செய்திகள் :

”இன்று அரசியலுக்கு வரக்கூடிய நடிகர்கள் அரசியலிலும் நடிக்கிறார்கள்!” - ராஜேந்திர பாலாஜி

post image

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முந்தைய காங்கிரஸ் ஆட்சியைவிட பிரதமர் மோடி ஆட்சியில்தான் தமிழகத்துக்கு அதிக நிதி வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி கேட்ட அத்தனை திட்டங்களையும் பாரதிய ஜனதா அரசு வழங்கியது. பா.ஜ.கவிற்கு, அ.தி.மு.க. அடிமையாக இல்லை. நாங்கள் அவர்களோடு அன்போடுதான் இருக்கிறோம். இது மக்களுக்கும் தெரியும்.

ராஜேந்திர பாலாஜி

டெல்லி சென்றால் ஒரு மாதிரியும், சென்னைக்கு வந்தால் ஒரு மாதிரியும் இருப்பது நாங்கள் அல்ல. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிதான் அடிமைத்தனமான கூட்டணி. தேர்தல் குறித்து யார் கருத்து கூறினலும் அ.தி.மு.க. கூட்டணிதான் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்கிறார்கள். இதை பொறுக்க முடியாத சிலர் அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என்கிறார்கள். ரூ.200 சினிமா டிக்கெட்டை ரூ.2 ஆயிரத்துக்கு விற்பதும் ஊழல்தானே? எம்.ஜி.ஆர். நடிகராக இருந்தார். ஆனால், அவர் அரசியலில் நடிக்கவில்லை.

இன்று அரசியலுக்கு வரக்கூடிய நடிகர்கள் அரசியலிலும் நடிக்கிறார்கள். இந்த நடிப்பை நிச்சயம் மக்கள் ஏற்க மாட்டார்கள். பட்டாசு, தீப்பெட்டித் தொழிலுக்கு பா.ஜ.க அரசு எதுவும் செய்யவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசிடம் பேசி ஜி.எஸ்.டி.யை குறைத்தோம். 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை காப்பியடித்து தி.மு.க. தேர்தல் அறிக்கையாக வெளியிட்டது.

ராஜேந்திர பாலாஜி

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு முன்னர் பொது மக்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும் கருத்து கேட்டு அதனை ஒருங்கிணைத்து எடப்பாடி பழனசாமி கவனத்துக்கு கொண்டு சென்று அதன் பின்னர் வெளியிடுவோம். தி.மு.க. ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் அதில் இருந்து தப்பிக்க, எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். வருங்காலங்களில் மக்களை தி.மு.க. ஏமாற்ற முடியாது. இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு மிகப்பெரிய தோல்வியை மக்கள் பரிசாகத் தருவார்கள்” என்றார்.

`பட்டா இருந்தும் மின்சாரம் இல்லை' - 31 ஆண்டுகளாக இருளில் வாழும் 138 அருந்ததியர் குடும்பங்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், வடஆண்டிப்பட்டு கிராமம், கௌதம புத்தர் நகரில் வசித்து வரும் 138 அருந்ததியர் சமூக குடும்பங்களுக்கு அரசால் பட்டா வழங்கப்பட்டிருந்தாலும், இதுவரை அந்த பட்டாக்க... மேலும் பார்க்க

கேரளா: தலைநகர் தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க தலைவர்கள் - என்.டி.ஏ கூட்டணியில் களேபரம்!

கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆகியவை தேர்தலுக்கு தயாராகி வர... மேலும் பார்க்க

"அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று என்று கேட்பதில் தவறு கிடையாது!" - சொல்கிறார் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம்... மேலும் பார்க்க

ராகுலா, பிரியங்காவா? - கேரளா, அஸ்ஸாம் தேர்தலில் வெற்றிபெற்று செல்வாக்கை நிரூபிக்கப்போவது யார்?

கேரளா, அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த இரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தல் காங்கிரஸ் தலைமைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக கரு... மேலும் பார்க்க

"அந்த போன்கால் வரட்டும்!" - காத்திருக்கும் அறிவாலயம்

நேற்று பிப்.17-ம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாள... மேலும் பார்க்க

DMK - ADMK : `6 இடங்களுக்குதான் இத்தனை அக்கப்போரா?' - கலக்கத்தில் தவிக்கும் கழகங்கள்! | மாநிலங்களவை

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களிலிருந்து, காலியாக உள்ள 37 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வேட்புமனு துவங்கி, மாரச் 16-ம் தேதி... மேலும் பார்க்க