செய்திகள் :

ஊட்டி: கஞ்சா விற்கும் போலீஸ்; போதையில் சுழலும் ஸ்டேஷன் டூட்டி காவலர்கள்; கொந்தளிப்பில் மக்கள்

post image

கஞ்சா விற்பனை முதல் கச்சா ஃபிலிம் தொழிற்சாலையின் வெள்ளி கலந்த மண் திருட்டு வரை நீலகிரி மாவட்டத்தில் காவல்துறையினரே கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வரும் நிலையில், ஊட்டி நகர மத்திய காவல் நிலைய காவலர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கையும் களவுமாகப் பிடிபட்ட நிகழ்வு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அவருடன் தொடர்பிலிருந்து கஞ்சா புழக்கத்தில் ஈடுபட்ட மேலும் மூன்று காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறார்கள் காவல்துறையின் உயர் அதிகாரிகள்.

Ganja rep image AI
Ganja rep image AI

பின்னணி குறித்து நம்மிடம் பகிர்ந்த காவல்துறை பெண் அதிகாரி ஒருவர், "நீலகிரியைப் பொறுத்தவரை குற்றச்செயல்களில் ஈடுபடும் காவலர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தவறிழைக்கும் பல காவலர்களை பனிஷ்மெண்ட் டிரான்ஸ்ஃபர் என்ற பெயரில் நீலகிரிக்கு மாற்றுகிறார்கள். பனிஷ்மெண்ட்டில் வரும் காவலர்கள் இங்கு வந்ததும் குற்றச்செயல்களை இன்னும் சௌகரியமாகத் தொடர்கிறார்கள்.

குறிப்பாக கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள்கள் விற்பனையில் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்கள். பலர் கைதும் ஆகியிருக்கிறார்கள். இந்த நிலையில்தான், கேரள மாநிலத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியிடம் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி நீலகிரியில் விற்பனை செய்து வந்த ஊட்டி போலீஸ் நசீர் அகமது என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தக் கஞ்சா வியாபாரியிடம் இருந்து 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Ganja rep image AI
Ganja rep image AI

மேலும், பணி நேரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களைப் பயன்படுத்தியதாக எருமாடு காவல் நிலையத்தைச் சேர்ந்த அபிசேகரன், கோத்தகிரி போலீஸ் மாயக்கண்ணன், மசினகுடி போலீஸ் சாந்தகுமார் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா புழக்கத்தில் நீலகிரியில் பணியாற்றும் டிராஃபிக் மற்றும் சட்ட ஒழுங்கு காவலர்கள் சிலருக்குத் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

விருதுநகர்: உரிமைத்தொகையை செலவு செய்ததால் கோபித்த மனைவி; விபரீத முடிவெடுத்த கணவரால் சோகம்!

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரின் மனைவி ராமு. இவரது வங்கிக் கணக்கில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம் ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ஒரு தலை காதல் தொல்லை; உயிரை மாய்த்த மாணவி; மாணவரை கைதுசெய்ய குடும்பத்தினர் கோரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கோகுல் நகரைச் சேர்ந்த தம்பதியின் மகள், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் அதே வகுப்பில் படித்த மாணவர் ஒருவ... மேலும் பார்க்க

`மகனிடம் சேரப் போகிறோம்' - பெற்றோரின் உருக்கமான கடிதம் - சோகத்தில் ஆழ்ந்த கிராமம்!

சத்தீஸ்கர் மாநிலம், ஜான்ஜ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ளது தார்தேய் (Dhardei) கிராமம். இங்கு கிருஷ்ணா படேல் (48), அவர் மனைவி ரமா பாய் (47) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை வீட்டு முற்ற... மேலும் பார்க்க

Taapsee Pannu: ``தினமும் 80 பாலியல் குற்றங்கள்... நாம் பழகிவிட்டோம்" - நடிகை டாப்ஸி பண்ணு ஆவேசம்!

பீகார் மாநிலம், பாட்னாவில் நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த ம... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: காதலர் தின விருந்தில் மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம் - கணவன் சிக்கியது எப்படி?

ஹரியானா மாநிலம், குருகிராம் பஹதுர்கர் பகுதியைச் சேர்ந்த மஹக் என்ற பெண் இரண்டு நாள்களுக்கு முன்பு காதலர் தின இரவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். மஹக் பிரபல தனியார் வங்கியில் பணியாற்றி வந்தா... மேலும் பார்க்க

சென்னை: கணவன், மனைவியைக் கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் - திருமணம் மீறிய உறவால் விபரீதம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற பார்த்தசாரதி(42). இவரின் மனைவி ஜமுனா(35). இவர்களது எதிர் வீட்டில் சுசில் (32), அவரின் மனைவி கிரிஜா(29) ஆகி... மேலும் பார்க்க