செய்திகள் :

`இந்தியா, பாக் பிரச்னையில் அமெரிக்கா ஏன்..?' - காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி!

post image

பஹல்காம் தீவிரவாதத்  தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.

இதன் மூலம்  பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டன.

இதனால் பாகிஸ்தான், இந்திய எல்லை பகுதிகளில் ட்ரோன் மற்றும் பீரங்கி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இந்தியா, பாகிஸ்தான்
இந்தியா, பாகிஸ்தான்

இருப்பினும், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றைச் சுட்டு வீழ்த்தியது.

தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வந்தது.

இந்நிலையில் நேற்று(மே 10) மாலை இரு நாடுகளுக்கிடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான் முதலில் அறிவித்திருந்தார்.

மேலும் ‘அமெரிக்காவின் பேச்சுவார்த்தையை ஏற்று தாக்குதலை நிறுத்தியதற்கு நன்றி’ என்று கூறியிருந்தார்.  

இதற்கிடையே இந்தியா-பாகிஸ்தான் பிரச்னையில் அமெரிக்கா தலையீடு செய்தது குறித்து காங்கிரஸ் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

 ட்ரம்ப்
ட்ரம்ப்

“சண்டை நிறுத்த அறிவிப்பை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் கூறும் முன்பாகவே அமெரிக்கா வெளியிடுகிறது.

இரு நாடுகள் பிரச்னையில் 'நடுநிலை’ என்ற அமெரிக்காவின் கருத்து, பல கேள்விகளை எழுப்புகிறது.

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்ய, நாம் கதவுகளை திறந்து விட்டுள்ளோமா?.

இது தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடி உடனே அனைத்துக் கட்சி கூட்டம் மற்றும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மதுரை : வண்ணத்திரைகளால் மூடப்பட்டு வைரலான 'அசுத்த' கால்வாயை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்!

எந்த கால்வாயை முதலமைச்சர் பார்க்க கூடாது என்று மாவட்ட நிர்வாகத்தினரும், திமுகவினரும் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வண்ணத்திரை கட்டி மறைத்தார்களோ, அதே கால்வாயை முதலமைச்சர் வந்து ஆய்வு செய்தது பரபரப்பை ... மேலும் பார்க்க

மதுரை: 5 கி.மீ நடைபயணம்; அழகிரி வீட்டுக்கு விசிட்... முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ | Photo Album

முதல்வர் ரோடு ஷோமுதல்வர் ரோடு ஷோமுதல்வர் ரோடு ஷோமுதல்வர் ரோடு ஷோமுதல்வர் ரோடு ஷோமுதல்வர் ரோடு ஷோமுதல்வர் ரோடு ஷோமுதல்வர் ரோடு ஷோமுதல்வர் ரோடு ஷோமுதல்வர் ரோடு ஷோமுதல்வர் ரோடு ஷோமுதல்வர் ரோடு ஷோமுதல்வர்... மேலும் பார்க்க

சீனா: "இந்திய எல்லைக்கு அருகில் செல்லாதீர்; மீறினால்..." - சீன தூதரக எச்சரிக்கையின் பின்னணி என்ன?

நேபாளத்திற்குச் சுற்றுலா செல்லும் சீனர்கள், இந்திய எல்லைப் பகுதியில் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறது நேபாள நாட்டில் உள்ள சீன தூதரகம். இந்தியா கடந்த சில மாதங்களாக எல்லைத் தாண்டி வருவோரைக் கட... மேலும் பார்க்க

"வேலையில்லா பட்டதாரிகளை கையிலெடுக்கும் காங்கிரஸ்... பாஜக-வுக்கு எதிராக 'தடாலடி' வியூகம்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலிருந்து, கட்சித் தலைமைக்கு அவ்வப்போது புகார் கடிதங்கள் பறப்பது வழக்கமானது. சமீபத்தில், வித்தியாசமாக ஆலோசனைக் கடிதம் ஒன்று டெல்லிக்குப் பறந்திருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ... மேலும் பார்க்க