செய்திகள் :

`இரட்டை இன்ஜின் அரசு தேவை.. திமுக ஆட்சியின் கவுன்ட்டவுன் ஆரம்பம்!'- மதுராந்தகத்தில் பிரதமர் மோடி உரை

post image

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``பாரதா மாதா வாழ்க... என் சகோதர சகோதரிகளே வணக்கம். 2026-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் என் முதல் பயணமாக ஏரி காத்த ராமர் பூமியான மதுராந்தகம் வந்துள்ளேன். இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள், நேதாஜியோடு சுதந்திர போராட்டத்தில் பல தமிழர்கள் பங்கேற்றனர்.

வீரம், நாட்டுப்பற்று தமிழக மக்களின் நாடி, நரம்புகளில் நிறைந்துள்ளது. 2026-ல் எனது முதல் பயணம் இது. NDA கூட்டணியை மக்கள் விரும்புகின்றனர். ஆட்சி மாற்றத்திற்கு தமிழ்நாடு தயாராகிவிட்டது. மேடையில் உள்ள தலைவர்களே தமிழக எதிர்காலத்தைத் தீர்மானிப்பார்கள். தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைந்த ஊழலற்ற ஆட்சியை அமைக்க வேண்டும். திமுக ஆட்சிக்கான கவுன்ட்டவுன் ஆரம்பம்.

கரப்ஷன், மாஃபியா, கிரிமினல் போன்ற விஷயங்களுக்கு ஆதரவு கொடுக்கும் அரசு இது. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் ஊழல் இருக்கிறது என்று குழந்தைகளுக்கும் தெரியும். இங்கு ஒரு குடும்பத்துக்கான ஆட்சி நடக்கிறது. ஜனநாயகம் அற்ற அரசு இது. கலாசாரத்தை வசைப்பாடுகிறது திமுக அரசு. திமுக-வின் கொடூர ஆட்சியில் இருந்து தமிழகத்தை விடுவிப்போம்.

11 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திற்கு மும்மடங்கு நிதியை நாங்கள் தந்திருக்கிறோம். காங்கிரஸ் அளித்த நிதியை விட மும்மடங்கு அதிகமாக அளித்திருக்கிறோம். வரலாறு காணாத வளர்ச்சியை பாஜக அரசு கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி இப்போது பின்னோக்கி செல்கிறது. தமிழ்நாட்டுக்கு இரட்டை இன்ஜின் அரசு தேவை என்று மக்கள் விரும்புகின்றனர்.

விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் NDA கூட்டணி ஆதரவாக இருக்கும். தமிழ்நாட்டு வளர்ச்சியில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கண்முன்னே போதைக்கு சீரழிகிறார்கள் நம் குழந்தைகள். மத்திய அரசுடன் இணைந்த மாநில அரசு வேண்டும்.

குற்றங்களைக் கட்டுக்குள் வைத்திருந்தார் ஜெயலலிதா. சிறப்பாக செயல்பட்டார் அவர். தமிழ் கலாசாரத்தின் எதிரி திமுக தான். தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை நேசிக்கிறேன். வாக்கு வங்கி அரசியலை திமுக நடத்துகிறது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை திமுக பிரச்னையாக்கியது திமுக. தமிழகத்தை வளர்ச்சி நோக்கி நகர்த்த மாற்றம் தேவை" என்று திமுகவை விமர்சித்து பேசியிருக்கிறார்.

நாடாளுமன்றம்: `இடைநீக்கங்கள், பதில் இல்லா கேள்விகள்' - முடங்குகிறதா ஜனநாயகத்தின் இதயம்?

நாடாளுமன்றம்இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, உலகிலேயே மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. நமது ஜனநாயகத்தின் இதயமாகத் திகழும் நாடாளுமன்றம், மக்களவை மற்றும் ... மேலும் பார்க்க

"2 அரசுகளும் அலைக்கழித்தால் எங்கே போவது?" - நயினார் நாகேந்திரனிடம் குமுறிய அங்கன்வாடி ஊழியர்கள்

காலமுறை ஊதியம், பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே 10வது நாளாக தொடர் காத்திருப்பு... மேலும் பார்க்க

பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்!

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே கோவை வடக்கு தொகுதியில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. பாஜக-வின் சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன், அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிழலான சந்திர... மேலும் பார்க்க

"மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?"- மீண்டும் எதிர்வினை ஆற்றிய மாணிக்கம் தாகூர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக- காங்கிரஸ் இடையே தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.அதிக சீட்டுகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.இந்தச் ச... மேலும் பார்க்க

இந்தியா முழுவதும் விவசாய மற்றும் தொழிலாளர் சங்கம் போராடுவது ஏன்? 6 புள்ளிகள்|Quick Points

இன்று இந்தியா முழுவதும் தொழிலாளர் சங்கங்களும், விவசாய சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றன. இது நாடு முழுவதுமே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்திற்கான காரணத்தை 6 புள்ளிகளில் தெரிந்துகொ... மேலும் பார்க்க