செய்திகள் :

ஆன்மிகம் டு நட்பு; நோ சொன்ன இளம்பெண்; AI மூலம் ஆபாசமாக சித்திரித்த சொற்பொழிவாளர் - கைதுசெய்த போலீஸ்!

post image

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சுமித் சர்மா என்பவருடன் சமூக ஊடகம் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. சுமித் சர்மா ஆன்மிகச் சொற்பொழிவு மற்றும் ஆன்மிகம் தொடர்பாக அந்தப் பெண்ணுடன் சாட்டிங் செய்து வந்தார். சுமித் தன்னை ஒரு சாமியார் என்று காட்டிக் கொண்டார். ஆனால் நாளடைவில் சுமித் சர்மா, அந்தப் பெண்ணுடன் நெருங்கிய நட்புடன் பழக விரும்பினார்.

ஆனால் அதற்கு அப்பெண் மறுத்துவிட்டார். அப்படி இருந்தும் சர்மா அப்பெண்ணிற்கு தொடர்ந்து ஆன்லைன் மூலம் தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தார். ஆன்லைனில் அப்பெண்ணை தொடர்ந்து கொண்டே இருந்தார்.

கைது

அதோடு சர்மா, சம்பந்தப்பட்ட பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அப்பெண் மற்றும் அவர் தாயாரின் புகைப்படத்தைப் பதிவிறக்கம் செய்து அவற்றை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆபாசமாகச் சித்திரித்து சமூக ஊடகங்களில் வெளியிட ஆரம்பித்தார்.

இதற்காக இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம், யூடியூப், ஃபேஸ்புக் போன்றவற்றில் அப்பெண்ணின் பெயரில் 10 போலி கணக்குகளைத் திறந்து, அவற்றில் அப்பெண்ணின் சித்திரிக்கப்பட்ட ஆபாச படங்களை வெளியிட்டார். இது குறித்து தெரிய வந்தவுடன் அப்பெண் அகமதாபாத்தில் உள்ள சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் சர்மாவை தேடி வந்தனர். அவர் டெல்லியில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் கூறுகையில், ''செயற்கை நுண்ணறிவு மூலம் குற்றம் சாட்டப்பட்டவர், புகார்தாரர் மற்றும் அவர் தாயாரின் உருமாற்றப்பட்ட நிர்வாணப் புகைப்படங்களையும் காணொளிகளையும் போலி கணக்குகளில் பதிவேற்றியதுடன், புகார்தாரரை மனரீதியாகத் துன்புறுத்தும் மற்றும் சமூகத்தில் அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் அவற்றை பதிவிட்டுள்ளார். புகார்தாரரின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து அவர் மற்றும் அவர் தாயாரின் புகைப்படங்களைப் பதிவிறக்கம் செய்து, இப்படிச் செய்திருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

ஸ்டேஷனில் 8 மணி நேரம்; மருத்துவமனையில் 10 மணி நேரம் - பாலியல் கொடுமை செய்யப்பட்ட சிறுமி அலைக்கழிப்பு

மகாராஷ்டிரா மாநிலம், பீட் என்ற இடத்தைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவரை அவர் உறவினர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். மைனர் பெண்ணை கை, கால்களை கட்டிவிட்டு, கர்ச்சீப்பால் வாயை அடைத்துவிட்டு அந்த நபர்... மேலும் பார்க்க

நெல்லை: விஷம் வைத்து கொல்லப்பட்ட 3 வளர்ப்பு நாய்கள்; நாய் உடலுடன் எஸ்.பி அலுவலகம் வந்த நபர்

நெல்லை மாவட்டம், உகந்தான்பட்டியைச் சேர்ந்தவர் துரை. இவர் தனது வீட்டுக்காவலுக்காக 3 சிப்பிப்பாறை நாய்கள் உட்பட 5 நாய்களை வளர்த்து வந்தார். இதில் சிப்பிப்பாறை நாய்கள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.20 ஆயிரம் முத... மேலும் பார்க்க

சிவகாசி: பெண்ணிடம் நகை, பணம் மோசடி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறை!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி போலீஸ் காலனியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி மீனாட்சி. பழனியப்பன் உடல்நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி மீனாட்சிக்கு இ... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில் வைரநாமம், தங்கம் கொள்ளை? - உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் கருவறைக்குள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டிய, வைரம் பதிக்கப்பட்ட விலைமதிப்பற்ற ஆபரணமான 'வைரநாமம்' திருடப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

`அவளை பிடிக்கவில்லை' - மனைவியை ரூ.1.5 லட்சத்துக்கு விற்று கூட்டுபாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவன்

குஜராத் மாநிலம் பனஸ்காந்தா மாவட்டம் பாலன்பூரில் வசித்து வருபவர் நிகேஷ் பட்டேல். இவர் தனது 26 வயது மனைவி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றுவிட்டதாக கூறி காணவில்லை எனக்கூறி போலீஸில் புகார... மேலும் பார்க்க

புனே: குடிபோதையில் கார் ஏற்றி இருவரைக் கொன்ற சிறுவன்; மகனின் ஜாமீனை ஆடிப்பாடி கொண்டாடிய தந்தை

புனேயில் கடந்த 2024ம் ஆண்டு இரவில் தேநீர் அருந்த வெளியில் வந்த ஒரு பெண் உட்பட இரண்டு எஞ்சினியர்களை மைனர் வாலிபர் ஒருவர் குடிபோதையில் கார் ஏற்றிக் கொன்றார். இக்கொலை சம்பவம் பெரிய அளவில் பேசப்பட்டது. மை... மேலும் பார்க்க