செய்திகள் :

``இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக, நம் முதல்வர் தமிழ்நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்’’ - உதயநிதி

post image

ராணிப்பேட்டையில், இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். காணொளிக்காட்சி வாயிலாக புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக பேசிய உதயநிதி ஸ்டாலின், ``நம்முடைய தமிழ்நாட்டில் ராஜாக்களின் பெயர்களில் நிறைய ஊர்கள் இருக்கின்றன. ராணிகளின் பெயர்களில் இருக்கக்கூடிய சில ஊர்களில், மிகமிக முக்கியமான ஊர் இந்த ராணிப்பேட்டை. அதனால்தான் என்னவோ, இந்த விழாவில் ராஜாக்களை விட ராணிக்கள் அதிகமாக பங்கேற்றிருக்கிறீர்கள்.

ராணிப்பேட்டை அரசு விழாவில் உதயநிதி ஸ்டாலின்...

அதாவது, ஆண்களை விட மகளிர் அதிக அளவில் வந்திருக்கிறீர்கள். 73 ஆயிரம் பேருக்கு நலத்திட்டம் கொடுக்கிறோம் என்றால், அதில் 55 ஆயிரம் பேர் பெண்கள் என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாகவே, நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, பெண்களுடைய முன்னேற்றத்துக்கான அரசாக தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது.

ஆட்சிக்கு வந்த உடனே நம் முதலமைச்சர் போட்ட முதல் கையெழுத்து, மகளிருக்கான விடியல் பயணத் திட்டம் தான். அந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் இந்த நான்கரை வருடங்களில் 820 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் 900 ரூபாயில் இருந்து 1,000 ரூபாய் வரை மகளிர் சேமிக்கிறார்கள். குறிப்பாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் சுமார் 8 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டிருக்கிறார்கள். இது தான் இந்த அரசின் வெற்றி. அதேபோல, கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக கடந்த 26 மாதங்களாக 1.20 கோடி மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் நம் முதலமைச்சர் கொடுத்து கொண்டு வருகிறார்.

இந்த ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு மாதமும் சுமார் 1.70 லட்சம் மகளிர் பயன்பெற்று வருகிறார்கள். வரும் டிசம்பர் மாதம் முதல் இன்னும் கூடுதலாக மகளிருக்கும், யார் யாருக்கெல்லாம் விடுப்பட்டிருக்கிறதோ, அவர்களுக்கும் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.

ராணிப்பேட்டை அரசு விழாவில் உதயநிதி ஸ்டாலின்...

இப்படி பல வகையில், இந்தியாவுக்கே ஒரு எடுத்துக்காட்டு மாநிலமாக, ஒரு எடுத்துக்காட்டு முதலமைச்சராக நம்முடைய முதலமைச்சர் இந்த மாநிலத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துசெல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சியை பெருக்க, உங்களுக்காக தொடர்ந்து உழைக்க நம் முதலமைச்சரும், மக்கள் பிரதிநிதிகள் அத்தனை பேரும் தயாராக இருக்கின்றோம். எனவே, இந்த வளர்ச்சி மென்மேலும் பெருக வேண்டும்; அதற்கு எப்போதும்போல உங்களின் ஆதரவு நம் முதலமைச்சருக்கும், நம் அரசுக்கும் தொடர வேண்டும் என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.

"திமுகவில் உள்ள ஒவ்வொருவரையும் குறிவைத்து தாக்குவதற்கு பாஜக தயாராகிவிட்டது" -அமைச்சர் கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ட்ரூ வேல்யூ ஹோம்ஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு பணம் பெற்று கொண்டு பணி நியமனங்கள் ந... மேலும் பார்க்க

"விசாரணைக் குழு விசாரிக்க வரவில்லை" - தவெக சி.டி.ஆர். நிர்மல்குமார் பேட்டி!

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: காமராஜர் தங்கி இருந்த நினைவகம் சீரமைப்பு - திறந்து வைத்து பெருமிதப்பட்ட உதயநிதி!

ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை ராணிப்பேட்டைக்கு வந்திருந்தார். ... மேலும் பார்க்க

Army Chief: ``அமெரிக்க அதிபருக்கு கூட தெரியாது" - மாணவர்களிடம் மனம் திறந்து உரையாற்றிய ராணுவத் தளபதி

இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதியின் சொந்த ஊர் மத்தியப் பிரதேசத்தின் ரேவா. தன் சொந்த ஊரானா ரேவாவில் உள்ள டிஆர்எஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு மத்தியில் ஜெனரல் உபேந்திரா திவேதி உரையாற்றினார்.... மேலும் பார்க்க

SIR: ``வாக்களார் பட்டியலை சரிபார்ப்பது அவசியம்தான்; ஆனால்'' - மநீம தலைவர் கமல் சொல்வதென்ன?

சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் S.I.R. விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திமுக அரசு, விஜய... மேலும் பார்க்க

"S.I.R. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்" - தவெக தலைவர் விஜய் விளக்கம்

சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் S.I.R. விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திமுக அரசு, விஜய... மேலும் பார்க்க