செய்திகள் :

“இந்த ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் திருப்திகரமாக இல்லை”- குற்றம்சாட்டும் கிருஷ்ணசாமி

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடந்த 6 மாதங்களாக தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள கிராமங்கள்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் ஏழை எளிய மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய குடிநீர், தெருவிளக்கு, வாறுகால், மயானம் உள்ளிட்ட வசதிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு இருப்பதைக் கண்கூடாக காணமுடிகிறது.

கிருஷ்ணசாமி
கிருஷ்ணசாமி

கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்வதற்காக கடந்த நான்கரை ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகளின் நிதி பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தாலும்கூட, ஊராட்சிகளில் பல்வேறு விதமான தவறான மனநிலைகளோடு அணுகியதன் விளைவாக பல கிராம ஏழை, எளிய மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது.

ஏற்கெனவே கடந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு விதமான விரும்பதகாத சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த ஓராண்டுக்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி அவரது தோழர் முன்னிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்பட்டு அது இந்தியா முழுவதும் எதிரொலித்து, அதன் விளைவாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தொடர்ந்து அதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

கிருஷ்ணசாமி
கிருஷ்ணசாமி

கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட கோவை விமான நிலையம் அருகே 19 வயது பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற குற்றம் செய்யபவர்களுக்கு காவல்துறை மீது அச்சம் ஏற்படாமல் இருப்பது கவலைக்குறியதாக இருக்கிறது. வரும் 2026-ம் ஆண்டு தேர்தல் தொடர்பாக நான் சிந்திக்கவே இல்லை. தற்போது கிராமப்புறங்களுக்கு சென்று மக்களைச் சந்திக்கிறோம். கட்சியை பலப்படுத்தும் பணிகள் நடக்கின்றன.

தேர்தல் குறித்து 2026 ஜனவரி 7-ம் தேதி மதுரையில் நடக்கும் மாநாட்டுக்கு பின்னரே முடிவெடுப்போம். மாநாட்டில், தமிழகத்தில் ஆட்கொல்லியாக, கிராமப்புறங்களின் பொருளாதாரத்தை சீரழிக்கும் மதுவை ஒழிக்க பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும். கனிம வளக்கொள்ளையை கண்டித்தும், படித்த இளைஞர்களின் வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளை முன்வைத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

கிருஷ்ணசாமி

வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழ்நாட்டு மக்களுக்கு விடிவுகாலத்தை உருவாக்கக்கூடிய ஆட்சி அமைப்பது எங்களது சிந்தனையில் உள்ளது. இந்த ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் திருப்திகரமாக இல்லை. இலவசப் பேருந்து அவர்களது விளம்பரத்துக்காக இயக்குகின்றனர். மக்கள் போக்குவரத்து வசதிக்காக கேட்டுகின்றனர். இலவசப் பேருந்தை அவர்கள் கேட்கவில்லை. இதை போல பல விஷயங்கள் இருக்கின்றன.” என்றார்.  

` நிதிஷுக்கு 20 ஆண்டுகள் கொடுத்தது போதும்' - மகனை முதல்வராக்க பீகார் மக்களிடம் லாலு கோரிக்கை

243 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட பீகாரில் இன்று முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு நவம்பர் 11-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும்.இதில், தே... மேலும் பார்க்க

பாமக: "அன்புமணி தனிக் கட்சி தொடங்கலாம்; பெயரையும் நானே சொல்கிறேன்" - ராமதாஸ்

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா கட்சிகளும் தேர்தல் வியூகங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகளில் மும்முரமாகியிருக்கின்றன.ஆனால், பாமக இன்னும் உட்கட்சி மோதலில் இருந்தே மீளமுடியாமல் த... மேலும் பார்க்க

'2 மணி நேரத்துக்கு மேல் கூட்டம் காத்திருந்தால்...' - அரசியல் கட்சிகளின் பரப்புரை நெறிமுறைகள்!

அரசியல் கட்சிகளின் பரப்புரை கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து சமர்பிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மா... மேலும் பார்க்க

"கூட்டணி வச்சதுதான் விஜயகாந்த் செய்த தவறு" - சீமான் கூறுவதென்ன?

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி பேரங்கள், கட்சித் தாவல்கள், அரசியல் வியூகங்கள், சர்ச்சைகள், அதிகாரப்போட்டிகள் எல்லாம் தீவிரமடையத் தொடங்கியிருக்கின்றன. 'INDIA' கூட்டணி, 'NDA' கூட்டணி என... மேலும் பார்க்க

டிமாண்ட் ஏற்றும் தேமுதிக டு ஆளுங்கட்சியிடமே கறந்த இலைக்கட்சி மா‌.செ! - கழுகார் அப்டேட்ஸ்

ஆலோசனையில் அ.தி.மு.க!டிமாண்ட் ஏற்றும் தே.மு.தி.க...வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பாக, தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தே.மு.தி.க கலந்துக்கொண்டதுதான் அ... மேலும் பார்க்க

பீகார் தேர்தல்: 121 தொகுதிகள்; 1,314 வேட்பாளர்கள்; நட்சத்திர வேட்பாளர்கள் யார் யார்?

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படிடையில் முதற்கட்ட வாக்குபதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.121 தொகுதிக்கான சட்டமன்றத் தேர... மேலும் பார்க்க