செய்திகள் :

ஆந்திரா: பருவமடைந்ததால் மகளை வீட்டில் பூட்டி வைத்த தாய்; 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு;என்ன நடந்தது?

post image

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலுள்ள இச்சாபுரம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமி. இவர் தனது மகளுடன் மூத்த சகோதரன் வீட்டில் தங்கி இருந்தார். இவரது மகள் கடந்த 2022ம் ஆண்டு பருவம் அடைந்தார்.

அதனைத் தொடர்ந்து லட்சுமி தனது மகளை வீட்டை விட்டு வெளியில் அனுப்பாமல் வீட்டிற்குள் அடைத்து வைத்தார். பள்ளிக்கும் அனுப்பவில்லை. வெளியேயும் எங்கும் அனுப்பவில்லை. நீண்ட நாட்களாக அச்சிறுமி வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பதை அறிந்த கிராம மக்கள் இது குறித்து லட்சுமியிடம் விசாரித்தனர்.

அந்த ஊர்க்காரர்கள் எடுத்துச்சொல்லியும் தனது மகளை வெளியில் அனுப்ப மறுத்தார். இதையடுத்து அக்கிராம மக்கள் இது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.

Girl
Girl

உடனே போலீஸாரும், தாசில்தாரும் நேரடியாக அக்கிராமத்திற்கு வந்தனர். லட்சுமியிடம் வீட்டைத் திறக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் லட்சுமி வீட்டைத் திறக்க மறுத்தார். இதையடுத்து அதிகாரிகள் வலுக்கட்டாயமாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றனர்.

அங்கு அவரது மகள் இருட்டறையில் இருந்தார். அப்பெண்ணை வெளியில் அழைத்து வந்தபோது அவரால் சரியாக நடக்கக்கூட முடியவில்லை. 3 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பெண் வெளியுலகத்தைப் பார்த்தார்.

லட்சுமி சற்று மனநிலை சவாலோடு இருந்தார். மூன்று ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டு இருந்த பெண்ணை மீட்டு போலீஸார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி அப்பெண்ணிற்கு கவுன்சிலிங் கொடுத்தார். லட்சுமியையும் போலீஸார் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்து வருகின்றனர்.

`அம்மா என்னை மன்னித்து விடுங்கள்'- டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து குதித்து மாணவர் விபரீதம்

டெல்லியில் பிரபல பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர், அங்குள்ள ராஜேந்திரா பிளேஸ் மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்து இருப்பதாக அவரது தந்தைக்கு மர்ம நபர் போன் செய்தார். ... மேலும் பார்க்க

AI போட்டோ காட்டி Zomato-வில் refund கேட்ட பெண் - ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய பேக்கரி!

மும்பையைச் சேர்ந்த 'டெசர்ட் தெரபி' என்ற பிரபலமான பேக்கரியில், அதிதி சிங் என்ற பெண் ₹2,500 மதிப்புள்ள 'ஆல்மண்ட் பிரலைன் ஸ்ட்ராபெர்ரி டார்க் சாக்லேட்' ஒன்றை சொமேட்டோ மூலம் ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி ச... மேலும் பார்க்க

மறைந்த தந்தையின் வங்கி கடன்; ரூ.18 லட்சம் ரூபாய் கேட்கும் அதிகாரிகள் - செய்வதறியாமல் தவிக்கும் மகன்

பெங்களூருவைச் சேர்ந்த நபரின் தந்தை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமாகியிருக்கிறார்.தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவரது வங்கிக் கணக்குகளை முடிப்பதற்காக தாயுடன் எஸ்.பி.ஐ வங்கிக்கு சென்ற... மேலும் பார்க்க

``30 வயதில் கைவிட்ட காதலன் என்ன செய்வேன்?'' - புலம்பிய பெண்; ஆலோசனை சொன்ன நெட்டிசன்கள்

சமூக வலைத்தள பயன்பாடு அதிகரித்த பிறகு காதலர்களிடையே பிரேக்கப் ஆவது அதிகரித்து வருகிறது. இரவு முழுவதும் போனில் பேசிக் கொண்டிருந்துவிட்டு, பேசி முடிக்கும் போது எதாவது வாய்த்தகராறு ஏற்பட்டாலே பிரேக்கப் ச... மேலும் பார்க்க

kathipara Flyover Metro Bridge : வியக்கவைக்கும் கத்திபாரா மெட்ரோ பாலம் பணிகள்!

kathipara Flyover Metro Bridge kathipara Flyover Metro Bridge kathipara Flyover Metro Bridge kathipara Flyover Metro Bridge kathipara Flyover Metro Bridge kathipara Flyover Metro Bridge kathipara Flyo... மேலும் பார்க்க