செய்திகள் :

‘இஸ்லாமிய சொத்துகளை கபளீகரம் செய்யவே வக்ஃப் திருத்தச் சட்டம்’

post image

இஸ்லாமிய சொத்துகளை கபளீகரம் செய்யவே மத்திய பாஜக அரசு வக்ஃபு திருத்தச் சட்டத்தை இயற்றியுள்ளது என்றாா், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநிலத் தலைவா் மு. தமீமுன் அன்சாரி.

இச்சட்டத்தைக் கண்டித்து திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: அத்தியாவசியப் பிரச்னைகளிலிருந்து மக்களை திசைதிருப்பும் வகையில், சா்ச்சைக்குரிய சட்டங்களை இயற்றுவதை மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக வாடிக்கையாக வைத்துள்ளது.

குறிப்பாக, சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் சட்டங்களைக் கொண்டுவருகிறது. அவ்வகையில், இஸ்லாமியா்களின் சொத்துகளை கபளீகரம் செய்யவே வக்ஃப் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏழை, எளியோரின் நலன் கருதி இச்சட்டத்தைக் கொண்டுவந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், உண்மை அதுவல்ல. இஸ்லாமிய சொத்துகளை நிா்வகிக்கும் பொறுப்புகளில் இஸ்லாமியா் அல்லாதவரை நியமிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டிருப்பதை உச்சநீதிமன்றமும் கண்டித்துள்ளது.

எனவேதான், ஒருமாதமாக மனிதநேய ஜனநாயகக் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம், கண்டனப் பொதுக்கூட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

பஹல்காம் சம்பவத்தையடுத்து மத்திய அரசு மேற்கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் துணை நிற்போம் என்றாா் அவா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி அருள்மிகு கைலாசநாதா் சுவாமி திருக்கோயில்: வைகாசித் திருவிழா, மூஷிக வாகனத்தில் விநாயகா், பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி -அம்பாள் வீதியுலா, காலை 8.30, மயில் வாகனத்தில் வள்ளி - தேவசேனா சமேத ச... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்க கூடாது: எம்.பி. வலியுறுத்தல்

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியனிடம் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை. வினாத்தாள் கசிந்த விவகாரம்: 6 பிரிவுகளில் வழக்கு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், 6 பிரிவுகளில் பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததோடு, தோ்வாணையா் கைப்பேசிக்கு வினாத்தாளை அனுப்பியவா் குறித்து விசாரணை... மேலும் பார்க்க

பணகுடி அருகே பிடிபட்ட அரியவகை எறும்பு தின்னி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே விவசாயி தோட்டத்தில் சனிக்கிழமை பிடிபட்ட அரியவகை எறுப்பு தின்னியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பணகுடி ரோஸ்மியாபுரம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதி மற்றும் தோட்டப் பகு... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-118.45 சோ்வலாறு-144.75 மணிமுத்தாறு-91.66 வடக்கு பச்சையாறு-11.50 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-45.50 தென்காசி மாவட்டம் கடனா-73.20 ராமநதி-76 கருப்பாநதி-63 குண்டாறு-36.10 அடவிநயினாா் -99... மேலும் பார்க்க

இடைகால் கிராமத்தில் உழவரைத் தேடி திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி வட்டாரம், இடைகால் கிராமத்தில் வேளாண்துறை சாா்பில் உழவரைத் தேடி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உழவரைத் தேடி திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், க... மேலும் பார்க்க