெக்சிகோவிலும் வெடித்த Gen Z போராட்டம் - ஏன், என்ன நடந்தது?

இந்தோனேசியா, வங்கதேசம், மடகாஸ்கர் மற்றும் நேபாளத்தில் ஆளும் அரசாங்கத்தின் பல்வேறு நிர்வாகக் கோளாறுகளை எதிர்த்து மிகப் பெரிய 'ஜென் Z' போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாடுக... மேலும் பார்க்க

Pa.Ranjith:``கம்யூனிஸ்ட்டுகள் ஏன் அம்பேத்கரை வாசிக்கவில்லை?" - பா.ரஞ்சித் முன்வைக்கும் குற்றச்சாட்டு

நீலம் பண்பாட்டு மையம் சார்பில், சென்னை தேனாம்பேட்டையில் அறிஞர் ராஜ் கௌதமன் நினைவு விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2025-ம் ஆண்டுக்கான அறிஞர் ராஜ் கெளதமன் நினைவு விருது ஆய்வாளர், எழுத்தாளர் வ.கீதா அவர்... மேலும் பார்க்க