செய்திகள் :

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சம்பவ நாளில் பணியிலிருந்த 12 போலீஸார் CBI விசாரணைக்கு ஆஜர்

post image

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவின் கீழ் கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதல் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கரூர் சுற்றுலா மாளிகையில் தற்காலிக முகாமை அமைத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்டமாக, சென்னை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான எஸ்.ஐ.டி. (SIT) குழுவிடமிருந்து ஆவணங்களை பெற்ற சி.பி.ஐ. ஏ.எஸ்.பி. பிரவீன் குமார், கடந்த மாதம் 18-ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கரூர் சி.ஜே.எம்.-1 நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து, 41 பேர் பலியான சம்பவ இடமான வேலுச்சாமிபுரம் பகுதியில், 3D டிஜிட்டல் ஸ்கேனர் உதவியுடன் அளவீட்டு பணியை இரண்டு நாள்கள் தொடர்ந்து மேற்கொண்டனர்.

இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலுச்சாமிபுரம் பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கு சம்மன் அனுப்பி, அவர்களிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர். இதுவரை 20-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு, CBI விசாரணைக்கு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு, CBI விசாரணைக்கு

இந்த நிலையில், தற்காலிக சி.பி.ஐ. முகாமில் நேற்று சி.பி.ஐ. விசாரணைக்கு, த.வெ.க. கூட்டத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பாதுகாப்பு பணியில் இருந்த தமிழக காவல்துறையின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் ஆஜராகியுள்ளனர்.

அதாவது, சம்பவம் நடைபெற்ற அன்று பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 12 பேர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரானார்கள்.

அதோடு, அடுத்த சில நாட்களில், உயிர்பலி ஏற்பட்ட வேலுச்சாமிபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு சி.பி.ஐ தரப்பில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருப்பூரில் சொத்து தகராறு? ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த பெண் பலியான சோகம்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ராமசாமி நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (43). ஓவிய ஆசிரியர். இவரது மனைவி திருப்பூர் பெருமாநல்லூரைச் சேர்ந்த கெளசல்யா (40). இத்தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.தம்பத... மேலும் பார்க்க

சேலம்: வனத்துறை குடியிருப்பின் பூட்டை உடைத்து 90 துப்பாக்கித் தோட்டாக்கள் திருட்டு; 4 பேர் கைது

சேலம் மாவட்டம் மேட்டூர் நீதிமன்றம் அருகே வனத்துறைக்குச் சொந்தமான குடியிருப்பு உள்ளது. இதில் வனச்சரகர் மற்றும் வனத்துறை ஊழியர்கள் குடியிருக்கின்றனர. மேலும், அங்கு வனத்துறைக்குச் சொந்தமான ஆவணங்கள், துப்... மேலும் பார்க்க

Himachal: 8 வயது தலித் சிறுவன் மீது ஓராண்டாக தாக்குதல் - தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்கு

வட இந்திய மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் 8 வயது தலித் சிறுவனை தாக்கியதாகவும், கால்சட்டையில் தேளை விட்டு கொடுமைபடுத்த... மேலும் பார்க்க

கேரளா: புகைபிடித்ததை தட்டிக்கேட்ட இளம்பெண்; ஓடும் ரயிலில் இருந்து மிதித்து தள்ளிவிடப்பட்ட கொடூரம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாலோடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகுட்டி(19), கல்லூரி மாணவி. இவரின் தாய் பிரியதர்ஷினி பெங்களூரில் ஒரு ஸ்கூலில் நீச்சல் பயிற்சியாளராக உள்ளார். ஸ்ரீகுட்டியின் சகோதரர் ஸ்ரீகுமார... மேலும் பார்க்க

`உனக்காகத்தான் மனைவியை கொன்றேன்'- காதலிக்குத் தகவல் சொன்ன கணவன்

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்களாகப் பணிபுரிந்து வந்தவர்கள் மகேந்திர ரெட்டி மற்றும் கிருத்திகா ரெட்டி. கணவன் மனைவியான இருவரும் கடந்த ஆண்டுதான் திருமணம் செய்து கொண்டனர். கடந்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `என் பொண்டாட்டியை கல்யாணம் பண்ணிக்க நினைச்சான்!’ - சோகத்தில் முடிந்த முறையற்ற காதல்

புதுச்சேரி வம்பாகீரப்பளையம் `பாண்டி மெரீனா’ செல்லும் சாலையில், நேற்று முன் தினம் இளைஞர் ஒருவர் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந... மேலும் பார்க்க