செய்திகள் :

``இந்தியாவை இந்து ராஷ்டிரம் என்று அறிவிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேவையில்லை" - RSS மோகன் பகவத்

post image

இந்தியா இந்துக்களின் தேசம், இந்து ராஷ்டிரம், பாரதம் என்று ஆர்.எஸ்.எஸ் தொடர்ச்சியாகக் கூறி வருகிறது.

இந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் வரலாற்றில் 3 முறை, காந்தி படுகொலை, எமர்ஜென்சி, பாபர் மசூதி இடிப்பு ஆகிய சம்பவங்களின்போது தடைசெய்யப்பட்டது. சமீபத்தில் நூற்றாண்டு விழா கண்டது.

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இந்தியாவை இந்து ராஷ்டிரம் என்று அறிவிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் (RSS)
ஆர்.எஸ்.எஸ் (RSS)

கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மோகன் பகவத், ``இந்து என்பது வெறும் மதச் சொல் மட்டுமல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுக் கால கலாசார தொடர்ச்சியில் வேரூன்றிய நாகரிக அடையாளம்.

பாரதம் என்பதில் பெருமை கொள்பவர்கள் அனைவரும் இந்துக்கள்தான். பாரதம், இந்து ஆகிய இரண்டு சொற்களும் ஒத்த சொற்கள்தான்.

இந்தியா ஒரு 'இந்து ராஷ்டிரம்' என்று அறிவிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேவையில்லை. அதன் நாகரிக நெறிமுறைகள் ஏற்கனவே அதைப் பிரதிபலிக்கின்றன.

யாரையும் எதிர்க்கவோ அல்லது தீங்கு செய்யவோ ஆர்.எஸ்.எஸ் உருவாக்கப்படவில்லை, மாறாக குணநலன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தி இந்தியாவை உலகளாவிய தலைவராக மாற்றுவதற்குப் பங்களிக்கவே ஆர்.எஸ்.எஸ் உருவாக்கப்பட்டது.

பன்முகத்தன்மைக்கு மத்தியில் பாரதத்தை ஒன்றிணைக்கும் வழிமுறைதான் ஆர்.எஸ்.எஸ் என்று அழைக்கப்படுகிறது" என்று கூறினார்.

மோகன் பகவத் - RSS
மோகன் பகவத் - RSS

சமீபத்தில் மோகன் பகவத், ``ஒரு சில திராவிட கட்சிகள் அவர்களுக்கென வகுத்துக் கொண்ட சில கொள்கைகளுக்கு ஏற்றவாறு அரசியல் சூழலை மாற்றி வைத்திருக்கின்றனர்.

பொதுவெளியில் வேண்டுமானால் அவர்கள் இந்துக்கள் இல்லை எனச் சொல்லலாம். ஆனால், அவர்களின் இதயங்களுக்குத் தெரியும் அவர்கள் இந்துக்கள் என்று.

திராவிட கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் இயற்கையிலேயே இந்துக்கள்தான். அரசியலுக்காக மட்டும்தான் அவர்கள் திராவிட கொள்கைகளைப் பேசுகிறார்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Aishwarya Rai: ``ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கடவுள்" - புட்டபர்த்தியில் ஐஸ்வர்யா ராய் உரை!

ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் நேற்று சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி, நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், சச்சின் டெண்டுல்கர், மத்திய அமைச்சர்கள் ... மேலும் பார்க்க

``குண்டும் குழியுமான சேலம் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு எப்போது?''- மக்களின் அவசரக் கோரிக்கை

சேலம் மாவட்டத்தில் இருந்து பெங்களூருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் அண்மையில் ஆர்.சி.செட்டிப்பட்டி மற்றும் காமலாபுரம் சாலை பகுதிகளில் என இரண்டு மேம்பாலங்கள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப... மேலும் பார்க்க

'முதல்வர் பயணித்த வெளிநாடுகள் 7; ஈர்க்கப்பட்ட முதலீடு 0’ - அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டும் அன்புமணி

தமிழக அரசின் தொழில் முதலீடுகள் சார்ந்து கேள்வி கேட்டு, 'திமுக அரசின் பொய் முதலீடுகள்' என்ற பெயரில் பா.ம.க தலைவர் அன்புமணி ஆவணம் ஒன்றை இன்று சென்னையில் வெளியிட்டிருந்தார்.அன்புமணிஅந்த ஆவணத்தை வெளியிட்ட... மேலும் பார்க்க

இராமேஸ்வரம்: `இந்த அவல நிலைக்கு யார் பொறுப்பு?’- பள்ளி மாணவி குத்தி கொல்லப்பட்ட விவகாரத்தில் கண்டனம்

இராமேஸ்வரத்தில் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காதலிக்க மறுத்ததால் இளைஞர் கொலை செய்ததாகக் கூறப... மேலும் பார்க்க

``நடிகர் விஜய் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துடன் ஒன்றுபட்டுள்ளார்' - அப்பாவு

நெல்லையில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்திற்கு எதிராக விஜய் போராட வேண்டுமென்றால் டெல்லியில் உள்ள தேர்தல்... மேலும் பார்க்க

``பாஜகவுக்கு சாமரம் வீச அதிமுக SIR-ஐ ஆதரிக்கிறது'' - திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ

"2026-ல் முறையற்ற முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டால், நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்" என திமுக சட்டத்துறைச் செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ சென்னையில் நேற்று (நவ.18) நட... மேலும் பார்க்க