செய்திகள் :

இன்ஸ்டா நட்பு; தன்பாலின உறவு - திருமணத்திற்கு மறுத்த பார்ட்னரை கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபர்

post image

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள நாகபள்ளி என்ற இடத்தை சேர்ந்த சதீஷ்குமார்(30) என்பவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சூரஜ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி இன்ஸ்டாகிராம் மூலம் சாட்டிங் செய்து கொண்டனர். அவர்களது நட்பு நாளுக்கு நாள் அதிகரித்து ஒரு கட்டத்தில் அது தன்பாலின உறவாக மாறியது.

இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தனர். இதனால் சூரஜ் சதீஷ்குமாரிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டார். ஆனால் சதீஷ்குமார் திருமணத்திற்கு தயக்கம் காட்டினார். சதீஷ்குமாருக்கு ஏற்கனவே சொந்த ஊரில் திருமணமாகிவிட்டது.

ஊரில் கேரேஜ் தொழில் செய்து வந்தார். திருமணத்திற்கு மறுத்ததால் நேரில் பார்த்து சம்மதிக்க வைக்கலாம் என்று கருதி சூரஜ் ஒடிசாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலிக்கு வந்தார்.

கட்சிரோலிக்கு வந்த பிறகுதான் சதீஷ்குமாருக்கு ஏற்கனவே திருமணமான விவகாரம் சூரஜிற்கு தெரிய வந்தது. ஆனாலும் இரண்டு நாட்கள் சதீஷ்குமாருடன் சூரஜ் இருந்தார். சூரஜ் தனது கிராமத்திற்கு புறப்பட முடிவு செய்தார்.

சதீஷ்குமார் அவரை தனது காரில் அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அழைத்து சென்றார். தேவ்டா என்ற கிராமத்திற்கு வந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சதீஷ்குமார் தன்னிடம் ஏற்கனவே திருமணமான விசயத்தை மறைத்துவிட்டதாக கூறி சூரஜ் வாக்குவாதம் செய்தார்.

இந்த வாக்குவாதம் முற்றியது. இதனால் சூரஜ் தன்னுடன் எடுத்து வந்திருந்த கத்தியை எடுத்து சதீஷ்குமாரை குத்தினார். அவர் சதீஷ்குமாரை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே சதீஷ் குமார் இறந்துவிட்டார். அங்கிருந்து சூரஜ் தப்பித்து செல்ல முயன்றார். ஆனால் கிராம் மக்கள் அவரை பிடித்து அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரை கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"எதிர்க்கட்சியினருக்கு சிகிச்சை பெறக்கூட உரிமையில்லை" - திரிணாமுல் MP மீது தாக்குதல்; மம்தா கண்டனம்

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி நேற்று தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள சோனர்பூர் என்ற இடத்திற்குச் சென்றார். தேர்தலில் அக்கட்சி சந்தித்த பெரும் தோல்வியைத் தொடர்ந்து ... மேலும் பார்க்க

`சாக அனுமதி தாருங்கள், மனைவியின் சித்ரவதை தாங்கமுடியவில்லை'- குஜராத் வாலிபர் கலெக்டருக்கு கடிதம்

குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்தவர் கிரித் பட்டேல். இவருக்கு முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி மூலம் குழந்தைகள் இருக்கின்றன. தற்போது இரண்டாவது மனைவிக்கும... மேலும் பார்க்க

ஐடி வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டும் பெண்; ₹60,000 மாத வருமானம்! ஏன் இந்த முடிவு?

காலை 9 மணி லாகின், இரவு 9 மணி லாக் அவுட், நடுநடுவே காதைக் கிழிக்கும் மீட்டிங்குகள், நள்ளிரவில் வரும் 'ப்ரொடக்‌ஷன் இஷ்யூ' அழைப்புகள்... பல இளைஞர்களின் கனவாக இருக்கும் ஐடி வேலை, சிலருக்கு மன அழுத்தத்தின... மேலும் பார்க்க

`ஆபாச பேச்சு' - பிரபல இன்ஸ்டா தம்பதி கிருஷ், ஐஸ்வர்யா மீது சைபர் க்ரைமில் புகார்!

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் பிரபலமடைந்த தம்பதி கிருஷ் - ஐஸ்வர்யா. இவர்களது சமூக வலைதள பக்கங்களை ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தம்பதியின் சமூக வலைதள பக்கத்தில் ஆபாச ... மேலும் பார்க்க

7 நாடுகள், 23 துறைமுகங்கள் - உலகம் முழுக்க கொகைன் சப்ளை செய்துவிட்டு இந்தியா வந்து சிக்கிய கப்பல்!

குஜராத் மாநிலம் முந்த்ராவில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்த கப்பலில் கடலோர பாதுகாப்பு படையினர் ரெய்டு நடத்தினர். இதில் 115 கிலோ கொகைன் போதைப்பொருள் இருந்தது க... மேலும் பார்க்க

`கூண்டுக்குள்' குழந்தைகள்.. கைகொடுக்கும் செல்லப்பிராணிகள்; 'Pet parenting' தரும் ஆச்சர்ய மாற்றங்கள்!

"அம்மா... டாமிக்கு சாப்பாடு வெச்சாச்சா?"நாய் அல்லது பூனை வளர்க்கும் வீடுகளில், குழந்தைகள் அடிக்கடி கேட்கும் கேள்வி இது. வீட்டைக் காக்க நாய்களும், எலிகளைப் பிடிக்க பூனைகளையும் வளர்த்த காலம் மாறிவிட்டது... மேலும் பார்க்க