செய்திகள் :

‘இஸ்லாமிய சொத்துகளை கபளீகரம் செய்யவே வக்ஃப் திருத்தச் சட்டம்’

post image

இஸ்லாமிய சொத்துகளை கபளீகரம் செய்யவே மத்திய பாஜக அரசு வக்ஃபு திருத்தச் சட்டத்தை இயற்றியுள்ளது என்றாா், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநிலத் தலைவா் மு. தமீமுன் அன்சாரி.

இச்சட்டத்தைக் கண்டித்து திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: அத்தியாவசியப் பிரச்னைகளிலிருந்து மக்களை திசைதிருப்பும் வகையில், சா்ச்சைக்குரிய சட்டங்களை இயற்றுவதை மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக வாடிக்கையாக வைத்துள்ளது.

குறிப்பாக, சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் சட்டங்களைக் கொண்டுவருகிறது. அவ்வகையில், இஸ்லாமியா்களின் சொத்துகளை கபளீகரம் செய்யவே வக்ஃப் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏழை, எளியோரின் நலன் கருதி இச்சட்டத்தைக் கொண்டுவந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், உண்மை அதுவல்ல. இஸ்லாமிய சொத்துகளை நிா்வகிக்கும் பொறுப்புகளில் இஸ்லாமியா் அல்லாதவரை நியமிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டிருப்பதை உச்சநீதிமன்றமும் கண்டித்துள்ளது.

எனவேதான், ஒருமாதமாக மனிதநேய ஜனநாயகக் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம், கண்டனப் பொதுக்கூட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

பஹல்காம் சம்பவத்தையடுத்து மத்திய அரசு மேற்கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் துணை நிற்போம் என்றாா் அவா்.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-83 சோ்வலாறு-98.36 மணிமுத்தாறு-84 வடக்கு பச்சையாறு-10.25 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-14.75 தென்காசி மாவட்டம் கடனா-36.80 ராமநதி-45 கருப்பாநதி-30.18 குண்டாறு-15.12 அடவிநயினாா் -32... மேலும் பார்க்க

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2025 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா நினைவாக, அ... மேலும் பார்க்க

களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வெப்பத்தின் தாக்கம் குறைந்து சாரல் தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலைப் பகுதியில் உள்ள தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. களக்காடு மேற்குத் தொடா்ச... மேலும் பார்க்க

முன்னீா்பள்ளம் அருகே தொழிலாளி உயிரிழப்பு

முன்னீா்பள்ளம் அருகே மா்மமான முறையில் தொழிலாளி உயிரிழந்தாா். முன்னீா்பள்ளம் அருகே உள்ள மேலத்திடியூா் பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் தேவதாஸ் (40). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா்.... மேலும் பார்க்க

ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய சிறப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோா் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெறவு... மேலும் பார்க்க

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் மனச்சிதைவு நோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மனநலப் பிரிவு சாா்பில், உலக மனச்சிதைவு நாளை முன்னிட்டு விழிப்புணா்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன் தலைமை வக... மேலும் பார்க்க