செய்திகள் :

`என் பையனை வளைச்சிப் போட்டுக்கிட்டா.!’ - மருமகளை தீர்த்துக் கட்டி புதைத்த கொடூர மாமியார்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜாவுக்கும், பெங்களூருவைச் சேர்ந்த நந்தினிக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இரண்டு குழந்தைகளுடன் இருவரும் வளையாம்பட்டு கிராமத்தில் வசித்து வந்த நிலையில், கடந்த 2018-ல் ராஜா தற்கொலை செய்து கொண்டார்.

அதையடுத்து வளையம்பட்டு கிராமத்திலேயே இருந்தார் நந்தினி. அப்போது விரியூரில் இருந்த பிசியோதெரப்பி கிளினிக்குக்கு ஒருமுறை சென்றிருக்கிறார் நந்தினி.

அப்போது அவருக்கும், பிசியோதெரப்பி கிளினிக் நடத்தி வந்த மரிய ரொசாரியோ என்பவருக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த நட்பு காதலாக மாறிய நிலையில், 2020-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதேசமயம் இவர்களின் திருமணம், மரிய ரொசாரியோவின் தாய் கிறிஸ்தோஃப் மேரிக்குப் பிடிக்கவில்லை. அதனால் மருமகளுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையேயான சண்டை அன்றாட நிகழ்வாக மாறியதால், வடசேமபாளையம் கிராமத்தில் மனைவியுடன் தனிக்குடித்தனம் சென்றார் மரிய ரொசாரியோ. ஆனாலும் அங்கும் சென்று அவ்வப்போது மருமகளிடம் தகராறு செய்து வந்திருக்கிறார் கிறிஸ்தோஃப் மேரி.

இந்த நிலையில்தான், `டிசம்பர் 29-ம் தேதி என் மனைவி நந்தினியை என் அம்மா கோயிலுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அன்று என் அம்மா மட்டும்தான் திரும்பி வந்தார்.

என் மனைவி எங்கே என்று அம்மாவிடம் கேட்டபோது, இனிமே அவ வரமாட்டான்னு சொன்னாங்க. என் மனைவியை கண்டுபிடித்துக் கொடுங்கள். எங்கள் 5 வயது மகன் அம்மாவை கேட்டு அழுது கொண்டேயிருக்கிறான்.

என் அம்மா மீது எனக்கு சந்தேகமாக இருக்கிறது' என்று சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார் மரிய ரொசாரியோ. அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், மரிய ரொசாரியோவின் தாய் கிறிஸ்தோஃப் மேரியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தன்னுடைய மருமகளை கழுத்தை அறுத்துக் கொலை செய்து உடலை தனியாகவும், தலையை தனியாகவும் புதைத்து விட்டதாக தெரிவித்திருக்கிறார் கிறிஸ்தோஃப் மேரி.

மாமியார் கிறிஸ்தோஃப் மேரி

இந்த வழக்கு குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், ``ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் ஒரு பெண்ணை தன்னுடைய மகன் திருமணம் செய்து கொண்டது மரிய ரொசாரியோவின் அம்மா கிறிஸ்தோஃப் மேரிக்குப் பிடிக்கவில்லை.

அதனால்தான் அவர் மருமகளுடன் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் மகன் தனிக்குடித்தனம் சென்றுவிட்டதால் மருமகளை திட்டமுடியவில்லையே என்று மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் கிறிஸ்தோஃப் மேரி. அப்போதுதான் அவர் மருமகளை கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார்.

உடனே அதுகுறித்து தன்னுடைய தோழியான எமிலி என்பவரிடம் கூறியிருக்கிறார். அதற்கு அவர் சம்மதித்ததுடன், கோயிலுக்குப் போகலாம் என்று சொல்லி உன் மருமகளை அழைத்து வா என்று ஐடியா கொடுத்திருக்கிறார். அதனடிப்படையில்தான், `எனக்கும் இவளுக்கும் அடிக்கடி சண்டை வருது.

அதனால கோயிலுக்குப் போய் ரெண்டு பேரும் பூஜை பண்ணிட்டு வர்றோம்' என்று  மகனிடம் சொல்லிவிட்டு, டிசம்பர் 29-ம் தேதி நந்தினியை அழைத்துச் சென்றார் கிறிஸ்தோப் மேரி.

சோழம்பட்டு பகுதியில் இருக்கும் மணிமுத்தாற்றின் கரையோரம் நந்தினியை அமர வைத்த எமிலி, ஏதேதோ மந்திரங்கள் சொல்லி அவரையும் சொல்ல வைத்திருக்கிறார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் நந்தினியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் கிறிஸ்தோஃப் மேரி.

