செய்திகள் :

`தாங்க முடியாத துர்நாற்றம்; இதுதான் சர்வதேச விமான நிலையமா?' - ப.சிதம்பரம் ஆவேசம்

post image

சென்னை விமான நிலையம் குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " சென்னை விமான நிலையத்தின் 4-வது முனையத்தின் பிரதான லாபியிலிருந்து (Main Lobby) வெளியேறி சாலைக்கு வரும்போது, சகிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.

ப. சிதம்பரம்
ப.சிதம்பரம்

விமான நிலைய மேலாளரோ, இந்திய விமான நிலைய ஆணைய (AAI) அதிகாரிகளோ அல்லது ஊழியர்களோ யாரும் இந்த துர்நாற்றத்தை கவனிக்கவில்லையா? இது எப்படி ஒரு சர்வதேச விமான நிலையமாக இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதற்கு சென்னை விமான நிலைய தரப்பில் இருந்தும் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

"பயணிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில், கூட்டம் குறைவாக இருக்கும் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் குப்பைகளை அகற்றும் லாரி இயக்கப்படுகிறது. அந்த லாரி, 10 நிமிடங்களுக்கு முன்புதான் அந்தப் பகுதியைக் கடந்து சென்றது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

அதனால், துர்நாற்றம் அங்கே வீசியிருக்கலாம். எங்களுடைய 24 மணி நேர பணி மேலாளர்கள், அந்தப் பகுதியைத் தொடர்ந்து கண்காணித்து, பராமரிப்பை உறுதி செய்கிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

”கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதல்வர் எனச் சொல்லி பலர் வந்துள்ளனர்” - திருமாவளவன்

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநில மாநாடு தூத்துக்குடியில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்... மேலும் பார்க்க

எடப்பாடியுடன் சந்திப்பு; வரவிருக்கும் அமித் ஷா - டெல்லி பயணமான நயினார் நாகேந்திரன்

இந்த ஆண்டின்‌ தொடக்கத்தில் இருந்தே, தமிழ்நாட்டில் தேர்தல் பரபரப்புகள் தொற்றி கொண்டன.இப்போது தேர்தலுக்குச் சில மாதங்கள்‌தான் உள்ளன. அதனால், பரபரப்புகள் பற்றி சொல்லவே தேவையில்லை.தமிழ்நாட்டில் இப்போது வர... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் : `நீதிபதி உணர்ச்சிவசப்பட்டுத் தீர்ப்பளிக்கவில்லை.!’ - எஸ்.ஜி.சூர்யா | களம் 2

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது’... மேலும் பார்க்க

"இந்தியா மீதான வரியை ரத்து செய்ய வேண்டும்" - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்; காரணம் என்ன?

இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால், இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத பரஸ்பர வரி, 25 சதவீத கூடுதல் வரி என மொத்தம் 50 சதவீத வரியும் தொடர்ந்த... மேலும் பார்க்க