செய்திகள் :

``மதுக்கடை அடைக்கும் நேரம், அவசரத்தில்'' - ரயிலின் குறுக்கே டூவீலரில் பாய்ந்த இளைஞர்

post image

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 8-ம் தேதி இரவு கன்னியாகுமரி விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் உச்சிப்புளி ரயில் நிலையத்தை கடக்க இருந்த நிலையில், அப்பகுதியில் ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உச்சிப்புளி ரயில் நிலையத்தின் 2-வது நடைமேடைக்கு பயணிகள் செல்லும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ரயில் முன் பாய்ந்த டூவீலர்
ரயில் முன் பாய்ந்த டூவீலர்

இந்த படிக்கட்டின் அருகிலேயே, படி ஏறிச் செல்ல முடியாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக தரைத்தள பாதை உள்ளது.

அந்தப் பாதையின் வழியாக டூவீலரில் வந்த ஒரு வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது கன்னியாகுமரி விரைவு ரயில் வேகமாக வந்தது. இதனை எதிர்பார்க்காத அந்த வாலிபர், ரயிலில் அடிபடாமல் இருக்க டூவீலரில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.

இதனால் தண்டவாளத்தில் கிடந்த டூவீலர் மீது மோதிய ரயில் எஞ்சின், அதை சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர், ரயிலின் குறுக்கே டூவீலரை போட்டுவிட்டு தப்பிய நபர் குறித்து ராமேஸ்வரம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர்.

ரயில் மோதியதில் டூவீலரின் நம்பர் பிளேட் நொறுங்கியதால், அதன் மூலம் டூவீலரின் உரிமையாளரை கண்டறிய முடியவில்லை.

ரயில் எஞ்சினில் சிக்கிய டூவீலர்
ரயில் எஞ்சினில் சிக்கிய டூவீலர்

இதையடுத்து, போலீஸார் டூவீலரின் எஞ்சின் எண்ணை கொண்டு விசாரணை நடத்தியதில், டூவீலரை ஓட்டி வந்தவர் உச்சிப்புளி அருகே உள்ள நாகாச்சி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பதும் தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீஸார் நடத்திய விசாரணையில், மதுக்கடை அடைக்கும் நேரம் நெருங்கிவிட்டதால் மது வாங்க தண்டவாளம் வழியாக வேகமாக செல்ல முயன்றதாக கலைச்செல்வன் கூறியுள்ளார்.

பின்னர், கலைச்செல்வன் ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

``திருமண ஆசைகாட்டி ரூ.2 கோடி பணம், தங்க நகை மோசடி'' - பெண் டி.எஸ்.பி மீது ஹோட்டல் அதிபர் புகார்

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள தண்டேவாடா என்ற இடத்தில் டி.எஸ்.பி.யாக உள்ளவர் கல்பனா சர்மா. இந்த பெண் போலீஸ் அதிகாரி ஹோட்டல் உரிமையாளரை திருமண ஆசைகாட்டி பணமோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ர... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி மகன் உயிரிழப்பு; துக்கம் தாங்காமல் உயிரை மாய்த்த தந்தை - ராமநாதபுரத்தில் சோகம்!

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீனவர் காலனியைச் சேர்ந்தவர் களஞ்சியம். இவர் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், வீட்டில் உள்ள மோட்டார் மின் சுவிட்சினை பழுது பார்த்து... மேலும் பார்க்க

ஈரோடு: காதல் திருமணம்; தங்கையைக் கடத்திச் சென்ற அக்கா உள்ளிட்ட 5 பேர் கைது - விவரம் என்ன?

ஈரோடு மாவட்டம், எண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் சேதுராஜ் (25). பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும், அந்தியூர் மேல்தெருவைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரும் கடந... மேலும் பார்க்க

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர்; பலியான பெண் - விசாரணையில் வெளிவந்த திடுக் உண்மைகள்!

உத்தரப்பிரதேசத்தில் வயிற்றுவலி காரணமாக கிளினிக்கில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவர் யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்ததில் அப்பெண் உயிரிழந்தார்.இந்த சம்பவத்தில், அந்த மருத்துவர்கள் போலி மருத... மேலும் பார்க்க

பொள்ளாச்சியில் அச்சடித்து பொன்னானியில் சப்ளை; 10 லட்சம் பேருக்கு போலி சான்றிதழ் விற்ற மோசடி கும்பல்

கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், பொன்னானி பகுதியில் நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் உள்ள போலி சான்றிதழ்கள் தயாரித்து வழங்கப்படுவதாக போலீஸ் எஸ்.பி-க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில்... மேலும் பார்க்க

காதலனிடம் தப்பிக்க கார் ஓட்டுநர் மீது புகார் அளித்த நர்சிங் மாணவி - பெங்களூருவில் அதிர்ச்சி

பெங்களூருவில் கல்லூரி மாணவி ஒருவர், தனது கழுத்தில் இருந்த காயங்களை மறைப்பதற்காக, காதலனிடம் பொய் கூறியதுடன், கார் ஓட்டுநர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத... மேலும் பார்க்க