செய்திகள் :

ஊட்டி: மூடப்பட்ட Hindustan Photo Films தொழிற்சாலையில் மண் திருட்டு; தொடரும் அத்துமீறல்; காரணம் என்ன?

post image

தென்னாசியாவின் முதல் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 1960-ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது. அரசுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை சுமார் 350 ஏக்கர் பரப்பளவுள்ள வனத்துறை நிலத்தில் இயங்கி வந்தது.

மண் திருட்டில் கைதானவர்கள்
மண் திருட்டில் கைதானவர்கள்

இந்தப் பிரமாண்ட தொழிற்சாலையில் 5,000க்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். மருத்துவத்திற்கான எக்ஸ்ரே ஃபிலிம் உற்பத்தியில் இந்த ஆலை சிறந்து விளங்கி வந்திருக்கிறது. புதிய பொருளாதாரக் கொள்கை, கலர் ஃபிலிம் தயாரிக்கும் தொழில்நுட்பமின்மை போன்ற பல காரணங்களால் படிப்படியாக நலிவடையத் தொடங்கி, 2018-ல் இந்தத் தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட்டது.

கைவிடப்பட்ட இந்தத் தொழிற்சாலை வளாகத்திற்குள் கடந்த சில ஆண்டுகளாக இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக உள்ளூர் மக்கள் கூறி வந்தனர். மேலும், ஃபிலிம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட அரிய உலோகங்களைத் தேடி இரவில் நுழையும் நபர்கள் மண்ணை மூட்டை மூட்டையாக அள்ளிக்கொண்டுச் செல்வதாகவும் புகார்கள் எழுந்தன.

வெள்ளி கலந்த மண்
வெள்ளி கலந்த மண்

இந்த நிலையில், வனத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் கடந்த ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் உலோகக் கலவை மண் திருட்டில் ஈடுபட்ட 7 நபர்களைக் கைது செய்தனர். கைது நடவடிக்கைகளுக்குப் பிறகும் தொடர்ந்து உலோக மண் திருட்டு நடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் நடைபெற்ற சோதனையில் மேலும் நேற்று முன்தினம் 7 நபர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், "வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை பகுதிக்குள் கடந்த 11-ம் தேதி இரவு அத்துமீறி நுழைந்து திருட்டுத்தனமாக மண் மற்றும் கற்களை உடைத்த குற்றத்திற்காக சுரேஷ், அப்பாஸ் அருண், பஷீர், சீனி, சிவகுமார், மணி உட்பட ஊட்டியைச் சேர்ந்த 7 நபர்களைக் கையும் களவுமாகக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.

மண் திருட்டில் கைதானவர்கள்
மண் திருட்டில் கைதானவர்கள்

இந்தத் தொழிற்சாலை ஆய்வகத்தில் பணியாற்றி வந்த முன்னாள் அதிகாரி மோகன்ராஜ் பேசுகையில், "வெள்ளிக் கட்டிகளில் நைட்ரேட் கலந்து சில்வர் நைட்ரேட்டாக மாற்றப்படும். ஃபிலிம் தயாரிப்பில் இந்தச் சேர்மம் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. ஆய்வகத்திலிருந்து வெளியேறும் கழிவில் தங்கம், வெள்ளி போன்றவை இருக்கும்.

பல சமயங்களில் மறுசுத்திகரிப்பு செய்து எடுத்துக் கொள்ளப்படும். அதிலும் மீதமான கழிவுகள் ஒரு இடத்தில் சேகரித்து வைக்கப்படும். அதை அறிந்த கும்பல்தான் தங்கம், வெள்ளி கலந்த மண்ணைத் திருடிச் சென்று அதிலிருந்து இந்த உலோகங்களைப் பிரித்தெடுக்கிறார்கள்" என்றார்.

சாத்தூர்: SI-யின் மனைவி தற்கொலையில் சந்தேகம்; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் அருண் (28). இவர் சாத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்த இளவரசியை மூன்று ஆண்டுகளு... மேலும் பார்க்க

`93 பேர் மட்டுமே வசிக்கும் மாஞ்சோலையில் 1,100 வாக்காளர்கள் பதிவேற்றம்?' - அலுவலர்களுக்கு நோட்டீஸ்

நெல்லை மாவட்டம், பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி சார்பில் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தேயிலை, காபி பயிர் செய்யப்பட்டுள்ளன. இந்தப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இந்த வ... மேலும் பார்க்க

``மதுக்கடை அடைக்கும் நேரம், அவசரத்தில்'' - ரயிலின் குறுக்கே டூவீலரில் பாய்ந்த இளைஞர்

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 8-ம் தேதி இரவு கன்னியாகுமரி விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் உச்சிப்புளி ரயில் நிலையத்தை கடக்க இருந்த நிலையில், அப்பகுதியில் ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலை... மேலும் பார்க்க

``திருமண ஆசைகாட்டி ரூ.2 கோடி பணம், தங்க நகை மோசடி'' - பெண் டி.எஸ்.பி மீது ஹோட்டல் அதிபர் புகார்

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள தண்டேவாடா என்ற இடத்தில் டி.எஸ்.பி.யாக உள்ளவர் கல்பனா சர்மா. இந்த பெண் போலீஸ் அதிகாரி ஹோட்டல் உரிமையாளரை திருமண ஆசைகாட்டி பணமோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ர... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி மகன் உயிரிழப்பு; துக்கம் தாங்காமல் உயிரை மாய்த்த தந்தை - ராமநாதபுரத்தில் சோகம்!

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீனவர் காலனியைச் சேர்ந்தவர் களஞ்சியம். இவர் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், வீட்டில் உள்ள மோட்டார் மின் சுவிட்சினை பழுது பார்த்து... மேலும் பார்க்க

ஈரோடு: காதல் திருமணம்; தங்கையைக் கடத்திச் சென்ற அக்கா உள்ளிட்ட 5 பேர் கைது - விவரம் என்ன?

ஈரோடு மாவட்டம், எண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் சேதுராஜ் (25). பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும், அந்தியூர் மேல்தெருவைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரும் கடந... மேலும் பார்க்க