செய்திகள் :

காங்கிரஸ்: ``ராகுல் - பிரியங்கா அணியிடையே மோதல் வெட்ட வெளிச்சமானது'' - பாஜக சாடல்

post image

"காங்கிரஸ் கட்சிக்குள் 'ராகுல் அணி' மற்றும் 'பிரியங்கா அணி' இடையே நிலவும் மோதல்கள் தற்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது" என சாடியிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி!

ஒடிசாவைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது மொக்குயிம், `ட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை நீக்கக் கோரி, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதமே இதற்கு காரணம்.

அந்த கடிதத்தில், பிரியங்கா காந்தி வதேரா உட்பட இளைய தலைவர்களுக்குக் கட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, எக்ஸ் சமூக வலைதளத்தில்,

"காங்கிரஸ் கட்சியின் உட்கட்சிப் பூசல் அம்பலமாகியுள்ளது! பிரியங்கா அணிக்கும், ராகுல் அணிக்கும் இடையேயான மோதல் இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஒடிசாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளார்: 'கார்கேவை நீக்குங்கள், பிரியங்காவைக் கொண்டு வாருங்கள்' என்று வலியுறுத்தியுள்ளார்; மாநில மற்றும் மத்தியத் தலைமைக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.

83 வயதான மல்லிகார்ஜுன கார்கேயின் தலைமையின் கீழ், காங்கிரஸ் இந்திய இளைஞர்களுடன் இணைய முடியாமல் போனதால், காங்கிரஸ் தலைமைக்கும் இந்திய இளைஞர்களுக்கும் இடையேயான ஒரு 'ஆழமான மற்றும் வளர்ந்து வரும் துண்டிப்பு' நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்" என்று விமர்சித்துள்ளார்.

முன்னதாக, ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "கட்சி ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்து வருகிறது. அதற்கு பிரியங்காவின் ஆலோசனையும் புதிய தலைமையும் தேவை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வயது சாதகமாக இல்லை.

நாம் இளம் தலைவர்களை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும். சோனியாஜியும் காங்கிரஸ் காரியக் கமிட்டி (CWC) உறுப்பினர்களும் இதைப் பற்றி நிச்சயம் விவாதிப்பார்கள் என்று எனக்குத் தெரியும்" என்று தெரிவித்திருந்தார்.

சட்டமன்ற உறுப்பினரின் கடிதம்
சட்டமன்ற உறுப்பினரின் கடிதம்
சட்டமன்ற உறுப்பினரின் கடிதம்
சட்டமன்ற உறுப்பினரின் கடிதம்
சட்டமன்ற உறுப்பினரின் கடிதம்
சட்டமன்ற உறுப்பினரின் கடிதம்
சட்டமன்ற உறுப்பினரின் கடிதம்
சட்டமன்ற உறுப்பினரின் கடிதம்
சட்டமன்ற உறுப்பினரின் கடிதம்
சட்டமன்ற உறுப்பினரின் கடிதம்

காங்கிரஸின் நிலை

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கட்சி படுதோல்வி அடைந்த பிறகு ராகுல் காந்தி பதவி விலகியதால், சோனியா காந்தி இடைக்காலத் தலைவராகச் செயல்பட்டு வந்த நிலையில், அவருக்குப் பின் மூத்த அரசியல்வாதியான கார்கே, 2022 அக்டோபரில் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரைத் தோற்கடித்துக் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார்.

மறுபுறம், பிரியங்கா காந்தி வதேரா ஜனவரி 2019-ல்தான் முறையாக அரசியலில் நுழைந்தார். தற்போது அவர் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

"நன்றி திருவனந்தபுரம்"- சிபிஎம் கோட்டையைக் கைப்பற்றிய பாஜக; வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 9-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற்றன. 14 வருவாய் மாவட்டங்களில் 14 மாவட்ட ஊராட்சி தலைவர்கள், 6 மாநகராட்சி மேயர்கள், 86 நகராட்சி தலைவர்கள்... மேலும் பார்க்க

`சவுக்கு சங்கர் கைது அப்பட்டமான துன்புறுத்தல்' - கார்திக் சிதம்பரம் கருத்து!

யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று (டிசம்பர் 13) அவரது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்திக் சிதம்பரம். கார்த... மேலும் பார்க்க

'மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத்தை விஞ்சிய தமிழ்நாடு ' - ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடு 'மொத்த உள்மாநில உற்பத்தியில்' முதல் இடத்தைப் பிடித்துள்ளது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்."வானுயர் GSDP வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம... மேலும் பார்க்க

தமிழ்நாடு வரும் அமித் ஷா; இறுதி முடிவை ஒத்திவைக்கும் ஓ.பன்னீர்செல்வம் - என்ன நடக்கிறது?

அமித் ஷா வருகிற 15-ம் தேதி தமிழ்நாடு வருகிறார். ஆனால், அவர்‌ வருவதற்கான சிக்னல்கள் இப்போதே தமிழ்நாட்டில் தெரிகிறது.தற்போது தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட... மேலும் பார்க்க

”கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதல்வர் எனச் சொல்லி பலர் வந்துள்ளனர்” - திருமாவளவன்

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநில மாநாடு தூத்துக்குடியில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்... மேலும் பார்க்க

`தாங்க முடியாத துர்நாற்றம்; இதுதான் சர்வதேச விமான நிலையமா?' - ப.சிதம்பரம் ஆவேசம்

சென்னை விமான நிலையம் குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " சென்னை விமான நிலையத்தின் 4-வது முனைய... மேலும் பார்க்க