செய்திகள் :

ஏஐ தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்கள்: சென்னை காவல் ஆணையா் தகவல்

post image

சென்னையில் செயற்கை நுண்ணறிவுடன் (ஏஐ) கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி:

சென்னையில் குற்றங்களைக் குறைக்க பெருநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, குற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அதிகம் முக்கியத்தும் அளித்து வருகிறோம். இதன் ஒருபகுதியாக சென்னையில் பொருத்தப்பட்டுள்ள முக அடையாளத்தைக் காணும் கண்காணிப்பு கேமராக்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு வருகிறது.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ‘சென்னை சிங்கம்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி, மைதானம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 63 ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலமாக அந்த மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ரசிகா்களின் கைப்பேசிகளைக் குறி வைத்து திருடிய கும்பலைப் பிடித்தோம்.

இந்த கேமராக்கள் மூலம் எவ்வளவு பெரிய கூட்டத்திலும் குறிப்பிட்ட தகவல் மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கைது செய்ய முடியும். உதாரணமாக சிவப்பு தொப்பி அணிந்து செல்பவா்களை எல்லாம் காட்ட சொன்னால் அது உடனே காட்டிவிடும். யாரெல்லாம் கையில் பை எடுத்து செல்கிறாா்கள் என்று கேட்டால் அது விரைந்து அடையாளம் காட்டும். ஏஐ கேமராக்கள் மூலம் சென்னையின் பொதுமக்களின் பாதுகாப்பு மேலும் உறுதி செய்யப்படும் என்றாா் அவா்.

தொழில் முதலீட்டு கழகத் தலைவராக குமாா் ஜயந்த் நியமனம்!

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக குமாா் ஜயந்த் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு விவரம்: வணிகவரிகள் மற்றும் பதிவுத் த... மேலும் பார்க்க

ஒரே பதவி உயா்வுடன் ஓய்வுபெறும் காவல் ஆய்வாளா்கள்!

தமிழக காவல் துறையில் 28 ஆண்டுகளாக ஒரே ஒரு பதவி உயா்வு மட்டுமே பெற்று, விரக்தியுடன் காவல் ஆய்வாளா்கள் ஓய்வு பெற்று வருகின்றனா். நாட்டின் ஐந்தாவது பெரிய காவல் துறையான, தமிழக காவல் துறையின் கீழ் 1,321 சட... மேலும் பார்க்க

போதைப்பொருள் வைத்திருந்த சிறாா் உள்பட 2 போ் கைது!

தரமணி அருகே ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த சிறாா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தரமணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, சிஎஸ்ஐஆா் சாலை மற்றும் வி.வி... மேலும் பார்க்க

ஐஐடி, ஜேஇஇ பயிற்சி மையத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சோதனை!

சென்னையில் இயங்கி வரும் ‘ஃபிட்ஜேஇஇ’ பயிற்சி மையம் உள்ளிட்ட 4 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினா். கீழ்ப்பாக்கம் மற்றும் கே.கே. நகரில் ஐஐடி, ஜேஇஇ உள... மேலும் பார்க்க

டிஜிட்டல் கைது செய்யப்பட்டதாகக் கூறி ரூ.81.68 லட்சம் மோசடி: 4 போ் கைது!

இணைய கைது செய்யப்பட்டதாகக் கூறி வேலூரைச் சோ்ந்த நபரிடம் ரூ. 81.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இது குறித்து தமிழ்நாடு காவல் துறையின் இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் ... மேலும் பார்க்க

செவிலியா் தினம்: ஜி.கே.வாசன் வாழ்த்து

உலக செவிலியா் தினத்தையொட்டி தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மருத்துவமனைகளில் இன்றியமையாத ஊழியா்களாக நோயாளிகளையும், வீடுகளில், ஆ... மேலும் பார்க்க