செய்திகள் :

ஆந்திரா: மாணவிகளை மசாஜ் செய்யச் சொன்ன பள்ளி ஆசிரியை; சர்ச்சை வீடியோவின் பின்னணி என்ன?

post image

ஆந்திராவில் ஆசிரியை ஒருவர் மாணவிகளைக் கொண்டு தனது கால்களை பிடித்துவிட செய்த சம்பவம் வைரலாகி இருக்கிறது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பந்தபல்லி என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் சுஜாதா.

அவர் வகுப்பில் இருந்த போது இரண்டு மாணவிகளை அழைத்துத் தனது கால் வலிக்கிறது என்று கூறி கால்களை மசாஜ் செய்துவிடும்படி உத்தரவிட்டுள்ளார். மாணவிகள் ஆசிரியையின் கால்களைப் பிடித்து பிடித்துவிட்டனர்.

ஆசிரியைக்கு மசாஜ் செய்யும் மாணவிகள்
ஆசிரியைக்கு மசாஜ் செய்யும் மாணவிகள்

ஆசிரியை தனது போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். தனது காலைத் தூக்கி மற்றொரு இருக்கை மீது வைத்திருந்தார். அவரது காலை மைனர் மாணவிகள் பிடித்து விட்டனர். அந்தக் காட்சியை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுவிட்டனர்.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டது. விசாரணையின் அடிப்படையில் ஆசிரியை சுஜாதா பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், "பணி நேரத்தில் வகுப்பில் கால்களை ஒழுங்கீனமாக வைத்திருந்தது மற்றும் போனில் பேசியது, மாணவிகளை சொந்த தேவைக்குப் பயன்படுத்தியது, பணியைச் செய்யாமல் இருந்தது போன்ற காரணங்களுக்காக சுஜாதா பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பும் சுஜாதா இதே போன்று மாணவிகளை மசாஜ் செய்ய சொல்லி சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம் | Photo Album

அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை.அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை.அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை.அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப... மேலும் பார்க்க

பிரிந்து 24 ஆண்டுகள்! தொழில் தொடங்க பணம் கொடுத்த முன்னாள் காதலியை தேடும் சீன காதலர்

சீனாவில் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு கடன் கொடுத்த முன்னாள் காதலியைத் தேட, ஊடக உதவியை நாடியுள்ள சம்பவம் கவனம் பெற்று வருகிறது. லீ என்ற அந்த நபர், 24 ஆண்டுகளுக்கு முன்பு மா என்ற தனது முன்னாள் க... மேலும் பார்க்க

ஒரு சேஃப்டி பின் விலை ரூ.69,000 - பிராடாவின் புதிய தயாரிப்பால் வெடித்த விவாதம்!

பிரபல ஃபேஷன் பிராண்டான பிராடா (Prada) சமீபத்தில் ஒரு சேஃப்டி பின்னை ஃபின்னை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விலை சுமார் ரூ.69,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை... மேலும் பார்க்க

பஞ்சாப்: நண்பரிடம் ரூ.500 கடன் வாங்கி லாட்டரி; காய்கறி வியாபாரிக்குக் கிடைத்த ரூ. 11 கோடி பரிசு

ராஜஸ்தான் மாநில வியாபாரி ஒருவருக்கு லாட்டரியில் ரூ.11 கோடி கிடைத்து இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் அமித் செஹ்ரா. காய்கறி வியாபாரியான அமித், பஞ்சாப் மாநில லாட்டரி வாங்க அமித்திடம... மேலும் பார்க்க

Check-Olate: சாக்லேட்டை சுகாதார நினைவூட்டியாக மாற்றிய அப்போலோ குழுமம்!

"இது வெறும் சாக்லேட் மட்டுமல்ல; ஒவ்வொரு பெண்ணையும் தனக்காக ஒரு கணம் ஒதுக்கிக்கொள்ளத் தூண்டும் ஓர் அக்கறையான நினைவூட்டல்."அக்டோபர்2025:மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படும் நிலையி... மேலும் பார்க்க

வீட்டு வாசலில் விமானம், தெருவே ரன்வே! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அமெரிக்க நகரம்

அமெரிக்காவில் உள்ள ஒரு நகரத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாலே விமானம் இருக்கும், தெருக்கள்தான் இங்கு விமான ஓடுதளங்கள்.... படிக்கவே ஆச்சரியமாக உள்ளதா? இந்த நகரம் பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளலாம... மேலும் பார்க்க