செய்திகள் :

ஆந்திரா: மாணவிகளை மசாஜ் செய்யச் சொன்ன பள்ளி ஆசிரியை; சர்ச்சை வீடியோவின் பின்னணி என்ன?

post image

ஆந்திராவில் ஆசிரியை ஒருவர் மாணவிகளைக் கொண்டு தனது கால்களை பிடித்துவிட செய்த சம்பவம் வைரலாகி இருக்கிறது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பந்தபல்லி என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் சுஜாதா.

அவர் வகுப்பில் இருந்த போது இரண்டு மாணவிகளை அழைத்துத் தனது கால் வலிக்கிறது என்று கூறி கால்களை மசாஜ் செய்துவிடும்படி உத்தரவிட்டுள்ளார். மாணவிகள் ஆசிரியையின் கால்களைப் பிடித்து பிடித்துவிட்டனர்.

ஆசிரியைக்கு மசாஜ் செய்யும் மாணவிகள்
ஆசிரியைக்கு மசாஜ் செய்யும் மாணவிகள்

ஆசிரியை தனது போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். தனது காலைத் தூக்கி மற்றொரு இருக்கை மீது வைத்திருந்தார். அவரது காலை மைனர் மாணவிகள் பிடித்து விட்டனர். அந்தக் காட்சியை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுவிட்டனர்.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டது. விசாரணையின் அடிப்படையில் ஆசிரியை சுஜாதா பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், "பணி நேரத்தில் வகுப்பில் கால்களை ஒழுங்கீனமாக வைத்திருந்தது மற்றும் போனில் பேசியது, மாணவிகளை சொந்த தேவைக்குப் பயன்படுத்தியது, பணியைச் செய்யாமல் இருந்தது போன்ற காரணங்களுக்காக சுஜாதா பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பும் சுஜாதா இதே போன்று மாணவிகளை மசாஜ் செய்ய சொல்லி சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

``ரூ.5 லட்சம் சம்பளம்; வேலை இழந்ததால் மனைவி விவாகரத்து'' - டெலிவரி பாயாக மாறிய பட்டதாரி

சீனாவில் பட்டதாரி ஒருவர், தனது அதிக சம்பளம் கொண்ட வேலையை இழந்ததால், மனைவி அவரை விவாகரத்து செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.சீனாவின் ஹாங்சோ நகரைச் சேர்ந்த 43 வயதான கியான்கியான், ஜெஜியாங் பல்கல... மேலும் பார்க்க

மும்பை: ₹500 கோடி மருத்துவக் கல்லூரி தனியார்மயம்; அஜித்பவார் உறவினருக்கா? - மாநகராட்சி பதில் என்ன?

மும்பை புறநகர் பகுதியான கோவண்டியில் 580 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவக் கல்லூரியை மாநகராட்சிக்கு சொந்தமான சதாப்தி மருத்துவமனை நிர்வாகம் கட்டியுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி கட்ட ரூ.500 கோடி செலவிட... மேலும் பார்க்க

`இலையை வைத்து இசை' இணையவாசிகளிடம் கவனம் பெற்ற நபர் - வன அதிகாரி பகிர்ந்த வீடியோ வைரல்

விலை உயர்ந்த கருவிகள் இல்லாமல் சிறிய இலையை வைத்து பலரும் மெய்ப்பிக்கும் வகையில், புலிகள் காப்பக வழிகாட்டி ஒருவர் இனிமையான இசையை வாசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்திய வன அதிகாரி பர... மேலும் பார்க்க

’சிங்கக்குட்டியுடன் விளையாடலாம்’; வினோத சேவையால் சர்ச்சையில் சிக்கிய சீன ஹோட்டல்

சீனாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வாடிக்கையாளர்களைக் கவருவதற்கு ஒரு வினோதமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளனர். தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விருந்தினர்கள் தங்களது அறையில் சிங்கக்குட்டியுடன் விள... மேலும் பார்க்க

Maithili Thakur: ``நான் பாடிய தமிழ் பாடல் வைரலாகி இருக்கு, அதனால்''- பீகாரின் இளம் MLA நெகிழ்ச்சி

பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்தத் தேர்தலில் பிரபலமான நாட்டுப்புறப்... மேலும் பார்க்க

சி.கே. குமாரவேல் குடும்பத்தின் ‘நெக்ஸ்ட்பேஸ்’- அதிநவீன தோல் பராமரிப்பு பிராண்ட் அறிமுகம்

இந்தியாவின் இளம் தலைமுறை அழகு, அடையாளம் மற்றும் தொழில்நுட்பத்தை ஒன்றிணைத்து புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இருப்பினும், இந்தத் தலைமுறை ஆன்லைனில் அழகு மற்றும் தங்களுக்கான தனிப்பட்ட பராமரி... மேலும் பார்க்க