செய்திகள் :

உ.பி.: கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் வயலில் இருந்து மீட்பு

post image

ஹத்ராஸில் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் 7 வயது சிறுவனின் சடலம் வயலில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஹத்ராஸில் தினை வயல் ஒன்றில் இருந்து 7 வயது சிறுவனின் சடலம் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். பலியான சிறுவன் குதிபுரி ஜதன் கிராமத்தைச் சேர்ந்த ஜீவன் என அடையாளம் காணப்பட்டுள்ளான்.

சடலத்தை மீட்ட போலீஸார் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மே 8 ஆம் தேதி, தனது தந்தை ராஜ்பால் சிங்கின் ஆலைக்கு அருகில் உள்ள வயலுக்குச் சென்று துப்புரவு பணிக்குச் சென்றபோது, ​​சிறுவன் காணாமல் போனதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தில்லியில் 60 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து!

குடும்பத்தினர் ஆரம்பத்தில் சிறுவனை தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால் போலீஸில் காணாமல் போனதாக புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கடத்தல் வழக்கு பதிவு செய்து போலீஸார், சிறுவனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் வயலில் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். சடலத்தில் நிறைய காயங்கள் இருந்ததோடு மட்டுமல்லாமல் பெருமளவு சிதைந்துவிட்டதாகவும், எனவே உடற்கூராய்வு அறிக்கை வந்த பின்னரே மீதமுள்ள தகவல்கள் தெளிவாகத் தெரிய வரும் என்றும் போலீஸ் அதிகாரி மேலும் கூறினார்.

போர் நிறுத்தம் மீறல்: பாகிஸ்தானுக்கு முழுவீச்சில் பதிலடி! -வெளியுறவுச் செயலர் மிஸ்ரி

போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்று அறிவித்த பின் அதை மீறி பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் இன்றிரவு ட்ரோன்களை ஏவி தாக்குதல்கலை நடத்தியது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், இர... மேலும் பார்க்க

பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரில் இந்திய வீரர் பலி

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர் பலியானார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய தரப்பிலும் த... மேலும் பார்க்க

ஒத்திவைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு!

ஒத்திவைக்கப்பட்டுள்ள சிஏ தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சிஏ தேர்வுகள் மே 16-ஆம் தேதி தொடங்கி மே 24 வரை நடைபெறுமென இன்று(மே 10) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மே 9 முதல் 14-ஆம் தேதி வரை ... மேலும் பார்க்க

போர் நிறுத்தம் கண் துடைப்பா? பாகிஸ்தான் மீண்டும் டிரோன் தாக்குதல்!

போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்று அறிவித்த பின், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் மீண்டும் டிரோன் தாக்குதலைத் தொடருவதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்திய ராணுவம் பாகிஸ்தானிலிருந்து ஏவப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீநகரில் மீண்டும் வெடி சப்தம்: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா

ஸ்ரீநகரில் மீண்டும் வெடி சப்தம் கேட்பதாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், போர் நிறுத்தம் என்ன ஆனது?. ஸ்ரீநகர் முழுவதும் வெடி சப்தம் கேட்டது... மேலும் பார்க்க

அடுத்து என்ன? முப்படை தளபதிகளுடன் பிரதமர் விரிவான ஆலோசனை!

புது தில்லி: போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி விரிவான ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்... மேலும் பார்க்க