செய்திகள் :

'கதறிய பெண் தூய்மைப் பணியாளர்கள்; நள்ளிரவில் கைது செய்த போலீஸ்!'- ரிப்பன் பில்டிங்கில் என்ன நடந்தது?

post image

சென்னை ரிப்பன் பில்டிங் முன்பு திரண்டு போராடிய தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்திருக்கின்றனர்.

சென்னையில் மண்டலங்கள் 5, 6 இல் குப்பை அள்ளும் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தமாக கொடுத்திருக்கிறது மாநகராட்சி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மண்டலங்களை சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னைக்குள் 150 நாட்களுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

நேற்று காலை அறிவாலயத்தை முற்றுகையிட்டவர்கள், மதியத்துக்கு மேல் கருணாநிதி நினைவிடத்தை முற்றுகையிட்டு கைதாகினர். பின்னர் அண்ணா சாலையில் அமர்ந்து போராடி கைதாகினர். கைது செய்தவர்களை மாலைக்கு மேல் காவல்துறையினர் விடுவித்தனர். சென்ட்ரல் அருகே கூடிய தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகள் நிறைவேறாமல் வீட்டுக்கு திரும்பக்கூடாது என தீர்மானித்து, மீண்டும் ரிப்பன் பில்டிங் முன்பு கூட்டமாக அமர்ந்துவிட்டனர்.

இரவு 9:45 மணிக்கு மேல் ரிப்பன் பில்டிங் வெளியே அமர்ந்தவர்கள், ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டு கொண்டிருந்தனர். 'நாங்க யாருக்கு என்ன கெடுதல் செஞ்சோம். பதினைஞ்சு இருபது வருசமா இந்த ஊருக்காக வேலை பார்த்த எங்களை குப்பை மாதிரி தனியார்க்கிட்ட தூக்கி போடுறீங்களே இது நியாயமா? நாங்க எங்க வேலையைத்தானே கேட்குறோம். யாருக்கும் தொந்தரவா செய்யுறோம்? அப்புறம் ஏன் எங்களை திருடனை பிடிக்கிற மாதிரி பிடிக்கிறீங்க? அஞ்சு மாசமா வேலை இல்லாம இருக்குறோம்.

இங்க இருக்க நிறைய பொம்பளைங்களுக்கு புருஷன் கிடையாது. நாங்க வேலைக்கு போனாதான் சோறு. எங்க புள்ளைங்க எல்லாம் பட்டினியா கெடக்கு. நாங்க எதுவும் தப்பா பேசியிருந்தா கூட மன்னிச்சிடுங்க. முதல்வர் அய்யா எங்களுக்கு நல்லது பண்ணுங்க. எங்க வேலையை கொடுங்க. இல்ல எங்கள ஜெயில்ல போடுங்க. இல்ல போராட விடுங்க. இந்த ரிப்பன் பில்டிங் முன்னாடியே எங்க உசுரு போகட்டும்..' என பெண் தூய்மைப் பணியாளர்கள் கதறினர்.

இரவு 11:15 மணிக்கு மேல் கூடியிருந்த 1000 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். கோரிக்கை நிறைவேறாமல் நகரமாட்டோம் என உறுதியாக நின்ற தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களை வெவ்வேறு இடங்களில் மண்டபங்களில் அடைத்து வைத்திருக்கின்றனர்.

ரிப்பன் பில்டிங்
ரிப்பன் பில்டிங்

போராடிய தூய்மைப் பணியாளர்களை கைது செய்த பின் முன்னெச்சரிக்கையாக ரிப்பன் பில்டிங்கின் கேட்டுகளை மூடி பூட்டு போட்டு தடுப்புகளை அமைத்து பாதுகாப்புக்கு காவலர்களையும் நிறுத்தியிருக்கின்றனர்.

சறுக்கிய தமிழ் வேட்பாளர்கள்; 5 முறை கவுன்சிலராக இருந்த ரவி ராஜா, மாரியம்மாள் தாராவியில் தோல்வி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவியில் உள்ள 185வது வார்டில் பா.ஜ.க சார்பாக ரவி ராஜா போட்டியிட்டார். ரவி ராஜா இதற்கு முன்பு 5 முறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மும்பை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்... மேலும் பார்க்க

Iran: 9 வயதில் ஈரானிலிருந்து வெளியேற்றம்; ஈரானின் கடைசி ஷாவின் மகளான லெய்லா பஹ்லவியின் சோக கதை!

ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இளவரசர் ரெசா பஹ்லவி மீண்டும் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறார். ஆயத்துல்லா கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஈரானியர்கள், நாட்டில் மீண்டு... மேலும் பார்க்க

புனே: `பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தும் பயனில்லை' - பவார் குடும்பத்திடமிருந்து கைநழுவிப்போன கோட்டை!

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாக பிரிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் இணைந்து புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி தேர்த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மும்பையில் ஏற்கனவே பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மா... மேலும் பார்க்க

சுவாச நோய்களால் 9,211 பேர் உயிரிழப்பு; டெல்லி அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

2024-ஆம் ஆண்டில் மட்டும் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பொதுமக்களின... மேலும் பார்க்க

கோட்டையை போராடி இழந்த உத்தவ்: ஷிண்டேயுடன் சேர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மும்பைதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவு... மேலும் பார்க்க