செய்திகள் :

ஆதார் அப்டேட்டுகளை 'முற்றிலும் இலவசமாக' செய்துகொள்ளலாம்; இதற்கு UIDAI சொல்லும் சூப்பர் வழி!

post image

இந்தியாவில் எங்கேயும், எப்போதும் கேட்கப்படும் முக்கியமான ஆவணங்களில் ஒன்று - ஆதார் கார்டு.

அந்த ஆதார் கார்டை அப்-டு-டேட்டாக வைத்திருப்பது மிக மிக அவசியம்.

ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு மாறியிருப்போம். அப்போது முகவரி மாறியிருக்கும். அதை உடனடியாக ஆதாரில் அப்டேட் செய்து விட வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு மேல், ஆதார் கார்டில் தகவல்கள் அப்டேட் செய்யப்படவில்லை என்றாலும், அதை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும். காரணம், 10 ஆண்டுகளில் நமது முக அமைப்புகள் மாறியிருக்கும்.

ஆதார் கார்டு
ஆதார் கார்டு

எல்லா இடங்களிலும் கேட்கப்படும் ஆவணம் இது என்பதால், அது அப்டேட்டாக இருந்தால், பல குளறுபடிகளைத் தவிர்க்கலாம்.

இந்த அப்டேட்டுகளையும், ஏதேனும் ஒரு மாற்றத்தையும் ஆதார் கார்டில் செய்ய வேண்டுமென்றால், இ சேவை மையங்கள், தபால் அலுவலகங்களில் செய்தால், கட்டணம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.

ஆனால், இவற்றில் சில மாற்றங்கள் ஆன்லைனில் முற்றிலும் இலவசம்.

அந்த ஆன்லைன் அப்டேட்டுகளை இலவசமாக செய்துக்கொள்ள முதலில் ஜூன் 15, 2026 வரை கெடு இருந்தது. ஆனால், இந்தக் கடைசி தேதி தற்போது ஜூன் 14, 2027 வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் இந்த இலவச வசதியைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வலைதளம் - 'My Aadhaar'.

இதில் Update Aadhaar எனும் டேப்-ஐ க்ளிக் செய்து தரவுகளை அப்டேட் செய்து கொள்ளலாம்.

இந்த வலைதளத்தில் 'ஆவண அப்டேட்'டுகளை ஜூன் 14, 2027 வரைக்கும் இலவசமாக செய்துகொள்ளலாம்.

`மேட்டூர் அணை வரலாற்றில் ஏற்பட்டுள்ள 62-வது ஆண்டு காலதாமதம் இது!' - அதிகாரிகள் சொல்வதென்ன?

காவிரி ஆற்றுப்படுகை பாசனத்தின் அடிப்படை ஆதாரமாகப் பங்காற்றி வருகிறது மேட்டூர் அணை. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரால் சுமார் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு மேல் குறுவை, சம்பா, தாளடி எ... மேலும் பார்க்க

சிங்கப்பெண் திட்ட வீடியோ சர்ச்சை: அமைச்சர் ராஜ் மோகன் சொல்லும் விளக்கம் என்ன?| Live Updates

லிடியன் நாதஸ்வரத்தை வரவேற்ற அமைச்சர் வன்னி அரசு!வன்னி அரசுசென்னை விமான நிலையத்தில் அமைச்சர் வன்னி அரசு. சிம்பொனி இசையமைத்து சாதனை நிகழ்த்திய இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரத்தை வரவேற்றார். அப்போது,``தமிழ... மேலும் பார்க்க

``கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும்..." - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கோரி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்த்திபனைச் சந்தித்து கோரிக்கை ம... மேலும் பார்க்க

ஈரோடு: பெண்கள், மாணவிகளைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! - Album

ஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில... மேலும் பார்க்க

மீண்டும் உயரும் அத்தியாவசியப் பொருள்களின் விலை; லாரி வாடகை உயர்வும் சங்கிலித் தொடரான சிக்கல்களும்!

World Inequality Lab அறிக்கையின் படி இந்தியாவில் 10 சதவிகிதப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே... இருக்கும் நிலையில், நடுத்தர வர்கத்தினரும், ஏழைகளும் தங்களின் அன்றாட வாழ்... மேலும் பார்க்க

C-295: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ராணுவ விமானம்; `Make in India’ வரலாற்றுச் சாதனை!

இந்திய ராணுவத்தின் போக்குவரத்து தேவைகளுக்காக பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய 'ஆவ்ரோ-748' (Avro-748) ரக விமானங்களுக்குப் ஓய்வளித்துவிட்டு, அதிநவீன வசதிகள் கொண்ட 56 புதிய C-295 போக்குவரத்த... மேலும் பார்க்க