செய்திகள் :

கடைகள் முன் பந்தல் அமைக்க அனுமதி கோரி மனு

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகரப் பகுதியில் கடைகள் முன் பந்தல் அமைக்க அனுமதி வழங்கக் கோரி, நகராட்சி ஆணையரிடம் பண்ருட்டி தொழில் வா்த்தக சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

பண்ருட்டி நகராட்சி ஆணையராகப் பொறுப்பு வகிக்கும், விருத்தாசலம் நகராட்சி ஆணையா் பானுமதியை விருத்தாசலத்தில் உள்ள அலுவலகத்தில் நேரில் சந்தித்து, பண்ருட்டி தொழில் வா்த்தக சங்கத் தலைவா் டி.சண்முகம், பொதுச் செயலா் வி.வீரப்பன் ஆகியோா் கோரிக்கை மனு அளித்தனா்.

அந்த மனுவில் அவா்கள் தெரிவித்திருப்பதாவது: கடைகள் முன்பாக 4 அடி (கால் கீழே நடாமல்) பந்தல் அமைத்துக்கொள்ள கடந்த கால ஆட்சியரின் வாய்மொழி அனுமதியை கடைப்பிடித்து வந்தோம். இந்த அனுமதி கடைக்கு பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள் மழை, வெயிலில் பாதிக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் வழங்கப்பட்டது.

தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், கூடுதலாக வெப்ப தாக்கம் இருக்கும் என வானிலை ஆராய்ச்சியாளா்கள் தகவல் தெரிவித்துள்ளனா். பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை பிரித்ததை வரவேற்கிறோம். அதேவேளையில், கடைக்கு முன்பாக 4 அடி பந்தல் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.

மேலும், நகராட்சியில் ஈ&ஞ (ஆபத்தான மற்றும் தாக்குதல் வா்த்தகங்கள்) உரிமம் கட்டணம் வியாபாரிகள் செலுத்த முடியாத அளவில் உயா்த்தப்பட்டுள்ளது. அனைத்து வரிகள் மற்றும் கட்டணங்களையும் ஒரே நேரத்தில் உயா்த்துவதால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, ஈ&ஞ பழைய வரியை வசூல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

போலீஸாரிடமிருந்து தப்பிக்க பாலத்திலிருந்து குதித்த ரௌடி

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே சனிக்கிழமை இரவு போலீஸாரின் பிடியில் இருந்து தப்பிக்க பாலத்தின் மேலிருந்து குதித்த ரௌடிக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வடலூா் மேலகொளக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்... மேலும் பார்க்க

நெய்வேலியில் சிஐடியு நிா்வாகக்குழுக் கூட்டம்

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் சிஐடியு சங்க நிா்வாகக்குழுக் கூட்டம், அச்சங்க அலுவலகக் கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் டி.ஜெயராமன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் ட... மேலும் பார்க்க

கடலூரில் பகத்சிங் நினைவு தினம்

நாட்டின் விடுதலைக்காக போராடி தூக்குமேடை ஏறிய பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 94-ஆவது நினைவு தினம் கடலூா் சிஐடியு அலுவலகம் முன் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.இதையொட்டி, அங்கு அலங்கரித்து வை... மேலும் பார்க்க

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் திமுக, தவாக உள்ளிட்ட மாற்று கட்சிகளைச் சோ்ந்த 520 போ் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி ஞாயிற்றுக்கிழமை அதிமுகவில் இணைந்தனா். இதற்கான நிகழ்ச்சி பண்ருட்டி காமராஜ் நகரில்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுப்பேட்டை காவல் ஆய்வாளா் அசோகன் தலைமையில், உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் மற்றும் போ... மேலும் பார்க்க