செய்திகள் :

இளம்பெண் கூட்டு பாலியல் கொடுமை வழக்கு; `எம்.எல்.ஏ சரவணனை ஏன் கைது செய்யவில்லை?' - வலுக்கும் கண்டனம்!

post image

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர், பாலமுருகன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். அவரது நண்பர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபால். இவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாக உள்ளார். இவர்கள் இருவரும் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் (தவெக நிர்வாகி) ஒருவரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அவரை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். 

ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம்

ராமநாதபுரம் அருகே  ஏர்வாடி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, இருவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்த போதுதான், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அவருக்குத் தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் உடனே இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவுசெய்ததுடன் கைதுசெய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், “ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ சரவணன் கூறியதன் பெயரிலேயே பாலமுருகன் என்னை அழைத்துச் சென்றார். அதனை நம்பிதான் பாலமுருகனுடன் காரில் சென்றேன். ராமநாதபுரத்தில் இருந்து ஒருவர் வந்து கொண்டிருக்கிறார்.

ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம்

அதுவரை இந்த அறையில் இருங்கள் எனச் சொல்லிவிட்டு என்னை அங்கு உட்கார வைத்தார் பாலமுருகன். பின்னர் சிறிது நேரத்தில் கூல்டிரிங்க்ஸ் கொடுத்தார். சிறிது நேரத்தில் மயக்கமானேன். அதன் பின்னர்தான் நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. நான் கண் விழித்துப் பார்க்கும்போது அறையில் யாருமே இல்லை. அழுது கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினேன். பின்னர் நான் அளித்த புகாரின்பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டாலும் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் சொல்லித்தானே என்னை அழைத்துச் சென்றார்கள்.

அப்போது ஏன் சரவணனை விசாரிக்கவில்லை? இது குறித்து கட்சி தலைமையிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரு சொந்தக் கட்சி நிர்வாகியால் கட்சியின் பெண் உறுப்பினருக்கே இந்த நிலைமையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார், அந்தப் பெண். இந்த நிலையில், `ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணனைக் கைதுசெய்ய வேண்டும், தலைமைக்கும் இந்த விவகாரம் தெரியும் என அந்தப் பெண் கூறுகிறார். அப்படியென்றால் யார் அந்த தலைமை. ஒரு பெண் அமைச்சருக்கும் தெரியும் என்கிறார்.

அனைத்து மகளிர் காவல் நிலையம்

அப்படியென்றால் யார் அந்த பெண் அமைச்சர்?' என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது எக்ஸ் தளத்தில் பதிவுசெய்துள்ளனர். அத்துடன் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.   

"இன்ஸ்டா காதலை கைவிட மறுத்த தங்கை; கொலை செய்த அண்ணன்" – ஆணவக் கொலையா? - போலீஸாரின் விளக்கம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகிலுள்ள தெற்குமயிலோடை அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி எஸ்தர் பாலின். இவர்களுக்கு சிவஞானம் என்ற மகனும், அபிசெல்வி என்ற மகளும் உள்ளனர். இதில், பள... மேலும் பார்க்க

`என் மகள் இறந்த மாதிரியே, நானும் சாகப் போகிறேன்!’ - ஆட்டோ ஓட்டுநரின் விபரீத முடிவு; பகீர் பின்னணி!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகேயுள்ள சக்கரகுப்பம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரஜினி (வயது 41). இவரின் மனைவி கோமதி. இவர்களின் 15 வயது மகள் தர்ஷினி, கடந்த ஏப்ரல் மாதம் ... மேலும் பார்க்க

சென்னை: "ஐயா, என் மனைவிய கொன்னுட்டேன்" - 54 வயது பெண்மணியைக் கொடூரமாகக் கொன்ற 68 வயது முதியவர்

சென்னை அண்ணாநகர் கிழக்கு சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (68). இவரின் மனைவி சாந்தி (54). கடந்த 2010-ம் ஆண்டு ஏகாம்பரம் தற்கொலை செய்து கொண்டார். அதனால் சாந்தி, 2016-ம் ஆண்டு முதல் அதே பகுதியை... மேலும் பார்க்க

விழுப்புரம்: சிறுமியை மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமை; கதறிய குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் பெற்றோரை இழந்த 14 வயது சிறுமி ஒருவர், தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்ற நபர், அந்தச் சிறுமி... மேலும் பார்க்க

போலீஸ்காரரிடமே தங்க செயின், செல்போன் திருட்டு - வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் அலறும் பயணிகள்!

காஞ்சிபுரம் டவுன் வ.உ.சி நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் அக்‌ஷய்பிரதீப் (வயது 32). செங்கல்பட்டு காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் அண்மையில், உறவினரின் வீ... மேலும் பார்க்க

கோவை: கடத்தப்பட்ட இளைஞர்கள்; ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த காவலர்கள் - அதிர்ச்சி சம்பவம்

கோவை மாவட்டம், போத்தனூரை அடுத்த சித்தண்ணபுரம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் நவீன் (29). இவர் வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் தங்கியிருந்து ஆன்லைன் டிரேடிங் செய்து வந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி மதியம்,... மேலும் பார்க்க