செய்திகள் :

`தளபதி படம் பார்ப்பீங்களா?’ - அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுத்து ரீல்ஸ் போட்ட தவெக நிர்வாகி!

post image

விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன் தினம் பத்துக்கும் மேற்பட்ட தன்னுடைய ஆதரவாளர்களுடன் அந்தப் பள்ளிக்குச் சென்ற த.வெ.க-வின் காணை ஒன்றியச் செயலாளர் ஜான்பீட்டர், தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றார்.

அங்கிருந்த தலைமை ஆசிரியரிடம், `பள்ளிக்கூடம் எப்படி நடக்கிறது?’ என்று கேள்வி எழுப்பினார். அதில் குழம்பிப் போன தலைமை ஆசிரியர், `நன்றாக நடக்கிறது’ என்று பதிலளித்தார்.

தொடர்ந்து, `இங்கு எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள்… எப்படி படிக்கிறார்கள்… ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்துகிறார்களா…’ என்று கல்வித்துறை அதிகாரிகளைப் போல கேள்வி எழுப்பினர் த.வெ.க நிர்வாகிகள்.

தலைமை ஆசிரியர் அறையில் தவெக நிர்வாகிகள்

அதற்கு அமைதியாக பதிலளித்த தலைமை ஆசிரியரிடம், `நடப்பது எங்கள் தளபதி ஆட்சி. பார்த்து நடந்துக்கங்க’ என்று கூறிவிட்டு, வகுப்பறைகளைப் பார்வையிட்டனர். அப்போது ஒரு வகுப்பறைக்குள் சென்ற அவர்கள், `நாங்கள் யார் தெரியுமா? உங்களுக்கு தளபதி விஜய்யை தெரியுமா? அவரின் படங்களைப் பார்ப்பீர்களா? இப்போது அவர்தான் முதலமைச்சர்.

நாங்கள் டி.வி.கே கட்சியில் இருந்து வர்றோம்’ என்று சொன்னதும் மாணவர்கள் ஆரவாரமாக விசிலடித்தனர். தொடர்ந்து அவர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர்கள், `நடப்பது நம் தலைவர் தளபதியின் ஆட்சி.

அதனால்தான் ஆய்வு செய்ய வந்தோம்’ என்று கூறி மாணவர்களிடம் புத்தகங்களை வாங்கிப் பார்த்தனர். அதன் பிறகு அங்கிருந்து சென்ற அவர்கள், இந்த அனைத்து நிகழ்வுகளையும் ரீல்ஸ் வீடியோவாக தங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றனர். இந்த விவகாரம் பெற்றோர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

'நல்ல கேள்வி.. அடுத்த கேள்வி! - டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறித்து RTI-யில் கிடைத்த விநோத பதில்!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை எத்தனை? அவற்றில் பள்ளி, கல்லூரிகளின் அருகிருந்த கடைகள் எத்தனை? அவற்றுள் எத்தனை கடைகள் மூடப்பட்டிருக்கின்றன? போன்ற தகவல்களை சமூக ஆர்வலர் ஒருவர் RTI மூலம் டா... மேலும் பார்க்க

`Reels எடுத்து Post செய்ய தான் சிங்கப்பெண் பிரிவா? தவெக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுங்கள்'- உதயநிதி

ஸ்ரீவைகுண்டத்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்... மேலும் பார்க்க

'முதல்வர் விஜய்யா.. ஸ்டாலினா?' டு 'எனக்கு எந்த அதிகாரமும் இல்லங்க' தவிக்கும் மாண்புமிகு! | கழுகார்

பதக்கத்தால் வெடிக்கும் பஞ்சாயத்து!'முதல்வர் விஜய்யா.. ஸ்டாலினா..'தமிழக காவல்துறை பணியில் பத்து ஆண்டுகள் நிறைவு செய்து, எந்தவித தண்டனையும் பெறாமல் தூய பணிக் காலத்தை கொண்ட காவல் அதிகாரிகளுக்கு, முதல்வர்... மேலும் பார்க்க

"சிங்கப்பெண் படையின் முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா?" - தூத்துக்குடி சம்பவத்திற்கு பழனிசாமி கண்டனம்

தூத்துக்குடியில் நடந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். "தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண்... மேலும் பார்க்க

அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்பாகும் பாலிமர், நியூஸ் தமிழ், தமிழ் ஜனம் - சர்ச்சைக்கு முடிவா ?

தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒளிபரப்பில் இருந்து பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் மற்றும் தமிழ் ஜனம் ஆகிய மூன்று செய்தி சேனல்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்பட்டிருந்தது சர்ச... மேலும் பார்க்க

’திமுக கூட்டணியில் இப்போதைய சூழலில் இடம்பெற இயலாது!’ – சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அதிரடி

கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நீட், சிபிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து மக்... மேலும் பார்க்க