செய்திகள் :

'நல்ல கேள்வி.. அடுத்த கேள்வி! - டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறித்து RTI-யில் கிடைத்த விநோத பதில்!

post image

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை எத்தனை? அவற்றில் பள்ளி, கல்லூரிகளின் அருகிருந்த கடைகள் எத்தனை? அவற்றுள் எத்தனை கடைகள் மூடப்பட்டிருக்கின்றன? போன்ற தகவல்களை சமூக ஆர்வலர் ஒருவர் RTI மூலம் டாஸ்மாக் நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார்.

அதற்கு டாஸ்மாக் நிறுவனம் கொடுத்திருக்கும் பதில் வினோதமாகவும் அதிர்ச்சியளிக்கும் வகையிலும் இருக்கிறது.

 டாஸ்மாக்
டாஸ்மாக்

காசிமாயன் என்கிற சமூக ஆர்வலர் கடந்த மாதம் மே 19 ஆம் தேதி டாஸ்மாக் நிறுவனத்திடம் சில தகவல்களை கேட்டு RTI பதிவு செய்திருக்கிறது செய்திருக்கிறார். அதற்கான பதிலை டாஸ்மாக் நிறுவனம் இப்போது கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் எத்தனை டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன? என ஒரு தகவலை காசி மாயன் கேட்டிருக்கிறார். அதற்கு ``கோப்பு நிலுவையில் உள்ளது தகவல் வழங்க இயலாது" என டாஸ்மாக் நிறுவனம் பதில் கூறியிருக்கிறது.

அதற்கு அடுத்ததாக, `பள்ளி, கல்லூரி, கோவில்களின் அருகே எத்தனை கடைகள் கண்டறியப்பட்டன?

அவற்றுள் எத்தனை கடைகள் மூடப்பட்டன அந்த கடைகளுடைய நம்பர் என்ன?

அந்தக் கடைகளில் எத்தனை பணியாளர்கள் பணியில் இருந்தனர்?

அவர்களுக்கு எங்கே மாற்றுப்பணி வழங்கப்பட்டிருக்கிறது?' போன்ற தகவல்களையும் கேட்டிருந்தார். ஆனால், டாஸ்மாக் நிறுவனம் வினோதமாக 'கேள்வி 1 க்கு கூறிய பதிலே இதற்கும் பொருந்தும்' என 'கோப்பு நிலுவையில் உள்ளது' என்கிற பதிலையே அத்தனை கேள்விகளுக்கும் மேற்கோள் காட்டியிருக்கிறது.

அதாவது, 'நல்ல கேள்வி...அடுத்த கேள்வி...' என சினிமா காமெடி பாணியில் பதில் கூறியிருக்கிறார்கள்.

காசி மாயன்
காசி மாயன்

'டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம் என முதல்வர் அறிவுப்பு வெளியிடுகிறார். ஆனால், தமிழகத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. அவற்றில் மூடப்பட்ட கடைகள் எத்தனை? போன்ற அடிப்படையான தகவலை கூட டாஸ்மாக் நிறுவனம் வழங்க மறுக்கிறது. இது டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையே இல்லையோ என்கிற கேள்வியையும் எழுப்புகிறது' என்கிறார் ஆர்.டி.ஐ போட்ட சமூக ஆர்வலர் காசி மாயன்.

எத்தனை டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன என்பது ஒரு அடிப்படையான தகவல். அதைக் கூட வெளியில் கூற மறுப்பதன் மர்மம் என்னவென்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும்

`தளபதி படம் பார்ப்பீங்களா?’ - அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுத்து ரீல்ஸ் போட்ட தவெக நிர்வாகி!

விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன் தினம் பத்துக்கும் மேற்பட்ட தன்னுடைய ஆதரவாளர்க... மேலும் பார்க்க

`Reels எடுத்து Post செய்ய தான் சிங்கப்பெண் பிரிவா? தவெக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுங்கள்'- உதயநிதி

ஸ்ரீவைகுண்டத்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்... மேலும் பார்க்க

'முதல்வர் விஜய்யா.. ஸ்டாலினா?' டு 'எனக்கு எந்த அதிகாரமும் இல்லங்க' தவிக்கும் மாண்புமிகு! | கழுகார்

பதக்கத்தால் வெடிக்கும் பஞ்சாயத்து!'முதல்வர் விஜய்யா.. ஸ்டாலினா..'தமிழக காவல்துறை பணியில் பத்து ஆண்டுகள் நிறைவு செய்து, எந்தவித தண்டனையும் பெறாமல் தூய பணிக் காலத்தை கொண்ட காவல் அதிகாரிகளுக்கு, முதல்வர்... மேலும் பார்க்க

"சிங்கப்பெண் படையின் முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா?" - தூத்துக்குடி சம்பவத்திற்கு பழனிசாமி கண்டனம்

தூத்துக்குடியில் நடந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். "தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண்... மேலும் பார்க்க

அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்பாகும் பாலிமர், நியூஸ் தமிழ், தமிழ் ஜனம் - சர்ச்சைக்கு முடிவா ?

தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒளிபரப்பில் இருந்து பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் மற்றும் தமிழ் ஜனம் ஆகிய மூன்று செய்தி சேனல்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்பட்டிருந்தது சர்ச... மேலும் பார்க்க

’திமுக கூட்டணியில் இப்போதைய சூழலில் இடம்பெற இயலாது!’ – சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அதிரடி

கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நீட், சிபிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து மக்... மேலும் பார்க்க