ஆனால் அப்படியும் ஆத்திரம் தீராமல் நந்தினியின் கழுத்தை அறுத்து தனியாக எடுத்து, அதை வேறு இடத்தில் போட்டுவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவியின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனதால் சந்தேகமடைந்த மரிய ரொசாரியோ எங்களிடம் புகாரளித்தார்" என்றனர்.

கொலை செய்யப்பட்ட பகுதியில் போலீஸார்

கிறிஸ்டோப் மேரி மற்றும் எமிலி கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், ``எங்க கிராமத்துல பண வசதியோட மரியாதையா இருந்த குடும்பம் எங்களோடது. ரெண்டு புள்ளைங்களோட எங்க ஊர்ல இருந்த நந்தினி என் மகனை வளைச்சிப் போட்டுக்கிட்டு கல்யாணமும் பண்ணிக்கிட்டா.

கல்யாணமான ஒருத்தியை என் மகன் ரெண்டாதாரமா கல்யாணம் பண்ணிகிட்டது எனக்குப் புடிக்கல. ஊர்க்காரங்க முன்னாடி எங்க குடும்பத்தை கேவலப்படுத்திய நந்தினியை கொலை பண்ணிட்டு, என் மகனுக்கு புதுசா வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுக்கனும்னு முடிவு பண்ணேன்.

என் ஃபிரெண்ட் எமிலியும் அவளை கொலை பண்றதுதான் சரின்னு சொல்லிட்டதால, அன்னைக்கு என் மருமகளை கூட்டிக்கிட்டுப் போனேன். அவ மந்திரம் சொல்லிக்கிட்டு இருக்கும்போது, பின்பக்கமா வந்து அவளை அப்படியே கீழே தள்ளி கழுத்தை அறுத்து தனியா எடுத்துட்டேன்" என்று போலீஸ் விசாரணையில் கிறிஸ்டோப் மேரி தெரிவித்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தேனி: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 74 லட்சம் மோசடி; பிஆர்ஓ மீது 3 பிரிவுகளில் வழக்கு

தேனி மாவட்டம் பெரியகுளம் தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 48). இவரது மகன் சூரியநாராயணன் பிஇ படித்துவிட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சாந்த... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: திருட வந்த இடத்தில் எக்ஸாஸ் பேன் துளையில் சிக்கிக் கொண்ட நபர்; மீட்டுக் கைதுசெய்த போலீஸ்!

ராஜஸ்தான் மாநிலம், கோடா என்ற இடத்தில் வசிப்பவர் சுபாஷ் குமார். இவர் சம்பவத்தன்று வெளியில் சென்று இருந்தார். அவரின் மனைவியும் வெளியில் சென்றுவிட்டு அதிகாலை ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வெ... மேலும் பார்க்க

தாறுமாறாக ஓடிய கார் - கோவை அவிநாசி சாலையை அலறவிட்ட போதை ஆசாமி

கோவை அவிநாசி சாலை பீளமேடு அருகேநேற்றுஇரவு நேரம் சொகுசுகார் ஒன்றுஅதிவேகமாக சென்றுள்ளது. தாறுமாறாககட்டுப்பாடு இல்லாமல் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியது. மக்கள் எச்சரித்தும் கேட்காமல் அந்த கார் அச்சுற... மேலும் பார்க்க

கேரளா: நீதிமன்ற ஆதாரத்தை அழித்த வழக்கில் 3 ஆண்டுத் தண்டனை; திருவனந்தபுரம் எம்எல்ஏ-வின் பதவி பறிப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் ஆண்டனி ராஜூ. ஜனாதிபத்திய கேரளா காங்கிரஸ்கட்சியின் துணைத்தலைவரான இவர் 2021 முதல் இரண்டரை ஆண்டுகள் கேரள போக்குவரத்துத்துறை அமைச்சராக... மேலும் பார்க்க

சென்னை: நர்ஸ் குளிப்பதை வீடியோ எடுத்த ரூம்பாய்; லாட்ஜில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! - கைதுசெய்த போலீஸ்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் தோழியுடன் சேர்ந்து சொந்த ஊருக்குச் சென்று விட்டு கடந்த 04.01.20... மேலும் பார்க்க

தென்காசி: குளியறையில் கொலைசெய்யப்பட்ட பெண்; சிக்கிய பால்காரர்... திருமணம் மீறிய உறவு காரணமா?

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகிலுள்ள அருணாச்சலபுரத்தைச் சேர்ந்தவர் அய்யங்கண்ணு. இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி முருகசெல்வி. இவர்களுக்கு பத்து வயதில் ஒரு மகள் உள்ளார். தற்போது ம... மேலும் பார்க்க